செப்டம்பர் 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஅழிப்பு: ksh:15. Sepptämmber |
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: ltg:Rudiņa mieneša 15 dīna |
||
வரிசை 125: | வரிசை 125: | ||
[[lmo:15 09]] |
[[lmo:15 09]] |
||
[[lt:Rugsėjo 15]] |
[[lt:Rugsėjo 15]] |
||
[[ltg:Rudiņa mieneša 15 dīna]] |
|||
[[lv:15. septembris]] |
[[lv:15. septembris]] |
||
[[mhr:15 Идым]] |
[[mhr:15 Идым]] |
06:34, 25 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்
<< | செப்டம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMXXIV |
செப்டம்பர் 15 கிரிகோரியன் ஆண்டின் 258வது நாளாகும். நெட்டாண்டுகளில் 259வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 107 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 668 - பைசண்டைன் பேரரசன் இரண்டாம் கொன்ஸ்டன்ஸ் இத்தாலியில் கொல்லப்பட்டான்.
- 1556 - புனித ரோமப் பேரரசின் முன்னாள் பேரரசன் ஐந்தாம் சார்ல்ஸ் ஸ்பெயின் திரும்பினான்.
- 1812 - நெப்போலியன் பொனபார்ட் தலைமையில் பிரெஞ்சுப் படைகள் மொஸ்கோவில் கிரெம்ளின் மாளிகையை அடைந்தனர்.
- 1821 - ஸ்பெயினிடமிருந்து கொஸ்டா ரிக்கா, எல் சல்வடோர், குவாத்தமாலா, ஹொண்டுராஸ், நிக்கராகுவா ஆகியன கூட்டாக விடுதலையை அறிவித்தன.
- 1835 – சார்ள்ஸ் டார்வின் கடல் வழியே காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்
- 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் வேர்ஜீனியாவின் ஹார்ப்பர்ஸ் துறையைக் கைப்பற்றினர்.
- 1873 - பிரெஞ்சு-புரூசியப் போர்: கடைசி ஜெர்மானியப் படையினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர்.
- 1916 - முதலாம் உலகப் போர்: சோம் என்ற இடத்தில் முதற்தடவையாக தாங்கிகள் போரில் ஈடுபடுத்தப்பட்டன.
- 1935 - ஜெர்மனியில் யூதர்களுக்கு குடியுரிமை சட்டபூர்வமாக மறுக்கப்பட்டது.
- 1935 - நாசி ஜெர்மனி சுவாஸ்டிக்காவுடன் கூடிய புதிய கொடியை அறிமுகப்படுத்தியது.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவில் பெரும் எண்ணிக்கையான ஜெர்மனிய வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: போர் தொடர்பான நிலப்பாட்டை எடுப்பதற்காக பிராங்கிளின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சேர்ச்சில் ஆகியோர் இரண்டாம் தடவையாக கியூபெக் நகரில் சந்தித்தனர்.
- 1945 - தெற்கு புளோரிடாவிலும் பகாமசிலும் சூறாவளி காரணமாக 366 விமானங்கள் சேதமடைந்தன.
- 1950 - கொரியப் போர்: அமெரிக்கப் படைகள் கொரியாவில் தரையிறங்கின.
- 1952 - ஐநாவின் ஒப்புதலுடன் எரித்திரியா எதியோப்பியாவுடன் இணைக்கப்பட்டது.
- 1958 - நியூ ஜேர்சியில் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 58 பேர் கொல்லப்பட்டனர்.
- 1959 - நிக்கிட்டா குருசேவ் ஐக்கிய அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட முதல் சோவியத் தலைவர் ஆனார்.
- 1963 - ஐக்கிய அமெரிக்காவின் பேர்மிங்ஹாமில் ஆபிரிக்க-அமெரிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 4 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
- 1968 - சோவியத்தின் சொண்ட் 5 விண்கலம் ஏவப்பட்டது. சந்திரனைச் சுற்றி வந்து பூமியின் காற்று மண்டலத்தினுள் நுழைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
- 1975 - பிரெஞ்சுத் தீவான கோர்சிக்கா இரண்டு நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.
- 1981 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
- 1987 - இந்திய அமைதிப் படைக்கெதிராக திலீபன் நீராகாரம் இன்றி உண்ணாநோன்பைத் தொடங்கினார்.
பிறப்புக்கள்
- 1254 - மார்க்கோ போலோ, இத்தாலிய நாடுகாண் பயணி (இ. 1324)
- 1857 - வில்லியம் டாஃப்ட், ஐக்கிய அமெரிக்காவின் 27ஆம் குடியரசுத் தலைவர் (இ. 1930)
- 1890 - அகதா கிறிஸ்டி, எழுத்தாளர் (இ. 1976)
- 1909 - சி. என். அண்ணாதுரை, திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை ஆரம்பித்தவர், தமிழ்நாடு முதலமைச்சர் (இ. 1969)
- 1967 - ரம்யா கிருஷ்ணன், திரைப்பட நடிகை
இறப்புகள்
- 1950 - மறைமலை அடிகள், தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர், (பி. 1876).
சிறப்பு நாள்
- அனைத்துலக மக்களாட்சி நாள்
- கொஸ்டா ரிக்கா - விடுதலை நாள் (1821)
- எல் சல்வடோர் - விடுதலை நாள் (1821)
- குவாத்தமாலா - விடுதலை நாள் (1821)
- ஹொண்டுராஸ் - விடுதலை நாள் (1821)
- நிக்கராகுவா - விடுதலை நாள் (1821)