தமிழிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
வரிசை 12: | வரிசை 12: | ||
சங்கம் மருபிய நூலான [[சிலப்பதிகாரத்தில் தமிழிசை|சிலப்பதிகாரம் தமிழிசை]] பற்றி பல விரிவான விளக்கங்களைத் தருகிறது.[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தின்]] [[அரும்பதவுரை]]யும், [[அடியார்க்கு நல்லாருரை]]யும் மேலும் பல பயனுள்ள குறிப்புக்களைத் தருகின்றன. இக் காலத்தின் எழுதப்பெற்ற [[மணிமேகலை]], [[திருமந்திரம்]], [[சீவக சிந்தாமணி]] ஆகிய நூல்களிலும் தமிழிசை பற்றிய செய்திகள் உள்ளன. |
சங்கம் மருபிய நூலான [[சிலப்பதிகாரத்தில் தமிழிசை|சிலப்பதிகாரம் தமிழிசை]] பற்றி பல விரிவான விளக்கங்களைத் தருகிறது. [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தின்]] [[அரும்பதவுரை]]யும், [[அடியார்க்கு நல்லாருரை]]யும் மேலும் பல பயனுள்ள குறிப்புக்களைத் தருகின்றன. இக் காலத்தின் எழுதப்பெற்ற [[மணிமேகலை]], [[திருமந்திரம்]], [[சீவக சிந்தாமணி]] ஆகிய நூல்களிலும் தமிழிசை பற்றிய செய்திகள் உள்ளன. |
||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
18:18, 6 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்
- குறிப்பு: இக் கட்டுரை தற்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்ச் சூழலில் வளர்ச்சி பெற்ற இசை முறைமை தமிழிசை ஆகும். தாலாட்டில் இருந்து ஒப்பாரி வரை தமிழர் வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் இசை ஒரு முக்கிய கூறு. இயல், இசை, நாடகம் என்று தமிழை முத்தமிழாகப் பாகுபடுத்தி, இசைக்கு முன்னுருமை தொன்று தொட்டு தரப்பட்டது. பண்டைப் பண் இசை, செவ்வியல் தமிழ் இசை, பக்தி இசை, நாட்டார் இசை, திரையிசை, சொல்லிசை என தமிழிசையின் வடிவங்கள் பல. கால ஓட்டத்தில் தமிழிசை சிறப்புற்று இருந்த காலங்களும் உள்ளன, வேற்று மொழிகளின் மரபுகளின் ஆதிக்கத்தில் தேக்க நிலையில் இருந்த காலங்களும் உள்ளன. 20 ம் நூற்றாண்டில் தமிழிசை மீட்டுக்கப்பட்டு, மீளுருவாக்கம் செய்யப்பட்டு, தற்போது மீண்டும் வளர்ந்து வருகிறது.
ஆதாரங்கள்
முதன்மைக் கட்டுரை: தமிழிசை ஆதாரங்கள் பட்டியல்
வாய்மொழி இலக்கியங்கள், எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், தமிழிசை ஆய்வுகள், அயல்நாட்டார் குறிப்புகள் ஆகியவை தமிழிசை பற்றிய் அறிய எமக்கு உதவுகின்றன. சங்க நூல்களான தொல்காப்பியம், கூத்தநூல், பரிபாடல், புறநானூறு, அகநானூறு, பத்துப்பாட்டு ஆகிய நூல்களில் தமிழிசை பற்றிய குறிப்புகள் பல உள்ளன. பெருநாரை, பெருங்குருகு, பேரிசை, சிற்றிசை, இசைநுணுக்கம், பஞ்ச மரபு போன்ற தற்போது கிடைக்கப்பெறாத பல பண்டைத் தமிழிசை நூல்கள் பற்றிய குறிப்புகளையும் பிற நூல்கள் வரையாக அறியமுடிகிறது.
சங்கம் மருபிய நூலான சிலப்பதிகாரம் தமிழிசை பற்றி பல விரிவான விளக்கங்களைத் தருகிறது. சிலப்பதிகாரத்தின் அரும்பதவுரையும், அடியார்க்கு நல்லாருரையும் மேலும் பல பயனுள்ள குறிப்புக்களைத் தருகின்றன. இக் காலத்தின் எழுதப்பெற்ற மணிமேகலை, திருமந்திரம், சீவக சிந்தாமணி ஆகிய நூல்களிலும் தமிழிசை பற்றிய செய்திகள் உள்ளன.
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
- அ. சண்முகதாஸ். (1998). தமிழின் பா வடிவங்கள். சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
வெளி இணைப்புகள்
- தமிழிசை தழைக்க...
- தமிழ் மக்கள் இசை விழா - விடுதலையின் காலைக் கதிர்
- சிறப்பு ஒலிப்பேழை - இசைத்தமிழ். பகுதி-1 பேராசிரியர் திருமுருகன்
- இசை இன்பம்
- தமிழிசை - (ஆங்கில மொழியில்)
- புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் பாடல் தொகுப்பு
- உளியின் ஓசை - ராஜாவின் ஓசை
- தமிழிசை மீட்போம்
- இசைத்தமிழ்
- தமிழிசை வரலாறு - ஒரு விளக்கம்