ஈசாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈசாப்
Aesop
Αἴσωπος
பிறப்புகிமு 620
இறப்புகிமு 564
வகைநீதிக் கதைகள்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஈசாப்பின் நீதிக்கதைகள்

ஈசாப் ( Aesop, கி.மு. 620–564) என்பவர் ஒரு பண்டைக் கிரேக்க கற்பனையாளர் மற்றும் கதைசொல்லி ஆவார். இவரது இருப்பு தெளிவாக இல்லை மற்றும் இவரது எழுத்துக்கள் நேரடியாக எஞ்சியில்லை என்றாலும், இவருடையது என்று கூறப்பட்ட பல கதைகள் பல நூற்றாண்டுகளாக, பல மொழிகளில் கதை சொல்லும் பாரம்பரியத்தில் இன்றுவரை தொடர்கின்றன. இவருடன் தொடர்புடைய பல கதைகள் மாந்தவுருவகங்களாக விலங்கு கதாபாத்திரங்களால் வகைப்படுத்தப்படுகின்றன. இவர் ஒரு அடிமையாவார். இவர் கூறிய நீதிக்கதைகள் ஈசாப்பின் நீதிக்கதைகள் எனப்படுகின்றன. இந்த நீதிக் கதைகள் உலகின் பெருமளவு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

ஈசாப்-ஒரு கற்பனை ஓவியம்

அரிஸ்டாட்டில், ஹெரோடோடஸ் மற்றும் புளூட்டாக் உள்ளிட்டவர்களின் பண்டைய ஆதாரங்களில் ஈசாப்பின் வாழ்க்கையின் சிதறிய விவரங்களைக் காணலாம். ஈசோப் ரொமான்ஸ் எனப்படும் ஒரு பண்டைய இலக்கியப் படைப்பு, இவரது வாழ்க்கையின் ஒரு பகுதியை, அநேகமாக மிகவும் கற்பனையான பதிப்பாக சொல்கிறது. இவர் தனது புத்திசாலித்தனத்தால் சுதந்திரத்தைப் பெற்று மன்னர்கள் மற்றும் நகர அரசுகளுக்கு ஆலோசகராக ஆன ஒரு அற்புதமான அசிங்கமான அடிமை (δοῦλος) என்று அதில் விவரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2,500 ஆண்டுகளில் பரவலர் பண்பாட்டில் ஈசாப்பின் சித்தரிப்புகள் பல கலைப் படைப்புகள் மற்றும் பல புத்தகங்கள், திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சித்தரிக்கப்பட்டுள்ளன.

வாழ்க்கை[தொகு]

விக்கி நூல்களில் ஈசாப் நீதிக் கதைகள்
அரிசுட்டாட்டில் உட்பட துவக்கத்தால கிரேக்க ஆதாரங்களின்படி, ஈசாப் கிமு 620 இல் கிரேக்க குடியிருப்பான மெசெம்பிரியாவில் பிறந்தார் என்பதைக் குறிக்கிறது. உரோமானிய ஏகாதிபத்திய காலத்தைச் சேர்ந்த பல பிற்கால எழுத்தாளர்கள் இவர் ஃப்ரிஜியாவில் பிறந்தார் என்று கூறுகிறார்கள்.[1] அஅரிசுட்டாட்டில்[2] மற்றும் எரோடோட்டசு[3] ஆகியோரின் குறிப்புகளில் இருந்து ஈசாப் சமோசில் அடிமையாக இருந்ததாகவும், அவனது எசமானர்களாக முதலில் சாந்தஸ் என்ற மனிதரும் பின்னர் ஐட்மான் என்பவரும் இருந்தததாக அறியவருகிறது. இவர் எப்படியோ தன் எசமானரிடம் இருந்து விடுதலைப் பெற்று பல நாடுகளை சுற்றிப் பார்த்தார். இந்தப் பயணத்தின் போது ஈசாப் ஏதன்சுக்கு சென்று அப்போது அங்கு பிரபலமாக இருந்தசோலோன் என்பவரை சந்தித்தார். அவரினமிருந்து ஏராளமான விசயங்களை அறிந்து கொண்டார். கொரிந்தின் பெரியாண்டரைச் சந்தித்தார்.

இறிதியில் இவர் டெல்பி நகரில் தனது வாழ்வின் முடிவை சந்தித்தார். புளூட்டாக்[4] கூற்றின்படி, ஈசாப் டெல்பிக்கு லிடியாவின் அரசர் கிரீச்சிடம் தூதரகப் பணிக்காக வந்ததாகவும், அவர் டெல்பியர்களை அவமதித்ததாகவும், மன்னர் இவரிடம் ஒரு பெருந் தொகையைக் கொடுத்து டெல்பி கோயிலில் சேர்ப்பிக்கச் சொல்லியதாகவும், ஆனால் அப்பணியை இவர் ஒழுங்காக செய்யாததால் திருட்டுக் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும், குன்றிலிருந்து தூக்கி எறியப்பட்டு கொல்லப்பட்டதாகவும் கூறுகிறார். (அதன்பிறகு டெல்பியர்கள் கொள்ளைநோயாலும், பஞ்சத்தால் பாதிக்கப்பட்டனர்).

மேற்கோள்கள்[தொகு]

  1. Brill's New Pauly: Encyclopaedia of the Ancient World (hereafter BNP) 1:256.
  2. Aristotle. Rhetoric 2.20 பரணிடப்பட்டது 2011-05-24 at the வந்தவழி இயந்திரம்.
  3. Herodotus. Histories 2.134 பரணிடப்பட்டது 2012-05-21 at the வந்தவழி இயந்திரம்.
  4. Plutarch. On the Delays of Divine Vengeance; Banquet of the Seven Sages; Life of Solon.

வெளி இணைப்புக்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈசாப்&oldid=3667924" இலிருந்து மீள்விக்கப்பட்டது