கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருண் செல்வகுமார் சே(ARUN SELVAKUMAR S), ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் புதிய நண்பன், சொற்பாவை உள்ளிட்ட நூல்களை எழுதியவர். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் முதுகலைத் தமிழ் பட்டத்திற்கான தங்கப் பதக்கத்தினைப் பெற்றவர்.
அருண் செல்வகுமார் சே(ARUN SELVAKUMAR S), திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த முதுகலைத்தமிழ் பட்டதாரி. 2020 முதல் விக்கிப்பீடியாவில் தமிழ், ஆங்கிலம் முதலிய மொழிகளில் பங்களித்து வருகிறார். இதுவரை தமிழில் 2 புதிய கட்டுரைகளைத் தொடங்கியுள்ளார். தமிழ் விக்கிமூலத்தில் 50க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களுக்கு மெய்ப்புப் பணி பார்த்துள்ளார். விக்கிப்பீடியா மற்றும் விக்கிமூலத்தில் உள்ள பக்கங்களை அவ்வப்போது மெய்ப்புப் பணி செய்துவருகிறார். தமிழ்க் கணிமையில் ஆர்வமுடைய இவர் தமிழ்-99 விசைப்பலகையைப் பயன்படுத்தி செந்தமிழ் எழுத்துருக்களை தட்டச்சு செய்வதற்கு XML கோப்புகளை உருவாக்கி உள்ளார்.
இன்று ஞாயிறு, சூன் 16 of 2024, விக்கிப்பீடியாவில் 1,65,957 கட்டுரைகளும்: 2,33,615 பயனர்களும் உள்ளனர்.