தொழு நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
[[படிமம்:Gandhi microscope.jpg|210px|right|thumb|தொழுநோய் ஆய்தலில் காந்தி]]
[[படிமம்:Gandhi microscope.jpg|210px|right|thumb|தொழுநோய் ஆய்தலில் காந்தி]]
தொழு நோய் மைக்கோபேக்டீரியம் என்கிற குச்சி வடிவிலான கண்ணுக்குப் புலப்படாத நோய்க் காரணியால் உண்டாகிறது. இதை 1873-ல் டாக்டர் ஆன்ச்ன் (Hansen) என்பவர் கண்டுபிடித்தார். ஆகையால் இவை ஆன்சன் நோய் எனவும் அழைக்கப்படுகிறது.
தொழு நோய் மைக்கோபேக்டீரியம் என்கிற குச்சி வடிவிலான கண்ணுக்குப் புலப்படாத நோய்க் காரணியால் உண்டாகிறது. இதை 1873-ல் டாக்டர் ஆன்ச்ன் (Hansen) என்பவர் கண்டுபிடித்தார். ஆகையால் இவை ஆன்சன் நோய் எனவும் அழைக்கப்படுகிறது.

14:14, 7 மே 2011 இல் நிலவும் திருத்தம்

தொழுநோய் ஆய்தலில் காந்தி

தொழு நோய் மைக்கோபேக்டீரியம் என்கிற குச்சி வடிவிலான கண்ணுக்குப் புலப்படாத நோய்க் காரணியால் உண்டாகிறது. இதை 1873-ல் டாக்டர் ஆன்ச்ன் (Hansen) என்பவர் கண்டுபிடித்தார். ஆகையால் இவை ஆன்சன் நோய் எனவும் அழைக்கப்படுகிறது.

தொழுநோயைக் கண்டறிந்தவர்

.

சாதாரணமாக இது மனிதரின் மூலமே பரவுகிறது. தொழு நோய்க்கான சிகிச்சை பெறாத அதிகக் கிருமியுள்ள நோயாளி தும்மும் போதும் , இருமும் போதும், காறித் துப்பும் போதும் வெளிப்படும் கிருமிகளாலேயே இந்நோய் பரவுகிறது. தொழுநோய்க் கிருமிகள் தாக்கியதற்கும், இந்நோயின் அறிகுறிகள் வெளிப்படுவதற்கும் சுமார் 3 வருடம் முதல் 5 வருடம் வரை ஆகும். இதை "அடைவுக்காலம்" என்று கூறுவர்.

இது மற்ற தொற்று நோய்களைப் போல் எல்லோருக்கும் வருவதில்லை. உடலில் நோய் தடுப்பாற்றல் உள்ளவர்களை இவை அதிகமாகத் தாக்குவதில்லை. நோய்த் தடுப்பாற்றல் குன்றியவர்களையே இவை பெரிதும் தாக்குகின்றன. ஒவ்வொருவரின் நோய்த் தடுப்பாற்றலுக்கேற்ப இதன் வீரியம் மாறுபடுகிறது.

தொழுநோயுக்குரிய சில அறிகுறிகள்

உணர்ச்சியற்ற அல்லது உணர்ச்சி குறைந்த , வெளிர்ந்த அல்லது சிவந்த தேமல்... அந்தத் தேமல் மீது முடி உதிர்ந்து காணப்படுதல் கை,கால்களில் மதமதப்பு அல்லது ஊசி குத்துவது போன்ற உணர்வு இருத்தல். தோல் தடித்தும் , எண்ணெய் பூசியது போன்ற தோற்றம் உடலிலே ஏதாவது ஒரு பகுதியில் வியர்வை இல்லாமல் இருத்தல். அதே சமயம் உடலின் மற்ற பகுதிகளில் அளவுக்கு அதிகமாக வியர்த்தல் காது மடல் தடித்திருத்தல்... கண் புருவமுடி உதிர்தல் கன்னங்கள் தொங்குவது போன்ற நிலை. சிங்க முகம் போன்ற தோற்றம் ( இது தற்போது சாதாரணமாகக் காணப்படுவதில்லை) பாதங்களில் சாம்பல் பூசியது போல் காணப்படுதல் , பாதங்களில் பெரிய வெடிப்பு இருத்தல் உள்ளங்கை சதை மேடுகள் சூம்பியிருத்தல் கை, கால் விரல்கள் மடங்கியிருத்தல் , குறைந்திருத்தல், விரல்கள் திரும்பியிருத்தல் கண்ணிமை மூட முடியாமலிருத்தல், கருவிழியிலே புண் இருத்தல் முகத்தின் பாதி பாகம் (வலது அல்லது இடது) செயல் இழத்தல் மணிக்கட்டு தொங்கி விடுதல் கணுக்கால் செயலிழந்து போதல் ஆறாத, உணர்ச்சியற்ற நீண்டநாள் புண் சட்டையில் பொத்தான் போட முடியாமை , பேனாவைப் பிடித்து எழுத இயலாமை.

