தேவி மகாத்மியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவி துர்கை எருமைத் தலையன் மகிசாசூரனை சூலத்தால் கொல்லும் 9ஆம் நூற்றாண்டின் சிற்பம், காஷ்மீர், இந்தியா

.

தேவி துர்கை எருமைத் தலையன் மகிசாசூரனை சூலத்தால் கொல்லும் 13ஆம் நூற்றாண்டின் சிற்பம், கர்நாடகா, இந்தியா

.

தேவி மகாத்மியம் (Devi Mahatmyam), இதனை துர்காசப்தசதீ (Durgā Saptashatī) (दुर्गासप्तशती) அல்லது சண்டி பாடம் (चण्डीपाठः) என்றும் அழைப்பர். [1] தேவியின் மகிமைகளை எடுத்துக் கூறும் தேவி மகாத்மியம் நூல் 13 அத்தியாயங்கள், 700 செய்யுட்களுடன் கூடியது. கொண்டது. [2][1] தேவி உபாசகர்களுக்கு, தேவி பாகவத புராணம் மற்றும் தேவி உபநிடதங்களுடன், தேவி மகாத்மியம் நூலும் மிக முக்கியமானதாக உள்ளது.[3][4] [5]


தேவி மகாத்மியம் நூல், தேவியானவள் துர்கை, சண்டி போன்ற பல வடிவங்கள் எடுத்து மகிசாசூரன் போன்ற கோரமான தீய அரக்கர்களை போரில் வீழ்த்தும் கதைகளை கூறுகிறது. [6][7][8] அமைதிக் காலங்களில் தேவி இலக்குமியாகவும், சரசுவதியாகவும் காட்சியளிக்கிறாள்.[9]

தேவி மகாத்மியம் நூல், இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ஒரிசா, அசாம் போன்ற மாநிலங்களிலும் மற்றும் நேபாளத்திலும் பிரபலமாக உள்ளது.[10] துர்கா பூஜையின் போது தேவி மகாத்மிய நூலின் சுலோகங்கள் துர்கை கோயில்களில் பாடப்படுகிறது.[11].[12][13]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Devi Mahatmya
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

கூடுதல் வாசிப்பிற்கு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவி_மகாத்மியம்&oldid=3652414" இலிருந்து மீள்விக்கப்பட்டது