பாலாமணி அம்மையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாலாமணியம்மா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாலாமணி அம்மையார்
பாலாமணி அம்மையார்
பிறப்புகும்பகோணம், இந்தியா
இறப்புமதுரை, இந்தியா
பணிநாடக நடிகை
அறியப்படுவதுநாடக நடிகை

பாலாமணி அம்மையார் 19-ஆம், 20-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பழம்பெரும் நாடக நடிகை ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிறந்து, வளர்ந்தவர் ராஜாமணி. முறையாக பரத நாட்டியம், இசை, நாடகம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். 1887 முதல் 1895 வரை ஐம்பதிற்கும் மேற்பட்ட இளம் பெண்களுக்கு இக்கலைகளைக் கற்றுவித்து அரங்கேற்றினார்.[1]

முதல் நாடகக் கம்பெனி[தொகு]

முதன் முதலில் கும்பகோணத்தில் எழுபது பெண்களைக் கொண்டு நாடகக் கம்பெனி நடத்தினார். பெட்ரோமாக்ஸ் விளக்கு இவர் நாடகங்களில்தான் முதன் முதலாக அறிமுகமானது. இவரது கம்பனியின் ஆசிரியர் எம். கந்தசாமி முதலியார் (எம். கே. ராதாவின் தந்தையார்).[1] நகைச்சுவை நடிகர் சி. எஸ். சாமண்ணா கம்பனியின் நிர்வாகியாகவும், நடிகராகவும் இருந்தார்.[1] நாடகங்களின் மூலம் கிடைத்த பொருளை கோயில் திருப்பணிகளையும், ஏழைகளுக்குத் திருமணங்களும் நடத்தினார். கும்பகோணம் கும்பேசுவரர் கோயில் கல்வெட்டில் இவரது பெயர் உள்ளது.[1]

நாடகங்கள்[தொகு]

மனோகரா, தாரரச சாங்கம் போன்ற நாடகங்கள் இவர் கம்பெனியில் நடத்தப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மிகச் செல்வாக்கோடு இவர் நாடகக் கம்பெனி விளங்கியது. இவர் கதாநாயகியாக நடித்த டம்பாச்சாரி என்ற நாடகம் மாதக் கணக்கில் நடைபெற்றது.[1]

இறுதி வாழ்க்கை[தொகு]

இறுதிக் காலத்தில் ராஜாமணி அம்மாள் நோய்வாய்ப்பட்டார். நாடகங்களும் நிறுத்தப்பட்டு, பொருட்களை விற்று உள்ளூர் தனவந்தர்களிடம் வாங்கிய கடன்களை அடைத்தார். ஏமாற்றத்துடன் கும்பகோணத்தை விட்டு மதுரை வந்து இருக்க இடமில்லாமல், குடிசை ஒன்றில் தனது 62-ஆவது அகவையில் காலமானார். இதனைக் கேள்வியுற்ற சி. எஸ். சாமண்ணா நிதி சேகரித்து இறுதிக் கிரியைகளை செய்தார்.[1]

பாலாமணி அம்மையாரின் கலைச் சேவையைப் பாராட்டி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் அவரது உருவப்படத்தைத் திறந்து வைத்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 வெங்கட்ராமன், சட்டாம் பிள்ளை. அறந்தை மணியன். ed. தமிழ் நாடகக் கலைமணிகள். சென்னை: விஜயலட்சுமி பப்ளிசர்சு. பக். 63-67. 
  • தமிழ் இலக்கிய வரலாறு, வெங்கடராமன், கா. கோ, கலையக வெளியீடு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலாமணி_அம்மையார்&oldid=3441904" இலிருந்து மீள்விக்கப்பட்டது