அர்மோகிந்தர் சிங் சாத்தா
அர்மோகிந்தர் சிங் சாத்தா (Harmohinder Singh Chatha) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அரியானா சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் [1] [2] அரியானா அரசாங்கத்தில் நிதி, விவசாயம், தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். [3]
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
அர்மோகிந்தர் சிங் சாத்தா ஏப்ரல் 1, 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதியன்று பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள பலியா நகரத்தில் பிறந்தார். அரியானா மாநிலத்தின் கர்னல் நகரிலுள்ள தயால் சிங் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். [4]
தொழில்[தொகு]
1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் தேதியன்று தான் இடம்பெற்றிருந்த சமூகத்தின் உறுப்பினர் பதவியை விட்டு விலகினார். இவருக்குப் பிறகு சவுத்ரி சரூப் சிங் மாநில அமைச்சராகப் பதவியேற்றார். [5] 2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதியன்று அரியானா மாநில சட்டமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். [6] காங்கிரசு கட்சியின் உறுப்பினராக செயல்பட்ட இவர் மூன்று முறை சபாநாயகராகப் பணியாற்றினார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Sharma, Navneet (2009-10-28). "Chatha elected as Haryana Assembly Speaker for third time" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-29.
- ↑ The Journal of Parliamentary Information (in ஆங்கிலம்). 2010.
- ↑ DARE/ICAR Annual Report (in ஆங்கிலம்). 2009.
- ↑ "Haryana Vidhan Sabha WHO'S WHO 1987" (PDF).
- ↑ Committees ... (a Review) (in ஆங்கிலம்). Haryana Vidhan Sabha Secretariat. 1972.
- ↑ The Journal of Parliamentary Information (in ஆங்கிலம்). Lok Sabha Secretariat. 2010.