தொழுநோயிக்குரிய முக்கிய அறிகுறிகள்

கீழ்க்கண்ட மூன்று அறிகுறிகளில் ஏதேனும் இரண்டைத் திட்டவட்டமாகக் கூற முடியுமானால் அதைத் தொழுநோய் என்று உறுதி செய்யலாம்.

1. உணர்ச்சியற்ற தேமல்


2. நரம்புகள் தடித்துக் காணப்படுதல்


3. தோல் பரிசோதனையில் மைக்கோ பேக்டீரியம் லெப்ரே கிருமிகள் காணப்படுதல்.


தோல் உணர்ச்சியின்மையைக் கண்டுபிடிக்க...

1.தொடு உணர்ச்சியை இறகு, பஞ்சு, நைலான் கயிறு போன்றவற்றின் மூலம் அறியலாம்.

2.வலி உணர்ச்சியை குண்டூசி ,பால்பாயிண்ட் பேனா ஆகியவற்றால் அறியலாம்.

3.பாதிக்கப்பட்ட பகுதி, பாதிக்கப்படாத பகுதி இவற்றில் பரிசோதனைகள் செய்து இவ்விரண்டு பகுதிகளில் ஏற்படுகிற தொடு உனர்வு , வலியுணர்வு மாறுதல்களை வைத்து அறியலாம்.


தொழுநோய் என்ற சந்தேகம் வந்து விட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி அதற்கான சிகிச்சையைப் பெற்று விட வேண்டும்.

தொழுநோய்

தொழுநோய் கிருமிகள்

தொழு நோய் ஒரு வகை கிருமியால் வருகிறது. காற்றின் மூலம் பரவுகிறது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் இனப்பெருக்கத்திற்கு பின் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது. அது முக்கியமாக தோலையும், நரம்புக்களையும் பாதிக்கிறது. அதனால் மூக்கு சப்பையாகி, காதுமடல் தடித்து, கைவிரல்கள், கால்விரல்கள் மடங்கி போய் குறைந்து போதல் போன்ற ஊனங்கள் ஏற்பட்டு சொரூபிகள், அரூப உருவங்கள் கொண்டவர்களாகி விடுவார்கள். தகுந்த தோல் நோய் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று மருந்து கட்டுப்பாட்டிலேயே குணப்படுத்திவிடலாம். தொழுநோயின் மாற்றுப் பெயர்கள்:குஷ்டநோய், பெருவியாதி, மேகநீர், மேக வியாதி என்றும், லெப்ரசி, ஹேன்சன் (விஞ்ஞானியின் பெயர்) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

தெழுநோய் வர காரணங்கள்

உலக தொழுநோயாளிகள்-2003

"மைக்கோபேக்டீரியம் லெப்பரே" என்ற நோய்க்காரணி அல்லது தொழு நோய் நோய்க்காரணியால் இந்நோய் வருகின்றன. தொழுநோய்க்கு காரணமான நுண்ணுயிரியை முதலில் கண்டறிந்தவர் ஹேன்சன்/ஆன்சன் (Hansen) என்ற அறிஞராவார். ஆகையால் இந்நோய்க்கு ஆன்சன் நோய் என்ற வேறுப் பெயரும் உண்டு. இவை பெரும்பாலும் காற்றின் மூலம் பரவுகிறது. நோய்த் தாக்கு உள்ள நபர் தும்பும் போதும் இரும்பும் போதும் கோடிக்கணக்கான தொழுநோய் கிருமிகள் காற்றில் பரவுகிறது. இது நாசி வழியாக உள் சென்று நோயெதிர்ப் பாற்றல் குன்றியவரைத் தாக்குகிறது. மேலும் இவை நோயுற்றவரின் உடலில் வழியும் சீழ்களில் தொடர்பு ஏற்படுவதாலும் இவை பரவுகிறது.


