நெய்க் குப்பை சுந்தரேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெய்க் குப்பை சுந்தரேசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் நெய்க் குப்பை என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி[தொகு]

இங்குள்ள மூலவர் சுந்தரேசுவரர் ஆவார். இறைவி சௌந்குதரநாயகி.[1]

சிறப்பு[தொகு]

ஆவணி 19, 20, 21 ஆகிய நாள்களில் லிங்கத்திருமேனியின் மீது சூரிய வெளிச்சம் விழுவது இக்கோயிலின் சிறப்பாகும். மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், கார்த்திகை போன்றவை இக்கோயிலில் சிறப்பான விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. பாம்புப்புற்றுடன் கூடிய புன்னாக வரதன் சன்னதி இங்கு அமைந்துள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]