தேவாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
பிரதான பகுப்பு நீக்கம்
English for searching
வரிசை 1: வரிசை 1:
[[சைவ சமயம்|சைவ சமய]]த்தின் முழுமுதற் [[கடவுள்|கடவுளான]] [[சிவபெருமான்]] மீது, [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்]], [[திருநாவுக்கரசு நாயனார்]], [[சுந்தரமூர்த்தி நாயனார்]] ஆகிய [[நாயன்மார்|நாயன்மாரா]]ல் [[தமிழ்|தமிழிற்]] பாடப்பட்ட பாடல்களே '''தேவாரங்கள்''' எனப்படுகின்றன. முதல் இருவரும் [[கி.பி. 7 ஆம் நூற்றாண்டு|கி.பி. 7 ஆம் நூற்றாண்டி]]லும், மூன்றாமவர் [[கி.பி. 8 ஆம் நூற்றாண்டு|கி.பி. 8 ஆம் நூற்றாண்டி]]லும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. [[பதிகம்]] என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.
[[சைவ சமயம்|சைவ சமய]]த்தின் முழுமுதற் [[கடவுள்|கடவுளான]] [[சிவபெருமான்]] மீது, [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்]], [[திருநாவுக்கரசு நாயனார்]], [[சுந்தரமூர்த்தி நாயனார்]] ஆகிய [[நாயன்மார்|நாயன்மாரா]]ல் [[தமிழ்|தமிழிற்]] பாடப்பட்ட பாடல்களே '''தேவாரங்கள்''' ([[ஆங்கிலம்|Thevaram]]) எனப்படுகின்றன. முதல் இருவரும் [[கி.பி. 7 ஆம் நூற்றாண்டு|கி.பி. 7 ஆம் நூற்றாண்டி]]லும், மூன்றாமவர் [[கி.பி. 8 ஆம் நூற்றாண்டு|கி.பி. 8 ஆம் நூற்றாண்டி]]லும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. [[பதிகம்]] என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.


7 ஆம் நூற்றாண்டு, தமிழ்நாட்டிலே [[பல்லவர்]] ஆட்சி பலம் பெற்றிருந்த காலமாகும். மிகவும் செல்வாக்குடனிருந்த [[பௌத்த சமயம்|பௌத்தம்]], [[சமண சமயம்|சமணம்]] ஆகிய மதங்களுக்கெதிராகச் [[சைவ சமயம்]] மீண்டும் மலர்ச்சி பெறத்தொடங்கிய காலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோர் தோன்றி ஊர்ரூராகச் சென்று சமயப்பிரசாரம் செய்தனர். சென்ற இடங்களிலெல்லாம் இருந்த [[கோயில்]]கள் மீது தேவாரங்களைப் பாடினர். திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் தேவாரங்களைப் பாடத்தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இவர் தனது சொந்த ஊரான [[சீர்காழி]]யிலுள்ள தோணியப்பர் மீது, "தோடுடைய செவியன்"
7 ஆம் நூற்றாண்டு, தமிழ்நாட்டிலே [[பல்லவர்]] ஆட்சி பலம் பெற்றிருந்த காலமாகும். மிகவும் செல்வாக்குடனிருந்த [[பௌத்த சமயம்|பௌத்தம்]], [[சமண சமயம்|சமணம்]] ஆகிய மதங்களுக்கெதிராகச் [[சைவ சமயம்]] மீண்டும் மலர்ச்சி பெறத்தொடங்கிய காலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோர் தோன்றி ஊர்ரூராகச் சென்று சமயப்பிரசாரம் செய்தனர். சென்ற இடங்களிலெல்லாம் இருந்த [[கோயில்]]கள் மீது தேவாரங்களைப் பாடினர். திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் தேவாரங்களைப் பாடத்தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இவர் தனது சொந்த ஊரான [[சீர்காழி]]யிலுள்ள தோணியப்பர் மீது, "தோடுடைய செவியன்"

18:58, 8 திசம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்

சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் மீது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மாரால் தமிழிற் பாடப்பட்ட பாடல்களே தேவாரங்கள் (Thevaram) எனப்படுகின்றன. முதல் இருவரும் கி.பி. 7 ஆம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கி.பி. 8 ஆம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.

7 ஆம் நூற்றாண்டு, தமிழ்நாட்டிலே பல்லவர் ஆட்சி பலம் பெற்றிருந்த காலமாகும். மிகவும் செல்வாக்குடனிருந்த பௌத்தம், சமணம் ஆகிய மதங்களுக்கெதிராகச் சைவ சமயம் மீண்டும் மலர்ச்சி பெறத்தொடங்கிய காலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோர் தோன்றி ஊர்ரூராகச் சென்று சமயப்பிரசாரம் செய்தனர். சென்ற இடங்களிலெல்லாம் இருந்த கோயில்கள் மீது தேவாரங்களைப் பாடினர். திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் தேவாரங்களைப் பாடத்தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இவர் தனது சொந்த ஊரான சீர்காழியிலுள்ள தோணியப்பர் மீது, "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் அவரது முதற் பதிகத்தைப் பாடினார்.

திருவதிகை வீரட்டானம் என்னும் தலத்தில் பாடிய "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் பதிகமே அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரின் முதற் பதிகமாகும். "பித்தா பிறைசூடி" என்று தொடங்கும் தேவாரம் சுந்தரரின் முதற் பதிகம்.

பத்தாம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுத்தார். இதில் முதலேழு திருமுறைகளும் தேவாரங்களாகும். இவற்றின் விபரங்கள் பின்வருமாறு.

திருமுறை பாடியவர் பாடல் எண்ணிக்கை
முதலாம் திருமுறை திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் 1469
இரண்டாம் திருமுறை திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் 1331
மூன்றாம் திருமுறை திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் 1346
நான்காம் திருமுறை திருநாவுக்கரசு நாயனார் 1060
ஐந்தாம் திருமுறை திருநாவுக்கரசு நாயனார் 1015
ஆறாம் திருமுறை திருநாவுக்கரசு நாயனார் 980
ஏழாம் திருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் 1026
மொத்தம் 8227

தேவாரங்கள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் தேவாரங்கள் இன்றும் பாடப்பட்டு வருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவாரம்&oldid=87181" இலிருந்து மீள்விக்கப்பட்டது