டி. எஸ். சொக்கலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: டி.எஸ். சொக்கலிங்கம் 'பேனா மன்னன்' என்று அழைக்கப்பட்ட டி.எஸ்....
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
பிறப்பு: 1899 மே 3ஆம் தேதி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியில் பிறந்தார். 1966 ஜனவரி 9ஆம் தேதி மறைந்தார்.
டி.எஸ். சொக்கலிங்கம்
'பேனா மன்னன்' என்று அழைக்கப்பட்ட டி.எஸ்.சொக்கலிங்கம், இந்திய விடுதலைப் போராளி. காந்தியத்தில் தீவிர பற்றுக்கொண்ட சொக்கலிங்கம், 1920களில் தனது 21ஆவது வயதில் இதழியல் துறையில் காலடி வைத்தார். சுதந்திரப் போரில் சொக்கலிங்கத்தின் கூர்மையான எழுத்து, போராட்டத்துக்கு பலம் சேர்த்தது.
'பேனா மன்னன்' என்று அழைக்கப்பட்ட டி.எஸ்.சொக்கலிங்கம், இந்திய விடுதலைப் போராளி. காந்தியத்தில் தீவிர பற்றுக்கொண்ட சொக்கலிங்கம், 1920களில் தனது 21ஆவது வயதில் இதழியல் துறையில் காலடி வைத்தார். சுதந்திரப் போரில் சொக்கலிங்கத்தின் கூர்மையான எழுத்து, போராட்டத்துக்கு பலம் சேர்த்தது.

15:19, 6 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

பிறப்பு: 1899 மே 3ஆம் தேதி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியில் பிறந்தார். 1966 ஜனவரி 9ஆம் தேதி மறைந்தார்.

'பேனா மன்னன்' என்று அழைக்கப்பட்ட டி.எஸ்.சொக்கலிங்கம், இந்திய விடுதலைப் போராளி. காந்தியத்தில் தீவிர பற்றுக்கொண்ட சொக்கலிங்கம், 1920களில் தனது 21ஆவது வயதில் இதழியல் துறையில் காலடி வைத்தார். சுதந்திரப் போரில் சொக்கலிங்கத்தின் கூர்மையான எழுத்து, போராட்டத்துக்கு பலம் சேர்த்தது.

காந்தியின் அறைகூவலை ஏற்று பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றார். சேலம் வரதராஜூலு தொடங்கி நடத்திவந்த தமிழ்நாடு இதழில்தான் சொக்கலிங்கத்தின் இதழியல் அறங்கேற்றம் நடந்தது. தமிழ்நாடு இதழில் தன்னை இணையற்ற பத்திரிகையாளராக அடையாளப்படுத்திக் கொண்ட சொக்கலிங்கம், பின்னர், 'காந்தி' என்ற வாரம் இருமுறை இதழை தொடங்கினார். பிறகு, வ.ரா, சீனிவாசன் ஆகியோரோடு இணைந்து மணிக்கொடி இதழைத் தொடங்கினார். பின்னர், சதானந்த் தொடங்கிய தினமணி இதழின் முதல் ஆசிரியராகப் பொறுபேற்றார்,

'இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழரும் தன்னைத் தமிழர் என்று பெருமையுடன் கூறிக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு வெளியே சென்றால் தன்னை இந்தியன் என்று பெருமை பொங்க அழைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் என்றால் - தமிழ்நாட்டில் பிறந்த, தமிழ்நாட்டை தன் வசிப்பிடமாகக் கொண்ட, இந்து, முஸ்லீம், கிறித்தவர்கள் மற்றும் தமிழ்பேசும் அனைவரும்தான்' என்று தினமணியின் முதல் தலையங்கத்தில் குறிப்பிட்டு, தினமணியின் தரத்தையும், கொள்கையையும் திறம்பட வெளிப்படுத்தினார் சொக்கலிங்கம். சுதந்திரப் போராட்ட காலத்தில் விடுதலைப் போராளிகளின் குரலாகவும், ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கு எதிரான ஆயுதமாகவும் தினமணி தலையங்கங்கள் திகழ்ந்தன. அதற்கு முதல் காரணகர்த்தா டி.எஸ்.சொக்கலிங்கமே!.

சொக்கலிங்கம், தினமணி ஆசிரியராக இருந்தபோது, ஏ.என்.சிவராமன், புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி உள்ளிட்டோர் துணை ஆசிரியர்களாக இருந்தனர். தினமணி பின்னர், கோயங்கா குழுமத்துக்கு கைமாறியது. 1943இல், தினமணியில் இருந்து வெளியேறினார் சொக்கலிங்கம்,. புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி ஆகியோரும் அப்போது வெளியேறினர். பின்னர் 1944இல் தினசரி என்ற நாளிதழைத் தொடங்கினார். வியாபாரத்துக்காக சமரசங்களை கையாளாமல், நேர்மிகு பார்வையுடன் தினசரியை நடத்தியதால் சிறிது காலத்துக்கு மேல் அந்த இதழ் தாக்குப்பிடிக்காமல் திணறியது. ஒரு கட்டத்துக்கு மேல் நின்று போனது. ஆனாலும் மனம் தளராத சொக்கலிங்கம், ஜனயுகம், பாரதம், நவசக்தி உள்பட பல பத்திரிகைகளை நடத்தினார்.

புதுமைப்பித்தன் என்ற எழுத்தாளன் தமிழ் இலக்கிய உலகுக்கு கிடைக்க காரணமாக இருந்தவர் சொக்கலிங்கம். தினமணி, மணிக்கொடி, காந்தி உள்ளிட்ட, தான் பணியாற்றிய அத்தனை இதழ்களிலும் புதுமைப்பித்தனுக்கு வாய்ப்பளித்தார்.

சிறந்த இதழியலாளர் மட்டுமல்ல, சொக்கலிங்கம் சிறந்த படைப்பிலக்கியவாதியும்கூட! லியோ டால்ஸ்டாயின் புகழ்பெற்ற நாவலான வார் அன்ட் பீஸ் நாவலை போரும் அமைதியும் என்ற பெயரில் தமிழாக்கம் செய்தது மிகச்சிறந்த இலக்கியப்பணி. இது தவிர, சிறுகதை, நாவல், கவிதை என இலக்கியத்தின் அத்தனை துறைகளிலும் சிறப்பான பங்கினை நல்கியுள்ளார் சொக்கலிங்கம்,.

சொக்கலிங்கத்துக்கு பின்னர் தினமணி ஆசிரியர் பொறுப்புக்கு அவரின் நெருங்கிய நண்பரான ஏ.என்.சிவராமன் வந்தார். தினமணியில் இருந்து வெளியேறிய சொக்கலிங்கம், இக்கட்டான ஒரு நேரத்தில் மீண்டும் தினமணியில் ஒரு பணிக்கு வர நேர்ந்தது. அதற்கு காரணமாக இருந்ததும் ஏ.என்.சிவராமனே. அந்தச் சூழலில் தினமணி நிர்வாகம் சொக்கலிங்கத்துக்கு நிர்வாகத்தில் ஒரு பணியை அளித்தது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._எஸ்._சொக்கலிங்கம்&oldid=589871" இலிருந்து மீள்விக்கப்பட்டது