டபிள்யூ. டி. அமரதேவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டபிள்யூ. டி. அமரதேவா
W.D. Amaradeva
2014 இல் பண்டித் அமரதேவா
பிறப்புவன்னக்குவத்தை வாதுகே டொன் ஆல்பர்ட் அமரதேவா
(1927-12-05)5 திசம்பர் 1927
மொறட்டுவை, இலங்கை
இறப்பு3 நவம்பர் 2016(2016-11-03) (அகவை 88)
தேசியம்இலங்கையர்
கல்விபத்கண்டே இசைக் கல்லூரி
பாணந்துறை சிறீ சுமங்கல கல்லூரி
பணிபல்கலைக்கழக ஆசிரியர்
சமயம்பௌத்தம்
வாழ்க்கைத்
துணை
விமலா
பிள்ளைகள்ரஞ்சனா, சுபானி, பிரியம்வதா

டபிள்யூ. டி. அமரதேவா (W. D. Amaradeva, ඩබ්. ඩී. අමරදේව, டிசம்பர் 5, 1927 - நவம்பர் 3, 2016) இலங்கையின் சிங்கள மொழிப் பாடகரும், இசையமைப்பாளரும் ஆவார். பிலிப்பீன்சின் ரமோன் மெக்சைசே விருது (2001), இந்திய அரசின் அதி உயர் விருதுகளில் ஒன்றாகிய பத்மசிறீ விருது (1986),[1][2] இலங்கை அரசின் கலாகீர்த்தி (1986), தேசமான்ய (1998) ஆகிய விருதுகளும் இவரின் திறமைகளுக்கு கிடைத்த விருதுகள் ஆகும்.

எலிசபெத் மகாராணியாரின் வேண்டுகோளை அடுத்து 1972 ஆம் ஆண்டில் மாலைத்தீவுகள் நாட்டுப்பண்ணிற்கு இசை அமைத்துக் கொடுத்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 2014-11-15. பார்க்கப்பட்ட நாள் 21 சூலை 2015.
  2. India honours doyen of modern Sinhala music தி இந்து – 28 June 2011
  3. பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (29 சூன் 2016). "நாட்டுக்கொரு பாட்டு- 12: நீதிபதியால் வந்த தேசிய கீதம்!". தி இந்து (தமிழ்). பார்க்கப்பட்ட நாள் 30 சூன் 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டபிள்யூ._டி._அமரதேவா&oldid=3784715" இலிருந்து மீள்விக்கப்பட்டது