நான் கடவுள் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34: வரிசை 34:
* பாலா ஒரே மாதிரியான பாணியில் கதை சொல்கிறாரா?
* பாலா ஒரே மாதிரியான பாணியில் கதை சொல்கிறாரா?
* இறை நம்பிக்கை உடையவர்களைப் புண்படுத்துகிறதா?
* இறை நம்பிக்கை உடையவர்களைப் புண்படுத்துகிறதா?
* பாலா படம் என்றாலே ஒன்று வன்முறை அல்லது முகம் சுழிக்கும் காட்சிகள் தான் இருக்குமா?



== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

08:10, 16 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

நான் கடவுள்
நான் கடவுள் திரைப்பட விளம்பரம்
இயக்கம்பாலா
தயாரிப்புசிவஸ்ரீ ஸ்ரீனிவாசன்
கதைபாலா
இசைஇளையராஜா
நடிப்புஆர்யா
பூஜா
ஒளிப்பதிவுஆர்த்ர் வில்சன்
வெளியீடு2009
மொழிதமிழ்

நான் கடவுள், 2009ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். பாலா இயக்கத்தில் ஆர்யா, பூஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்களை எழுதியுள்ளார்.அவரது ஏழாவது உலகம் புதினத்தைத் தழுவி திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ளார். ஆர்த்தர் வில்சன் ஒளிப்பதிய, சூப்பர் சுப்பராயன் சண்டையமைத்துள்ளார். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ஈன்ற மகவால் குலத்துக்கு இழப்பு என சோதிடர்கள் கூறியதை நம்பி மகன் ருத்ரனை சிறுவயதிலேயே காசியில் கொண்டுவந்து விடுகிறார் அப்பா நமச்சிவாயம். பதினான்கு வருட நீண்ட இடைவெளிக்குப் பின் குற்றவுணர்வு துரத்த மகனைத் தேடி காசிக்கு வருகிறார். பாவம் கரைக்கவரும் மக்கள் ஆற்றில் எ‌ரியும் சிதைக்கு நடுவே தவக்கோலத்தில் மகனைக் கண்டுபிடிக்கிறார். ருத்ரன் இப்போது சுற்றம் துறந்த அகோரித் துறவியாக உள்ளான். "அகோரிக்கு உறவு கிடையாது, அதை அறுத்துவிட்டு வந்து சேர்" என அறிவுரை சொல்லி ஊருக்கு அனுப்பி வைக்கிறார் ருத்ரனின் ஆசிரியர். ஊருக்கு வந்த பிறகும் வீட்டோடு ஒட்டாமல் இருக்கிறான். இது அவனது உறவுகளுக்கு மன வருத்தம் தந்தாலும், அவன் மீண்டும் தங்களுடன் சேர்ந்து வாழ மாட்டான் என்பதை உணர்ந்து அவனை விட்டு விடுகிறார்கள்.

உடல் ஊனமுற்றவர்களையும் மூளை வளர்ச்சி குறைந்தவர்களையும், உறவற்றவர்ளையும் பிச்சைக்காரர்களாக்கி தொழில் செய்து வருகிறான் தாண்டவன். அவனிடம் சிக்கிக் கொள்கிறாள் பாட்டுப் பாடி பிழைப்பு நடத்தும் கண் தெ‌ரியாத அம்சவல்லி. தாண்டவன், முக அழகு குறைந்த ஒருவனுக்குஅவளை விற்க முயல்கிறான். உடனிருப்பவர்கள் அவளைக் காப்பாற்றுகிறார்கள். பாதுகாப்பு தேடி அவள் வந்து சேரும் இடம் ருத்ரன் இருக்கும் மலைக்கோயில். அவளை விற்க முயன்ற இடைத்தரகரைக் கொன்று பாதுகாப்பு அளிக்கிறான். கொலை வழக்கில் கைதாகி நீதிமன்றம் சென்றாலும், அவன் தான் குற்றவாளி என்று நிறுவ வழி இல்லாததாலும், ருத்ரனை தாண்டவனிடம் இடமே மாட்டி விட காவலர்கள் நினைப்பதாலும், வழக்கில் இருந்து விடுபடுகிறான். இதற்கு இடையே, தாண்டவன் அம்சவல்லி மேல் கோபம் கொண்டு கொடூரமாகத் தாக்க, அவள் அடைக்கலம் தேடி ருத்ரனிடம் செல்கிறாள். தாண்டவனும் அங்கு வர, இறுதிக் காட்சியில், தாண்டவனைக் கொல்கிறான். மிகவும் மனமொடிந்த அம்சவல்லி, இந்தப் பிறப்பில் இருந்து விடுபடக் கோரி ருத்ரனிடம் மன்றாட, அவளைக் கருணைக் கொலை செய்கிறான். பிறகு, அவனது ஆசிரியர் குறிப்பிட்ட படி, மீண்டும் காசிக்குச் செல்கிறான்.


விமர்சனங்கள்

படத்தைக் கண்ட பொதுமக்கள், விமர்சகர்கள் முன்வைத்த பொதுவான விமர்சனங்கள்

  • படத்தின் இறுதியில் ஊனமுற்றவரை வாழ இயலாதவர் என்று கூறி கருணைக் கொலை செய்வது சரியா?
  • படத்தில் வன்முறை மிகுந்துள்ளதா?
  • பாலா ஒரே மாதிரியான பாணியில் கதை சொல்கிறாரா?
  • இறை நம்பிக்கை உடையவர்களைப் புண்படுத்துகிறதா?
  • பாலா படம் என்றாலே ஒன்று வன்முறை அல்லது முகம் சுழிக்கும் காட்சிகள் தான் இருக்குமா?

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்_கடவுள்_(திரைப்படம்)&oldid=980219" இலிருந்து மீள்விக்கப்பட்டது