க. இராமச்சந்திரா
க. இராமச்சந்திரா (இறப்பு: ஏப்ரல் 26, 1976) ஈழத்துத் தமிழறிஞர். தமிழிலும், ஆங்கிலத்திலும் ஏராளமான கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியவர். தமிழில் செய்யுள்கள் பலவற்றை இயற்றியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
இராமச்சந்திரா யாழ்ப்பாணம், நயினாதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கதிரேசுவின் புதல்வர். பிற்காலத்தில் கொழும்பில் வாழ்ந்தார். இலங்கை அரசாங்கத் தொடருந்து சேவைப் பகுதியில் உயரதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
பத்திரிகாசிரியர்[தொகு]
Religious Digest என்ற ஆங்கில சமய இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆத்மஜோதி ஆன்மிக இதழின் கௌரவ ஆசிரியராகவும் இவர் சேவையாற்றினார்.
சமூகப் பணி[தொகு]
கொழும்பில் அரசப் பணியாளர்களிடையே சமய நிகழ்ச்சிகளை நடத்தினார். இரமண மகரிசியைத் தமது குருவாகக் கொண்டார். "ரமணசரணானந்தன்" என்று அழைக்கப்பட்டார். உலக சைவ மாநாடுகள் பலவற்றில் கலந்து கொண்டார்.
எழுதிய நூல்கள்[தொகு]
- பகவான் சிறீ இரமண மகரிஷிகளின் அவதார மகிமையும், சன்னிதானப் பெருமையும் (1942)
- ரமணத்தியானம்
- ரமண ஸ்தோத்திர மஞ்சரி
- ஆதி சங்கரரின் அவதார மகிமையும், அவர் காட்டிய அருள் நெறியும்
- அன்னை கிருஷ்ணாபாய்
- பெரியார் தோத்திர மஞ்சரி (1948)
- பெரியார் அர்ச்சனமாலை
- சமரச ஞானக்கோவை
- உதிர்ந்த மலர்கள்
- முருகன் புகழ்மாலை
- கதிர்காமப் பதிகம் (1961)
- செல்வச் சந்நிதிப் பதிகம்
- Hinduism in a Nutshell
- In the Company of Saints
- Religions of the Tamils - Past and Present
- The message of Saint Thayumanavar
- Astrology as a Science - A Challenge to Church and Scientists
மேற்கோள்கள்[தொகு]
- பூலோகசிங்கம், பொ., இந்துக்கலைக் களஞ்சியம், பகுதி 1, 1990, கொழும்பு