24 மனை தெலுங்குச்செட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரை துப்புரவு செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி
வரிசை 1: வரிசை 1:
{{துப்புரவு}}
[[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] வீழ்ச்சிக்குப் பிறகு, தஞ்சாவூரும் மதுரையும் நாயக்க மன்னர்கள் வசம் வந்தது. இந்த சமயம் [[தெலுங்கு]] பேசும் [[திராவிடர்|திராவிட]] இனமக்கள் பலர் மதுரை, தஞ்சாவூர்,கோவை போன்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வரத்தொடங்கினர். இப்படி வந்தவர்களில் ஒரு பிரிவினர்தான் 24 மனை தெலுங்குச் செட்டியார்கள். இவர்கள் வீட்டில் தெலுங்கு மொழியில் பேசினாலும், தமிழ்ப் பண்பாட்டில் 24 மனை தெலுங்குச் செட்டியார்களின் வாழ்வியல் முறையும், கலாச்சாரமும் பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது. இவர்கள் தங்கள் குல தெய்வமாக காமாட்சி அம்மனை வழிபடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஞாயிறு அன்று காஞ்சியில் இச்சமூகத்தின் சார்பில் ஆராதனை விழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. [[தமிழ்நாடு]] முழுக்க இச்சமூகத்தினர் பரவி இருக்கிறார்கள் என்றாலும் [[மதுரை]], [[தேனி]], [[திருச்சி]], [[கோயம்புத்தூர்]], [[திருநெல்வேலி]], [[இராமநாதபுரம்]] மற்றும் [[சென்னை]] பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளனர். இவர்கள் [[தமிழ்நாடு அரசு]] வெளியிட்டுள்ள [[தமிழ்நாடு சாதிகள் பட்டியல்|தமிழ்நாடு சாதிகள் பட்டியலில்]] பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
[[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] வீழ்ச்சிக்குப் பிறகு, தஞ்சாவூரும் மதுரையும் நாயக்க மன்னர்கள் வசம் வந்தது. இந்த சமயம் [[தெலுங்கு]] பேசும் [[திராவிடர்|திராவிட]] இனமக்கள் பலர் மதுரை, தஞ்சாவூர்,கோவை போன்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வரத்தொடங்கினர். இப்படி வந்தவர்களில் ஒரு பிரிவினர்தான் 24 மனை தெலுங்குச் செட்டியார்கள். இவர்கள் வீட்டில் தெலுங்கு மொழியில் பேசினாலும், தமிழ்ப் பண்பாட்டில் 24 மனை தெலுங்குச் செட்டியார்களின் வாழ்வியல் முறையும், கலாச்சாரமும் பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது. இவர்கள் தங்கள் குல தெய்வமாக காமாட்சி அம்மனை வழிபடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஞாயிறு அன்று காஞ்சியில் இச்சமூகத்தின் சார்பில் ஆராதனை விழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. [[தமிழ்நாடு]] முழுக்க இச்சமூகத்தினர் பரவி இருக்கிறார்கள் என்றாலும் [[மதுரை]], [[தேனி]], [[திருச்சி]], [[கோயம்புத்தூர்]], [[திருநெல்வேலி]], [[இராமநாதபுரம்]] மற்றும் [[சென்னை]] பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளனர். இவர்கள் [[தமிழ்நாடு அரசு]] வெளியிட்டுள்ள [[தமிழ்நாடு சாதிகள் பட்டியல்|தமிழ்நாடு சாதிகள் பட்டியலில்]] பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.



16:58, 19 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, தஞ்சாவூரும் மதுரையும் நாயக்க மன்னர்கள் வசம் வந்தது. இந்த சமயம் தெலுங்கு பேசும் திராவிட இனமக்கள் பலர் மதுரை, தஞ்சாவூர்,கோவை போன்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வரத்தொடங்கினர். இப்படி வந்தவர்களில் ஒரு பிரிவினர்தான் 24 மனை தெலுங்குச் செட்டியார்கள். இவர்கள் வீட்டில் தெலுங்கு மொழியில் பேசினாலும், தமிழ்ப் பண்பாட்டில் 24 மனை தெலுங்குச் செட்டியார்களின் வாழ்வியல் முறையும், கலாச்சாரமும் பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது. இவர்கள் தங்கள் குல தெய்வமாக காமாட்சி அம்மனை வழிபடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஞாயிறு அன்று காஞ்சியில் இச்சமூகத்தின் சார்பில் ஆராதனை விழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு முழுக்க இச்சமூகத்தினர் பரவி இருக்கிறார்கள் என்றாலும் மதுரை, தேனி, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, இராமநாதபுரம் மற்றும் சென்னை பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளனர். இவர்கள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

