கே. பராசரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. பராசரன்
நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலங்களவை (நியமன உறுப்பினர்)
பதவியில்
29 ஜூன் 2012 – 28 ஜூன் 2018
இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்
பதவியில்
9 ஆகத்து 1983 – 8 திசம்பர் 1989
பிரதமர்இந்திரா காந்தி
ராஜீவ் காந்தி
முன்னையவர்எல். என். சின்கா
பின்னவர்சோலி சொராப்ஜி
மத்திய அரசு வழக்கறிஞர்
பதவியில்
6 மார்ச் 1980 – 8 ஆகத்து 1983
பிரதமர்இந்திரா காந்தி
முன்னையவர்சோலி சொராப்ஜி
பின்னவர்மிலன் கே பானர்ஜி
மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர் தமிழ்நாடு
பதவியில்
1976–1977
முன்னையவர்கோவிந்த சுவாமிநாதன்
பின்னவர்வி. பி. இராமன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 அக்டோபர் 1927 (1927-10-09) (அகவை 96)
திருவரங்கம், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியா
துணைவர்ஸ்ரீமதி சரோஜா
பிள்ளைகள்2, மகள்கள் & 3 மகன்கள் மோகன் பராசரன்
பெற்றோர்(s)ஆர். கேசவ ஐயங்கார் (தந்தை)
சிறீமதி இரங்கநாயகி (தாயார்)
கல்விபி. ஏ. (பொருளாதாரம்), மாநிலக் கல்லூரி, சென்னை
பி. எல். சட்டக் கல்லூரி, சென்னை
வேலை
விருதுகள்பத்ம பூசண் (2003), பத்ம விபூசண் (2011)

கே. பராசரன் (K. Parasaran)(பிறப்பு: 1927) இந்தியாவின் முன்னோடி வழக்கறிஞர்களில் ஒருவர். அரசியல் அமைப்புச் சட்டம் தொடர்பான வழக்குகளில் வாதாடுவதில் திறமையானவர் எனப் பெயர் பெற்றவர். ராம ஜென்மபூமி வழக்கில் ராம் லல்லா அமைப்பு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றவர்.[1]

வாழ்க்கை[தொகு]

பராசரனின் தந்தை கேசவ ஐயங்காரும் வழக்கறிஞர். இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவரான இவர் இலத்தீன், ஆங்கிலம், வடமொழி, தமிழ் ஆகிய மொழிகளில் புலமைபெற்றவர். தன்னுடைய தாயின் ஊரான திருவரங்கத்தில் பிறந்த பராசரன், திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளி, மாநிலக் கல்லூரி, சென்னை சட்டக்கல்லூரி ஆகியவற்றில் பயின்றார். பி. ஏ. படிப்பில் வடமொழிப் பாடத்தில் நீதிபதி சி. வி. குமாரசாமி சாஸ்திரி பதக்கம், சட்டப்படிப்பில் இந்து சட்டத்தில் நீதிபதி வி. பாஷ்யம் ஐயங்கார் தங்கப்பதக்கம், பார் கவுன்சில் தேர்வில் நீதிபதி கே. எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் பதக்கம் ஆகியவற்றைப் பெற்றார்.

பணிகள்[தொகு]

1958இல் இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகப் பதிவு செய்தார். 1971-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞரானார். 1976-ல் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞரானார். 1977இல் அப்பதவியிலிருந்து விலகினார். 1980–1983 வரை மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், 1983இல் அட்டானி ஜெனரல், 1986 மற்றும் 1989-ல் மீண்டும் அட்டர்னி ஜெனரல், 1984–1987 இல் இந்தியன் சொசைட்டி ஆப் கிரிமினாலஜியன் தலைவர், 1984–1987 பார் அசோசியேசன் தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார்.

1984இல் இந்தியக் குழுவின் தலைவராக நியூயார்க் சென்று, ஐ.நா. அவை மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவின் அறிக்கையை அளித்தார். போபால் விஷவாயுப் பிரச்சினை தொடர்பாக அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்ட இந்தியக் குழுவின் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "அயோத்தி வழக்கில் நின்று கொண்டே வாதாடிய 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன்". Archived from the original on 2019-11-10. பார்க்கப்பட்ட நாள் 2019-11-10.
  2. தினமணி தீபாவளி மலர்,1999, தலைசிறந்த தமிழர்கள். பக்கம்95
  3. LEGAL LUMINARY – K. Parasaran
  4. "Parasaran, Vittal, Natarajan among Padma awardees" (in en-IN). The Hindu. 2011-01-26. https://www.thehindu.com/news/national/tamil-nadu/Parasaran-Vittal-Natarajan-among-Padma-awardees/article15533119.ece. 
  5. "M Venkaiah Naidu presents Most Eminent Senior Citizen Award to K Parasaran | DD News". ddnews.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-11-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பராசரன்&oldid=3773101" இலிருந்து மீள்விக்கப்பட்டது