அபுல் ஃபசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்பா் நாமாவை அக்பர் வசம் அபுல் ஃபசல் அளிக்கிறார், Mughal miniature

அபுல் ஃபசல் (Abu'l Fazl ibn Mubarak, பாரசீக மொழி: ابو الفضل, ஜனவரி 14, 1551 - ஆகஸ்ட் 12, 1602) பேரரசர் அக்பர் அவையிலிருந்த அரசியல் ஆலோசகர்கள் ஒண்மணிகளுள் (நவரத்தினங்கள், Nine Jewels) ஒருவர். இவரின் தந்தையார் ‌ஷேக் முபாரக். இவரது சகோதரர் புகழ் பெற்ற பாரசீகக் கவிஞர் அபுல் ஃபைஸி.

1574 ஆம் ஆண்டு அக்பரின் அரசவையில் சேர்ந்தார். அது முதல் இவர் பேரரசர் அக்பரின் நம்பிக்கைக்குரிய மிக நெருங்கிய நண்பராக தன் இறுதிநாள் வரை இருந்தார். இவர் அக்பரின் வாழ்க்கை வரலாறு, ஆட்சி முறை, அக்கால இலக்கிய சமயத் தத்துவங்கள் குறித்து மூன்று பாகங்கள் கொண்ட நூலை எழுதினார். முதல் இரண்டு பாகங்கள் அக்பர் நாமா என்ற பெயரிலும் மூன்றாவது பாகம் அயினி அக்பரி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

அக்பரின் மகன் சலீம் (ஜஹாங்கீர்) அரியணை ஏறுவதை ஃபசல் எதிர்த்ததாகத் தெரிகிறது. அத்தோடு இளவரசன் சலீமுக்கு அபுல் ஃபசலின் செல்வாக்கு கண்ணில் கிடந்த துரும்பாக உறுத்தியது. துரும்பை அகற்றத் திட்டமிட்ட சலீம் பீ(வீ)ர்சிங்க் என்பவனைக் கொண்டு 1602 ஆம் ஆண்டு இவர் அரசுமுறைப் பயணமாக ஆக்ரா நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது அவரது தலையைத் ‌துண்டிக்கச் செய்தான். வெட்டப்பட்ட அவரது தலை அலகாபாத்தில் இருந்த சலீமிடம் அனுப்பப்பட்டது[1][2][3].

மேற்கோள்கள்[தொகு]

  1. Orchha British Library.
  2. Majumdar, R.C. (2007). The Mughul Empire, Mumbai: Bharatiya Vidya Bhavan, p.167
  3. Blochmann, H. (tr.) (1927, reprint 1993) The Ain-I Akbari by Abu'l-Fazl Allami, Vol.I, The Asiatic Society, Calcutta, pp.lxviii-lxix
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபுல்_ஃபசல்&oldid=2227809" இலிருந்து மீள்விக்கப்பட்டது