உள்ளடக்கத்துக்குச் செல்

கருநாகப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருநாகப்பள்ளி என்னும் நகரம், கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது. இது ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கருநாகப்பள்ளி வட்டத்திற்கு உட்பட்டது. இது 211.9 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

கேரளத்தில் பள்ளி என்று அழைக்கப்பட்ட ஊர்கள் ஜைன (சமண) மதத்தைச் சார்ந்தவையாக இருந்தன. மைனாகப்பள்ளி, கார்த்திகைப்பள்ளி உள்ளிட்ட ஊர்களும் முற்காலத்தில் ஜைன சமய கோயில்களைக் கொண்டிருந்ததாகக் கருதுகின்றனர்.

முற்காலத்தில் ஆய் அரசரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.

கருநாகப்பள்ளியில் படைநாயர்குளங்கரை மகாதேவர் கோயில் அமைந்துள்ளது. இங்கு பண்டாரத்துருத்து கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இதை போர்த்துகீசர் நிறுவியதாகக் கருதுகின்றனர்.

மக்கள் தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கருநாகப்பள்ளி நகராட்சியில் 25,336 மக்கள் வசித்தனர். இதில் 12,219 ஆண்கள் மற்றும் 13,117 பேர் பெண்கள் ஆவர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Karunagappalli Population - Census 2011". census2011.co.in. Census India. பார்க்கப்பட்ட நாள் 9 January 2016.


வெளி இணைப்புகள்[தொகு]

சுற்றுப்புறம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருநாகப்பள்ளி&oldid=3995535" இலிருந்து மீள்விக்கப்பட்டது