உள்ளடக்கத்துக்குச் செல்

உசா தோரட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உசா தோரட் (Usha Thorat 20 பிப்பிரவரி 1950) என்பவர் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராகப் பணியில் இருந்த பெண்மணி ஆவார். 2005 நவம்பர் 10 முதல் 2010 நவம்பர் 8 வரை இப்பதவியில் இருந்தார். இதற்கு முன் ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர் என்ற பதவியில் இருந்தார்.[1]

வாழ்க்கைக் குறிப்புகள்[தொகு]

சென்னையில் பிறந்த உசா தோரட் புது தில்லி லேடி சிறி ராம் பெண்கள் கல்லூரியிலும், தில்லி பொருளியல் கல்லூரியிலும் படித்தார்.[2]

வகித்த பதவிகள்[தொகு]

  • 2005 முதல் 2009 வரை டெப்பாசிட்  அண்டு இன்சூரன்சு கேரன்டி  கார்பொரேசன் தலைவர்.[3]
  • 2005 முதல் 2009 வரை நபார்ட் அமைப்பின் இயக்குநர்.
  • 2012 சனவரி  வரை மங்களூர் ரிபைனரி அண்டு பெட்ரோகெமிக்கல்ஸ் குழுமத்தின் இயக்குநர்.
  • செபி என்ற நிறுவனத்தில் உறுப்பினர்.
  • சூழலியல் பாதுகாப்பு பவுண்டேசன் என்ற அமைப்பின் ஆளுநர்கள் குழுவில் உறுப்பினர்.
  • சூன் 2011 முதல் பிப்பிரவரி 2012 வரை ஓ. என். ஜி. சி. நிறுவனத்தில் கூடுதல் இயக்குநர்.
  • சனோபி இந்தியா என்ற குழுமத்தின் 30 எப்பிரல்  2016 முதல் இயக்குநர்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உசா_தோரட்&oldid=3354570" இலிருந்து மீள்விக்கப்பட்டது