நாராயணராவ் வியாசு
நாராயணராவ் வியாசு | |
---|---|
பிறப்பு | 1902 |
இறப்பு | 1984 (அகவை 81–82) |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி |
தொழில்(கள்) | பாடுதல் |
நாராயணராவ் வியாசு (Narayanrao Vyas) (1902-1984) குவாலியர் கரானாவின் (இசைப்பள்ளி) இந்துஸ்தானிய இசைக்கலைஞராவார். இவர் விஷ்ணு திகம்பர் பலூசுகரின் சீடராக இருந்தார். இவர் பல பாரம்பரிய கியால் மற்றும் பகுதியளவு மரபுசார்ந்த பஜனைகள் மற்றும் தும்ரிக்களைப் பாடி 78 ஆர்பிஎம் இசைத்தட்டுகுகளாக வெளியிட்டு 1930 இல் மிகவும் பிரபலமானார். இவரது தந்தையும் மாமாவும் கோலாப்பூரில் நன்கு அறியப்பட்ட இசைக்கலைஞர்களாவர். இவரது மூத்த சகோதரர் சங்கர்ராவ் வியாசும் ஒரு பாடகராகவும், தனித்துவமான இசையமைப்பாளராகவும் இருந்தார்.