ஏ. நேசமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 6: வரிசை 6:
| imagesize = 125px
| imagesize = 125px
|birth_date = {{Birth date|df=yes|1895|07|12}}
|birth_date = {{Birth date|df=yes|1895|07|12}}
|birth_place = மறங்கோணம், கல்குளம் தாலூகா, [[திருவிதாங்கூர்]]
|birth_place = மறங்கோணம், [[கல்குளம்|கல்குளம் தாலூகா]], [[திருவிதாங்கூர்]]
| order1 = [[நாகர்கோயில் மக்களவைத் தொகுதி]] உறுப்பினர்
| order1 = [[நாகர்கோயில் மக்களவைத் தொகுதி]] உறுப்பினர்
| term_start1 = 1952
| term_start1 = 1952

12:19, 13 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

ஏ. நேசமணி
A. Nesamony
படிமம்:நேசமணி.jpg
நாகர்கோயில் மக்களவைத் தொகுதி உறுப்பினர்
பதவியில்
1952–1957
பதவியில்
1962–1968
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1895-07-12)12 சூலை 1895
மறங்கோணம், கல்குளம் தாலூகா, திருவிதாங்கூர்
இறப்பு1968
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு, இந்திய தேசிய காங்கிரஸ்
கல்விதிருவனந்தபுரம் மகாராஜா கல்லூரி
தொழில்அரசியல்வாதி

மார்சல் ஏ. நேசமணி (Marshal A. Nesamony, சூன் 12, 1895 - 1968) தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்ட அரசியல்வாதி. இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் திருவிதாங்கூர் சமத்தானத்துடன் (கேரளா) இருந்த குமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்கப் பல போராட்டங்கள் நடத்தி 1956 நவம்பர் 11இல் குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க தலைமையேற்று பாடுபட்டவர் இவர்.

குமரி விடுதலைப் போராட்டம்

இந்தியா சுதந்திரம் பெற்றபோது, கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் இணைந்திருந்தது. ஆனால், அங்கு பெரும்பாலானோர் தமிழ் மொழி பேசுபவர்களாக இருந்தனர். இவர்கள், இம்மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க விரும்பினர். இதற்கான போராட்டம் வெடித்தபோது, அதை அடக்க, கேரள அரசு கடும் முயற்சிகள் மேற்கொண்டது. நேசமணி தலைமையில் இந்த போராட்டம் எழுச்சி பெற்றது.நீண்ட போராட்டத்துக்கு பின், 1956 நவ.,1 ல் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது. அதன் பின், குமரி மாவட்டம் பல்வேறு வளர்ச்சிகளை பெற்றது.இந்தியாவின் தென் எல்லை குமரிமாவட்டம். மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது குமரிமாவட்டம் கேரளாவின் ஆளுகைக்குள் சென்றது. ஆனால் இந்த மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் சேர்க்க வேண்டும் என்று இங்குள்ள மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை முன்னெடுத்து சென்றவர்களில் முக்கியமானவர் நேசமணி. தமிழர்களின் சமூக பண்பாட்டு விடுதலைக்காகவும், தமிழகத்தின் தென் எல்லையாக குமரியை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் தன்னையே அர்ப்பணித்து தியாகம் செய்தவர் நேசமணி.

இதனால் மார்ஷல் நேசமணி என்று இம்மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். தொடர்ந்து நடந்த போராட்டத்தின் காரணமாக குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. தமிழகத்தின் தென் எல்லையாக குமரிமாவட்டம் மாறியது[1][2][3].

வாழ்க்கை வரலாறு

நேசமணி இளம் வயதிலேயே சமூக விடு தலைக்காக போராடியவர். பி.ஏ. பட்டம் படித்து ஆசிரியர் தொழிலில் ஈடுபட்ட இவர், பின்னர் திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சேர்ந்து பி.எல். பட்டம் பெற்றார்.பின்னர் நாகர்கோவில் கோர்ட்டில் வக்கீலாக பதிவு செய்து பணியாற்றினார். பொது வாழ்க்கையில் ஈடுபட்ட பின்பு நாகர்கோவில் நகர்மன்ற தலைவராகவும் இருந்தார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. வாகி சட்டசபைக்கும் சென்றார்[4][5][6][7].

பொதுப்பணி

நேசமணி அரசியலில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட பின்பு தமிழக காங்கிரசின் தலைவராகவும் ஆனார். பின்னர் நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக பிரதமர் நேருவால் பாராட்டப்பட்டார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._நேசமணி&oldid=629698" இலிருந்து மீள்விக்கப்பட்டது