நிக்கோபாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாட்டின், திருப்பெரும்புதூரில் கூண்டில் வளர்க்கப்படும் நிக்கோபாரி பெட்டையும், சேவலும்

நிக்கோபாரி என்பது இந்திய நாட்டுக்கோழி இனங்களில் ஒன்றாகும்.[1] இந்தக் கோழிகள் நிக்கோபார், அந்தமான் தீவினை பூர்வீகத்தினை கொண்டதாகும்.[2] இந்தக் கோழிகள் கடக்நாத் போல கருமையான இறகுகளை உடையன; எனினும் முகம் சிவந்தும், சதை நாட்டுக் கோழிகளைப் போலவும் இருக்கின்றன.

இந்த நிக்கோபாரி இனங்கள் அதிக முட்டை இடுகின்ற திறனைக் கொண்டதாகும். இவை ஏறக்குறைய 140 முதல் 160 முட்டைகள் வரை இடும் என்று கூறப்படுகின்றன. இதனால் நாட்டுக் கோழி இனங்களிலேயே அதிக முட்டை இடுகின்ற கோழியாக கோழி வளர்ப்பாளர்களால் கருதப்படுகிறது.

காட்சியகம்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "பெண்களுக்கான வேலைவாய்ப்பு". Maalaimalar.
  2. "The Hindu : Nicobari fowl: pride of the Andamans". www.thehindu.com.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கோபாரி&oldid=3460851" இலிருந்து மீள்விக்கப்பட்டது