'தேசிய நெடுஞ்சாலை 1எ (1A) ஆனது தேசிய நெடுஞ்சாலை 44 ஆக மாற்றப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியை இணைக்கும் வட இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையாகும். இது ஜம்மு காஷ்மீரின் வடக்கில் உள்ள காந்தர்பல் மாவட்டத்தின் உள்ள ஊரி நகரத்தையும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் நகரத்தையும் இணைக்கிறது. இச்சாலையின் மொத்த நீளம் 663 கிலோமீட்டர்(412 மைல்கள்) ஆகும்.[1] இந்த சாலையில் ஜனவரி, மற்றும் பிப்ரவரி மாதங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்படுவதால் சில நாட்கள் மூடப்படும். [2]
இந்தக் குறுங்கட்டுரைஇந்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துடன் தொடர்புடையது. ஆகையினால் இதனை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.