இராம வர்மா பரிக்சித் தம்புரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தர்சனகலாநிதி பரிக்சித் தம்புரான் (Darsanakalanidhi Parikshith Thampuran) (இறப்பு: 1964)கொச்சி சுதேச அரசின் கடைசி அதிகாரப்பூர்வ ஆட்சியாளராக இருந்தார். [1] சூலை 1, 1949 இல், திருவிதாங்கூரும் கொச்சியும் இணைந்து திருவிதாங்கூர்-கொச்சின் மாநிலம் உருவானது. இராச்சியத்தின் ஆட்சியும் முடிவுக்கு வந்தது. இவர் ஒரு வருட காலத்திற்கு இராச்சியத்தை ஆட்சி செய்தார். பின்னர் இவர் கொச்சியின் வல்லிய தம்புரானாக தொடர்ந்தார்.

தம்புரான் சிறந்த சமசுகிருத அறிஞராக இருந்தர். [2] இவர் பிரகலாதசரிதா போன்ற பல சமசுகிருத காவ்யத்தையும் எழுதினார். இவர் நியாயம் மீது நம்பிக்கைக் கொண்டவர். மேலும், பல இலக்கிய படைப்புகளுக்கு வர்ணனைகளையும் எழுதியதைத் தவிர, அசல் சமசுகிருத படைப்புகளையும் இயற்றியுள்ளார்.

சுயசரிதை[தொகு]

இவர் இராமவர்மன் அல்லது குஞ்சுன்னி தம்புரான் என்றும் அழைக்கப்பட்டார். 1876 ஆம் ஆண்டில் ஓட்டூர் மாளிகையின் இராமன் நம்புதிரி மற்றும் மங்கு தம்புராட்டியின் மகனாகப் பிறந்தார்.திருச்சூர் இட்டியானாத் குடும்ப வில்லாடத்தைச் சேர்ந்த இட்டியானாத் மாதத்தில் மாதவி என்பவரை மணந்தார்.

இறப்பு[தொகு]

இவர் 1964 இல் திருப்பூணித்துறையில் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]