பயனர் பேச்சு:Rahuljeswin

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Rahuljeswin, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- நந்தகுமார் 17:56, 14 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

பூவன்குறிச்சி[தொகு]

உங்கள் குக்கிராமம் பற்றிய கட்டுரைக்கு நன்றி. சில திருத்தங்கள் செய்திருக்கிறேன். மிருகங்கள், பறவைகள் பற்றிய பட்டியலைத் தவிர்க்கலாம். இவை அனைத்து கிராமங்களிலும் உள்ள மிருகங்களே. உங்கள் கிராமத்துக்கெனக் குறிப்பிடக்கூடியவைகளை (அயல் கிராமங்களில் இல்லாதவை) தாருங்கள். மேலும், நீங்கள் எழுதிய ஆங்கில விக்கிக் கட்டுரைசில் சில திருத்தங்கள் செய்திருக்கிறேன். அவற்றை நீக்காதீர்கள். பொதுவாக ஆங்கில விக்கியில் கட்டுரை எழுதும் போது தமிழ்ச் சொற்களை முற்றாகத் தவிருங்கள். தலைப்பை ஒட்டிய சொல் மட்டுமே தமிழில் தரலாம். ஏனையவை தேவையற்றவை. வேறு ஆங்கிலக் கட்டுரைகளைக் கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 09:53, 6 செப்டம்பர் 2015 (UTC)

கட்டுரையுடன் தொடர்பற்ற தகவல்களை சேர்க்காதீர்கள். திருநெல்வேலி கட்டுரையில் பூவன்குறிச்சி பற்றிய தகவல்களையோ அல்லது படிமங்களையோ இணைக்காதீர்கள்.--Kanags \உரையாடுக 09:17, 28 செப்டம்பர் 2015 (UTC)
வணக்கம், கட்டுரையுடன் தொடர்பற்ற படிமங்களைக் கட்டுரைகளில் இணைக்காதீர்கள். பூவன்குறிச்சி கட்டுரையில் எதற்காக சிவசைலம் தொடர்பான படிமம்?--Kanags \உரையாடுக 06:23, 4 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

ஆதாரமற்ற தகவல்கள்[தொகு]

ஆதாரமற்ற தகவல்களைக் கட்டுரைகளில் சேர்க்காதீர்கள். தொல்காப்பியம் கட்டுரையில் நீங்கள் செய்த மாற்றம் மீள்விக்கப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 22:20, 4 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

கட்டுரைகளில் மிகைப்படுத்திய தகவல்களைச் சேர்க்க வேண்டாம். எ.கா: "கம்பீரமாக மலை". மேலும் தேவைக்கு அதிகமாக படங்களைச் சேர்க்க வேண்டாம். இது ஒரு கலைக்களஞ்சியம், படக்கோவை அல்ல. --AntanO 02:35, 5 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

படங்கள்[தொகு]

படங்களினால் கட்டுரைகளை நிரப்ப வேண்டாம். தேவையான ஓரிரண்டு படங்கள் போதும். குறுங்கட்டுரைக்கு அதிக படங்கள் தேவையில்லை. பொதுவக இணைப்பைக் கொடுத்தால் போதுமானது. இது ஒரு கலைக்களஞ்சியம், படக்கோவை அல்ல. --AntanO 14:15, 22 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

அறிவுரைகளைக் கேளாது தொடர்ந்தும் படங்களை இணைப்பீர்கள் என்றால் நீங்கள் தடை செய்யப்படலாம். நன்றி. --AntanO 16:38, 22 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

தடை[தொகு]

Stop icon with clock
அறிவுறுத்தப்பட்டடும் தேவையற்று படங்களை அதிகம் படங்களை மீண்டும் மீண்டும் இணைத்ததாலும், விடுக்கப்பட்ட அறிவுரைகளுக்கு ஏற்ப செயற்படாததாலும், பராமரிப்பு வார்ப்புருக்களை நீக்கியதாலும் தடை செய்யப்பட்டுள்ளீர்கள். தொடர்ந்தும் இவ்வாறு செய்தால் நீண்ட தடைக்கு அல்லது முடிவிலித் தடைக்கு நீங்கள் உள்ளாகலாம். ஒரு மாதத்தில் தடை நீங்கியதும் பயனுள்ள பங்களிப்பினைச் செய்ய அழைக்கப்படுகிறீர்கள். இது இரண்டாவது தடை என்பது குறிப்பிடத்தக்கது.

