அரசினர் கலைக் கல்லூரி, மேலூர்
வகை | அரசினர் கலைக்கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1969 |
முதல்வர் | டி. ஞானசீலன் |
மாணவர்கள் | 2500 |
அமைவிடம் | , , |
இணையதளம் | www.melurgac.com |
அரசு கலைக்கல்லூரி, மேலூர் (Government Arts College, Melur) என்பது இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் மேலூரில் செயல்பட்டுவரும் அரசினர் கலைக்கல்லூரியாகும். 1969ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி தற்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[1] இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் கற்றுத் தரப்படும் இக்கல்லூரியில் ஏறத்தாழ 2500 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆவர்.
வழங்கும் படிப்புகள்[தொகு]
இக்கல்லூரியில் தற்போது 11 இளநிலைப் பட்டப் படிப்புகளும், 10 முதுநிலைப் பட்டப் படிப்புகளும், 3 ஆராய்ச்சி படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
இளநிலைப் படிப்புகள்[தொகு]
- வரலாறு
- தமிழ்
- ஆங்கிலம்
- பொருளியல்
- வணிகவியல்
- கணிதம்
- இயற்பியல்
- வேதியியல்
- கணினி அறிவியல்
- தாவரவியல்
- விலங்கியல்
முதுநிலைப் படிப்புகள்[தொகு]
- வரலாறு
- தமிழ்
- ஆங்கிலம்
- பொருளியல்
- வணிகவியல்
- கணிதம்
- இயற்பியல்
- கணினி அறிவியல்
- தாவரவியல்
- விலங்கியல்