சிங்கள மகா சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்கள மகா சபை இலங்கையில் நடைமுறையில் இருந்த முக்கிய கட்சியாகும். இது 1937 ஆம் ஆண்டு எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவால் ஆரம்பிக்கப்பட்டது. இது சிங்களவர்களின் நலன் காக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும். இது இந்திய தமிழர் எதிர்ப்பு கருத்துக்களை முன்வைத்தது. 1945 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை (ஐ.தே.க.) ஆதரித்தது பின்னர் 1951 இல் பண்டாரநயக்கா ஐ.தே.க. இலிருந்து விலகியதும் அதிலிருந்து விலகி இலங்கை சுதந்திரக் கட்சியை அமைத்தது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கள_மகா_சபை&oldid=2158259" இலிருந்து மீள்விக்கப்பட்டது