--AntanO 16:55, 22 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

செய்திக் கட்டுரை[தொகு]

செய்திக் கட்டுரை எழுதும் போது தரப்படும் ஒவ்வொரு தகவலுக்கும் மேற்கோள்கள் காட்டப்பட வேண்டும். 2015 சென்னை பேரழிவு கட்டுரையில் மேற்கோள்கள் தரப்படாவிடில் நீக்கப்படும்.--Kanags \உரையாடுக 09:47, 8 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

கலைக்களஞ்சியக் கட்டுரை[தொகு]

வணக்கம், Rahuljeswin!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


வெள்ளம் பொதுவானது. குறிப்பிடத்தக்க உயிர், உடமை இழப்பு ஏற்பட்டிருந்தால் மட்டும் கட்டுரையினை உருவாக்குங்கள். விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை இல்லாத கட்டுரைகள் நீக்கப்படும். நன்றி. --AntanO 09:06, 12 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
1993 மதுரையில் வெள்ளத்தினால் ஏற்பட்ட இழப்புக்கள் எவை எனக் குறிப்பிடுகிறீர்ளா? --AntanO 09:09, 12 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
1993ஆம் ஆண்டு டிசம்பர் 1-4 நாட்களில் புயல் காரணமாக வைகையணை, சாத்தையாறு அணை உள்ளிட்டவை நிரம்பி வைகை ஆற்றில் ஒரு இலட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. செல்லூர் கண்மாய் உள்ளிட்ட பல கண்மாய்கள் உடைந்தன. மதுரையின் வைகை வடகரைப் பகுதி முழுகியது. அரசு இராசாசி மருத்துவமனை, அமெரிக்கன் கல்லூரி உள்ளிட்டவற்றில் நீர் புகுந்தது. உடைமைச் சேதங்களோடு பல உயிரிழப்புகளும் ஏற்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக செல்லூர் பகுதியில் 12,000க்கும் மேற்பட்ட தறிகளை வைத்து நடந்து வந்த தறிநெசவுத் தொழிலுக்கு மீண்டெழவே முடியாதபடி இந்த வெள்ளமே சாவுமணி அடித்தது. இதனை நினைவுறுத்தும் செய்திக்கட்டுரைகள். [1], [2], [3].

பரிந்துரை...[தொகு]

வெள்ளங்கள் குறித்து நீங்கள் எழுதிவரும் கட்டுரைகள் முக்கியமானவை. இக்கட்டுரைகளின் வடிவமைப்பினை முன்னேற்றம் செய்தால், சிறப்பாக இருக்கும். தாமிரபரணி வெள்ளம் குறித்த கட்டுரையினை என்னால் இயன்றளவு சீர்ப்படுத்தி, உங்களுக்குத் தெரிவிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:14, 12 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

ராகுல், 1992 தாமிரபரணி ஆற்று வெள்ளம் எனும் கட்டுரையை இப்போது பாருங்கள். அப்படியே மொழிபெயர்க்காது, தகவல்களை உள்வாங்கி சொந்த உரைநடையில் எழுதுங்கள்; வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:22, 13 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
விக்கிக்கு கட்டுரைகள் எழுதுவது கண்டு மகிழ்ந்து அளிக்கிறேன். மேலும் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள்.  மாதவன்  ( பேச்சு  ) 10:41, 27 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

வேண்டுகோள்[தொகு]

இருதயாலீஸ்வரர் கோவில் - இந்தக் கட்டுரையில் சான்று (மேற்கோள்) ஒன்றினை உடனடியாக சேருங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:59, 27 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Rahuljeswin&oldid=3184666" இலிருந்து மீள்விக்கப்பட்டது