தோற்றப்பாட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோற்றப்பாட்டியல் என்பது ஒரு மெய்யியல் இயக்கத்தைக் குறிக்கும். இது எட்மண்ட் குசேர்ல் என்பவர் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் இதனை உருவாக்கினார். பின்னர், செருமனியில் உள்ள கொட்டிஞென், மியூனிச் ஆகிய பல்கலைக்கழகங்களில், அவரும் அவரைப் பின்பற்றியவர்களும் இதை விரிவாக்கி வளர்த்தனர். இவ்வியக்கம் பின்னர் பிரான்சு, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் பிற இடங்களுக்கும் பரவியது.


குசேர்லின் கருத்தாக்கத்தில், தோற்றப்பாட்டியல், முக்கியமாக உணர்வுநிலை அமைப்புக்கள் தொடர்பான முறைப்படியான எண்ண வெளிப்பாடு அதன் பகுப்பாய்வு என்பவற்றுடன் உணர்வுநிலைச் செயற்பாடுகளின்போது தோன்றும் தோற்றப்பாடுகளையும் கருத்தில் கொள்கிறது. தோற்றப்பாட்டியல், அறிவியல் அறிவையும் உள்ளடக்கிய மனித அறிவுக்கு உறுதியான அடிப்படியாக அமையக்கூடும் என்றும், அது மெய்யியலை ஒரு தீவிரமான அறிவியலாக நிலைப்படுத்தும் என்றும் குசேர்ல் நம்பினார்.


குசேர்லின் கருத்தாக்கத்தை அடிப்படையாகக்கொண்டு தோற்றப்பாட்டியல், அவரால் மட்டுமன்றி அவரது மாணவர்களான எடித் இசுட்டெயின் (Edith Stein), மார்ட்டின் எய்டெகர் (Martin Heidegger) என்போராலும், மக்சு இசுக்கெலர் (Paul Ricoeur), நிக்கொலாய் கார்ட்மான் (Nicolai Hartmann), மோரிசு மேர்லெயு-பொன்டி (Maurice Merleau-Ponty), யேன்-பவுல் சார்ட்ரே (Jean-Paul Sartre) போன்ற இருப்பியல்வாதிகளாலும், மெய்யியலாளர்களான பவுல் ரிக்கோயர் (Paul Ricoeur), எம்மானுவேல் லெவினாசு (Emmanuel Levinas) சமூகவியலாளர்கள் ஆல்பிரட் சுட்சு (Alfred Schütz), எரிக் வொயெகெலின் (Eric Voegelin) போன்றோராலும் வளர்த்தெடுக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோற்றப்பாட்டியல்&oldid=1777609" இலிருந்து மீள்விக்கப்பட்டது