திருமண உறவுமுறை மற்றும் குலதெய்வ வழிபாடு

24 மனை தெலுங்குச் செட்டியார்களில் 24 மனை என்பது 24 கோத்திரத்தைக் குறிப்பிடுகிறது. சிலர் வீடு என்றும் குறிப்பிடுவார்கள். இதில் 16 (பதினாறு) கோத்திரங்கள் ஆண் வீடு என்றும் 8 (எட்டு) கோத்திரங்கள் பெண் வீடு என்றும் வகைப்படுத்தபட்டுள்ளன.

16 ஆண் வீடு கோத்திரங்கள்: 1 மும்முடியர் 2. கோலவர் (கோலயவர்) 3. கணித்தியவர் 4. தில்லையவர் 5. பலிவிரியர் 6. சென்னையவர் 7. மாதளையவர் 8. கெந்தவங்கவர் 9. ராஜபைரவர் 10. வம்மையர் 11. கப்பவர் 12. தரிசியவர் 13. வஜ்யவர் 14. கெந்தியவர் 15. நலிவிரியவர் 16. சுரயவர்

8 பெண் வீடு கோத்திரங்கள்: 1. மக்கடையார் 2. கொரஹையவர் 3. மாரட்டையர் 4. ரெட்டையர் (கவலையர் / ரெக்கையர்) 5. பில்லிவங்கவர் 6. தவ்ளையர் 7. சொப்பியர் 8. லொட்டையவர்

இந்த சமூகத்தினர் 16 வீடு மற்றும் 8 வீடு ஆகிய இந்த இரு பிரிவுகளுக்கிடையே திருமண உறவு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் 16 (ஆண்) வீட்டைச்சேர்ந்த கோத்திரப் பிரிவினர் தங்களுக்குள் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. அது போல 8 (பெண்) வீட்டைச்சேர்ந்த பிரிவினரும் தங்களுக்குள் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. இதன் காரணம் ஒரே பிரிவில் இருப்பவர்கள் சகோதர உறவாக கருதப்படுவதே ஆகும்.

இச்சமூகத்தின் தலைவர் பெரியதனத்தார், நாட்டாமை, செட்டுமை அல்லது சாதித் தலைவர் என்று அழைக்கப்படுகின்றனர். பல கிராமங்களில் இவர்கள் தலைமையில் இச்சாதியினரின் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். நகர்ப்புறங்களில் அவ்வழக்கம் கிடையாது.

24 மனை தெலுங்குச் செட்டியார்களின் குலதெய்வ வழிபாடு கூட அவரவர் கோத்திர அடிப்படையிலேயே அமைந்துள்ளது. ஒவ்வொரு கோத்திரத்தாரும் தங்களுக்குள் ஒரு தெய்வத்தை குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு, அத்தெய்வத்துக்கு சொந்தமாக ஒரு கோவிலையும் அமைத்துக் கொண்டுள்ளார்கள். சிவன், பெருமாள், காமாட்சியம்மன், அங்காள பரமேஸ்வரி, காளியம்மன், குங்குமகாளியம்மன், வீரமாத்தியம்மன், மதுரைவீரன் ஆகிய தெய்வங்கள் பல கோத்திரத்தவரின் குலதெய்வங்கள் ஆகும்.

சமூகப் பிரமுகர்கள்

  • உடுமலை நாராயணகவி - திரைப்படப் பாடலாசிரியர்
  • முசிறிபுத்தன் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (அதிமுக)
  • கே.சி.பழனிச்சாமி - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (கரூர் மக்களவைத் தொகுதி)
  • பொள்ளாச்சி ஜெயராமன் - முன்னாள் அமைச்சர், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர் (அதிமுக)
  • இ.ஜி. சுகவனம் - நாடாளுமன்ற உறுப்பினர் (கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி)
  • ரத்னவேலு - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
  • எஸ்.ஜி. விநாயகமூர்த்தி - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
  • வெங்கடேசன் - முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர்

