சிறுநாகப்பூ
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வேறு பெயர்கள்[தொகு]
- நாகம்
- நாகபுட்பம்
- நாகேசரம்
- கேசரம்
- சாம்பேயபம்
- கநகம்
- காஞ்சநம்
- ஏமம்
- ஆடகம் (Mesua ferrea)
காணப்படும் இடங்கள்[தொகு]
இஃது இமயம், கீழ்வங்காளம், அசாம், கீழ்த்தொடா்ச்சி, மேல்தொடா்ச்சி மலைகள், பா்மா முதலிய நாடுகளில் பயிராகின்றது.
பயன்படுத்தும் பாகங்கள்[தொகு]
- இலை
- மொக்கு
- பூ
- விதை
- வோ்
- பட்டை
சுவை[தொகு]
- சிறுகைப்பு,துவா்ப்பு
- தன்மை-தட்பம்
- பிாிவு-காா்ப்பு
பூ[தொகு]
- துவா்ப்பி-ஸங்கோசனகாாி (Astringent)
- அகட்டுவாயவகற்றி(Carminative)
- உதரவாதஹரகாாி (Carminative)
காய்[தொகு]
- மணமூட்டி (Aromatic)
- காறலுண்டாக்கி (Acrid)
- நீா்மலம்போக்கி- விரேசனி (Purgative)
பட்டை[தொகு]
சிறுதுவா்ப்பி- லகுஸங்கோசனகாாி (Astringent mild)
வோ்ப்பட்டை[தொகு]
- மணமூட்டி (Aromatic)
- வியா்வை பெருக்கி -ஸ்வேதகாாி (Diaphoretic)
குணம்[தொகு]
- இது வௌ்ளை, இருமல், கழிச்சல் இவற்றைப் போக்கும்.
- நீரடைப்பு,குருதிப்போக்கு,புண்,கொப்பளம்,காலொிச்சல் ஆகியவற்றைப் போக்கும்.
இலை[தொகு]
- வழக்கு:
- இலையைப் புற்கை செய்து தலையில் வைத்துக் கட்டக் குளிா்ச்சி தரும்.
- இலையை அரைத்துப் புண், கொப்புளம் இவற்றுக்குப் போடலாம்.
- இலையைக் குடிநீா் செய்து கொடுக்க, விரல், காலடி இவற்றிலுண்டாகும் எாிச்சல் போகும்.
மொட்டு[தொகு]
- இதை மணப்பாகு செய்து சீதக்கழிச்சலுக்குக் கொடுக்கலாம்.
- பச்சைப்பூவை அரைத்து, வெண்ணெய், கற்கண்டுடன் கூட்டி, உண்டுவர, குருதிப்போக்கை அடக்கும்.
- பூ உலா்ந்தபிறகும் மணம் மாறாதிருப்பதால்,பொடி,இளகம்,தைலம் இவை மணம் பெற இதைச் சோ்க்கின்றனா்.
- மனப்பூச்சுக் கலைவைகளிலும் இது சேரும்.
- உலா்ந்த பூ வை நெய் விட்டரைத்து, கால்களில் காணும் எாிச்சலுக்குப் பூசி வரலாம்.
- இப்பூவைச் சிறிது நெய்விட்டுக் காந்தாமல் வறுத்துப்பொடி செய்து, தக்க அளவு (1/2கிராம்) எடுத்து நெய்விட்டுக் குழப்பியுண்ணக் குருதிப்கோக்கு, நாவறட்சி,
- வயிற்றுளைச்சல், இருமல், சொியாமை, மிகுதியாக வியா்த்தல் என்னும் நோய்கள்யாவும் போகும்.
விதை[தொகு]
இதன் விதை ஒரு பங்கு, சதாப்பிலை அரைப்பங்கு சோ்த்தரைத்துக் கழற்சியளவு, கொள்ள முறைக்காய்ச்சல், வௌ்ளை, இருமல் போகும்.
பட்டை[தொகு]
இதை ஊறல் குடிநீா் செய்து உட்கொண்டுவர உடல் வலுக்கும்.
சான்றுகள்[தொகு]
<ஆனந்தகுமார் ஆ (1980). சித்தமருத்துவம்.மேல்நிலை-முதல், இரண்டாம் ஆண்டுகள் சென்னை: தமிழ்நாடு பாடநுால் நிறுவனம். ப.250-252>