விடத்தல்பளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விடத்தல்பளை, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த ஓர் ஊர்.[1] இவ்வூர் நாவற்குழி-காரைதீவு-மன்னார் நெடுஞ்சாலையை அண்டி நாவற்குழியில் இருந்து ஏறத்தாழ 7.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து இதன் தொலைவு ஏறத்தாழ 16 கிலோமீட்டர். விடத்தல்பளையைச் சுற்றிலும், கரம்பகம், கெற்பேலி ஆகிய ஊர்கள் அமைந்துள்ளன.

நிறுவனங்கள்[தொகு]

விடத்தல்பளையில் கமலாசனி வித்தியாலயம் என்னும் பாடசாலை உள்ளது.[2] இப்பாடசாலையில் முதலாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரையில் கற்பிக்கப்படுகிறது. இவ்வூரில் அலங்கார வேலாயுத சுவாமி கோயில் என்னும் கோயில் உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 33.
  2. School Net – Sri Lanka[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Department of Hindu Religious and Cultural Affairs" (PDF). Archived from the original (PDF) on 2013-02-28. பார்க்கப்பட்ட நாள் 2015-10-24.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விடத்தல்பளை&oldid=3571604" இலிருந்து மீள்விக்கப்பட்டது