வினோத வழிபாடுகள்: மயானக்கொள்ளை, காமாட்சியம்மன் நோன்பு

மயானக்கொள்ளை

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ஸ்தல புராணத்தின்படி, பிரம்மனின் தலையை சிவபெருமான் கொய்ததால் கோபமடையும் சரஸ்வதி தேவி கொடுக்கும் சாபத்தினால் சிவபெருமானின் கரத்தில், பிரம்ம கபாலம் ஒட்டிக் கொள்கிறது. இந்தக் கபாலம் சிவபெருமானுக்குப் படைக்கும் உணவை உண்டு விடுவதால், பசியால் பித்து பிடித்து காடுமலைகளில் அலைந்து திரியும் சிவபெருமான், மகா சிவராத்திரியன்று மேல்மலையனூர் மயானத்தில் வந்து தங்குகிறார். மறுநாள் காலை இங்கு நடக்கும் மயான கொள்ளை நிகழ்ச்சியில் பார்வதியின் அம்சமான அங்காளம்மன், சிவனுக்குப் படைக்கும் உணவை எடுக்க வரும் பிரம்ம கபாலத்தை, அங்காளபரமேஸ்வரி விஸ்வரூபம் எடுத்து தரையில் மிதித்து ஆட்கொள்கிறார். சிவபெருமானின் சாபம் நீங்குகிறது. இந்தப் புராணத்தை நினைவு கூறும் நிகழ்ச்சி, எல்லா அங்காளம்மன் கோவில்களிலும் மகாசிவராத்திரி திருவிழாவின் ஒரு பகுதியாக மயானக்கொள்ளை என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.

24 மனை தெலுங்கு செட்டியார்களில் பலர் அங்காளபரமேஸ்வரி அம்மனைக் குல தெய்வமாக வழிபடுபவர்கள். கோவையை அடுத்த சுண்டக்காமுத்தூரில் கோலையார் கோத்திரத்தைச்சேர்ந்த 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினருக்குப் பாத்தியப்பட்ட குலதெய்வமான அங்காளபரமேஸ்வரி கோவிலிலும் மகாசிவராத்திரியை அடுத்து இரண்டாம் நாள் விழாவாக மயானகொள்ளை நிகழ்ச்சி நள்ளிரவில் கொண்டாடப்படுவது வழக்கம். அங்காளம்மன் விஸ்வரூப கோலத்தில் மயானத்தில் எழுந்தருளி, மயானக் கொள்ளையில், பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும்.

கோவிலில் இருந்து அங்காளம்மன் புறப்பட்டு வரும்போது, எலும்பை மாலையாக அணிந்து கொண்டு சுடுகாட்டுச் சாம்பலை உடலில் பூசிக் கொண்டு சாமி வந்து ஆக்ரோஷத்துடன் ஆடும் பூசாரிகள், தங்கள் பற்களால், உயிருடன் இருந்த கோழியை கடித்து அம்மனுக்கு பலி கொடுப்பது வழக்கம். இது போன்ற வினோத பழக்கம் மேல்மலையனூர் உட்பட எல்லா அங்காளம்மன் கோவில்களிலும் பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து நடைபெறும் சடங்காகும்.

காமாட்சியம்மன் நோன்பு

24 மனை தெலுங்கு செட்டியார்கள் அன்னை காமாட்சியம்மனை தங்களின் சமூக குலதெய்வமாக ஏற்றுக்கொண்டுள்ளனர். 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர் சார்பில் பல கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஆண்டுதோறும் காமாட்சியம்மன் வழிபாட்டு நோன்பு அல்லது திருவிழா கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நோன்பில் முற்றிலும் ஆண்கள் மட்டும் கலந்து கொள்வர். இது ஆண்கள் மட்டும் கடைப்பிடிக்கும் நோன்பு ஆகும். எனவே இந்த நோன்பில் கண்டிப்பாக பெண்களுக்கு அனுமதியில்லை. பிற சமூகத்தினருக்கும் அனுமதியில்லை.

ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருக்கும் தோப்பு அல்லது வயல்காடுகளில் இந்த நோன்பு நடைபெறுவது வழக்கம். பாம்பு புற்றில் இருந்து மண் எடுத்து . வந்து சாமி செய்து, தென்னம்பாளையால் அலங்கரித்து, காமாட்சியம்மனாக பாவித்து வழிபடுவார்கள். பின்பு காமாட்சியம்மனுக்கு அமைக்கப்பட்ட நந்தவனத்தில் கிடா வெட்டி பூஜை செய்வார்கள். பூஜைக்குப்பின் சமையல் செய்வது, பரிமாறுவது உள்ளிட்ட எல்லா வேலைகளையும் செய்வது ஆண்கள்தான். மீதமான . உணவுகளையும் இவர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்வதில்லை. மாறாக .அங்கேயே குழி தோண்டிப் புதைத்து விடுவது வழக்கம்.

[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்