சைதன்யர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைதன்யர்

சைதன்யர், அல்லது ஸ்ரீசைதன்ய மகாபிரபு (பொ.ஊ. 1486–1534), மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் வைணவ பக்தி நெறியைப் பரப்பிய ஆச்சாரியர். இவரது இயற்பெயர் கௌரங்கன் என்பதாகும். இல்வாழ்வில் ஈடுபட்ட இவர் தம் 25ம் வயதில் இல்வாழ்வைத் துறந்து இறைவன் திருப்பணிக்கு தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கிருஷ்ணன் அல்லது ஹரி என அழைக்கப்படும் புருஷோத்தமன் மேல் ஆழ்ந்த நம்பிக்கையும் அன்பும் கொள்ள வேண்டும் என்பது இவரது கருத்து. சடங்குகளிலிருந்து விடுபட்டு, ஆடிப்பாடி உணர்வுப் பிழம்பாய் இறைவனின் அருள் வெள்ளத்தில் திளைக்க வேண்டும். கண்ணனை வழிபட்டு, குருவைப் பணிந்து பணிபுரிந்து வந்தால் மாயையில் இருந்து விடுபட்டு இறைவனின் திருவடிகளை அடையலாம் என்றார்.

சைதன்யர் புரி ஜெகன்நாதர் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார்.


இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

http://srkvijayam.com/2014/04/29/சைதன்ய-மகாபிரபு/ பரணிடப்பட்டது 2014-10-21 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைதன்யர்&oldid=3891271" இலிருந்து மீள்விக்கப்பட்டது