தொழுநோயின் வகைகள், அறிகுறிகள்:


பரவும் வகையின் அறிகுறிகள்:

1.புருவ முடிகள் உதிர்ந்து போகுதல்

2.எண்ணெய் பூசியது போன்ற பளபளப்பான மினுமினுப்பான தோல் தோற்றம்

3.காதின் பின் பகுதி (மடல்) லேசாக தடித்து இருத்தல்

4.குதிக்காலில் பரிய வெடிப்பு பின்பக்கமாக கணுக்காலை நோக்கி இருத்தல்


பரவாத வகையின் அறிகுறிகள்:

1.அரிப்பு இல்லாத சிவந்த அல்லது சற்று வெளிறிய உணர்ச்சி அற்ற தேமல்கள்

2.கை, கால்களில் மதமதப்பு (உணர்ச்சி குறைந்து இருத்தல்)


தொழுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள்:



1.ஐந்து தேமலுக்கு மேல் உள்ளவர்களுக்கும், பரவும் வகை பாதிப்புகள் உள்ளவர்களும்

2.நரம்புக்கள் பாதிக்கப்பட்டவர்கள்

3.முகத்தில் தேமல் உள்ளவர்கள்

4.ரீஆக்ஷனுக்கு (reaction) உட்படுபவர்கள்

5கர்பிணிகள்


தொழுநோய் ஊனங்கள் ஏற்படும் முன்பாக சம்பந்தப்பட்ட உடல் பாகங்களில் ஏற்படும் மாற்றங்கள், பாதிப்புகள்:

1.கண் இமைகள் மூடுவதில் சிரமம்

2.செய்யும் வேலைகளில் விரல்களின் பலமிழந்த நிலை

3.காலில் செருப்பு பிடிப்பில்லாமல் தானாக கழன்று விடுதல்

தொழுநோயால் ஏற்படடும் ஊனங்கள்

முகம்: மூக்கு சப்பையாகுதல், கண் இமைகள் மூடமுடியாத நிலை கை: விரல்கள் மடங்கிப்போதல், விரல்கள் குறைந்து போகுதல், மணிக்கட்டு துவண்டுவிடுதல் கால்:விரல்கள் மடங்கி போதல், விரல்கள் மழுங்கி விடுதல், பாதம் துவண்டு விடுதல், பாதத்தில் உணர்ச்சி போய் குழிப்புண்கள் ஏற்படுதல்.

தொழுநோய் ஊனங்கள் சரிசெய்ய இயலும்:

சில ஊனங்கள் பிஸியோதெரப்பி மூலம் சரி செய்யலாம், சில ஊனங்களை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.

தொழுநோய் பூரண குணமடையும்:


குணமடையும் (தொழுநோய்க் கிருமிகள் முழுவதும் மருந்தின் மூலம் கொல்லப்படுகிறது,எனவே எந்த நிலையிலும் குணமாகும்)

தொழுநோய்

தொழுநோய்கிருமிகளை எதிர்க்க கூடிய சக்தி இல்லாத எவருக்கும் தொழுநோய் வரும். தொழுநோய்க்கிருமிகள் காற்றின் மூலம் பரவுகிறது. நோய்கிருமிகளை ஒவ்வொருவரும் சுவாசம் மூலம் பெரும் வாய்ப்புள்ளது. இருப்பினும் நோய் எதிர்ப்பு சக்தி 100க்கு 98 பேருக்கு இயற்கையாகவே உள்ளது. தடுப்பு மருந்து இல்லை.

சிகிச்சை:

தொழுநோய்க்கு சிகிச்சை தற்போது அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படுகிறது.

Multidrug therapy(MDT)மருந்துகள்

பரிசோதனை:அரசு மருத்துவமனைகளில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பரிசோதனை செய்யப்படுகிறது. வந்த பின் வருந்துவதை விட வருமுன் காப்பதே நலம் என்பதை மனதில் கொண்டு "தொழுநோய் ஒழிப்புத்திட்டத்தை தீவிரமாக்கி தொழுநோய் இல்லாத உலகை உருவாக்குவோம்" என்று உறுதி பூண்டு செயல்படுவோம்.


தொகுப்பு நான் படித்த வலைபக்கத்தின் தொகுப்பிலிருந்து ஒரு சில கருத்துக்களை எடுக்கப்பட்டது சுட்டி காட்டிஉள்ளேன்.

எனவே  எல்லாம் புகழும் இதை எழுதிய ஆசிரியர்க்கே......
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழு_நோய்&oldid=759965" இலிருந்து மீள்விக்கப்பட்டது