கோடியக்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 10°17′16″N 79°51′54″E / 10.2878°N 79.8651°E / 10.2878; 79.8651
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி வேதாரண்யம் காடுகள்
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி '''சிறப்புமிக்க சோழர் கால கலங்கரைவிளக்கம் 2004ஆம் ஆண்டு சுனாமியின்போது அழிபட்டது.'''
வரிசை 3: வரிசை 3:
'''கோடிக்கரை''' அல்லது '''கோடியக்கரை''' இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ள கடற்கரைப் பகுதியாகும். இது ''காலிமர் முனை'' அல்லது ''கள்ளி மேடு'' (''Point Calimere'')எனவும் அழைக்கப்படுகிறது.
'''கோடிக்கரை''' அல்லது '''கோடியக்கரை''' இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ள கடற்கரைப் பகுதியாகும். இது ''காலிமர் முனை'' அல்லது ''கள்ளி மேடு'' (''Point Calimere'')எனவும் அழைக்கப்படுகிறது.


காவிரி கழிமுகப்பகுதி (டெல்டா)வில் கடற்கரைக்கு செங்குத்தாக அமைந்துள்ளது.இங்கிருந்த வரலாற்று '''சிறப்புமிக்க சோழர் கலங்கரைவிளக்கம் 2004ஆம் ஆண்டு சுனாமியின்போது அழிபட்டது.'''
காவிரி கழிமுகப்பகுதி (டெல்டா)வில் கடற்கரைக்கு செங்குத்தாக அமைந்துள்ளது.இங்கிருந்த வரலாற்று '''சிறப்புமிக்க சோழர் கால கலங்கரைவிளக்கம் 2004ஆம் ஆண்டு சுனாமியின்போது அழிபட்டது.'''


==வேதாரண்யம் காடுகள்==
==வேதாரண்யம் காடுகள்==

03:49, 26 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்

கோடிக்கரை - ஒரு பறவை பார்வையில்

கோடிக்கரை அல்லது கோடியக்கரை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ள கடற்கரைப் பகுதியாகும். இது காலிமர் முனை அல்லது கள்ளி மேடு (Point Calimere)எனவும் அழைக்கப்படுகிறது.

காவிரி கழிமுகப்பகுதி (டெல்டா)வில் கடற்கரைக்கு செங்குத்தாக அமைந்துள்ளது.இங்கிருந்த வரலாற்று சிறப்புமிக்க சோழர் கால கலங்கரைவிளக்கம் 2004ஆம் ஆண்டு சுனாமியின்போது அழிபட்டது.

வேதாரண்யம் காடுகள்

இங்குள்ள சதுப்புநிலக் காடுகள்,வேதாரண்யம் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன,கிழக்கு தக்காணத்தின் உலர்பசுமை காடுகளில் எஞ்சியிருப்பதாகும். கோடிக்கரை சரணாலயம் வன விலங்குகள் சரணாலயம், பறவைகள் சரணாலயம், இரண்டுமே ஒன்றிணைந்ததாக கொண்டுள்ளது. சூன் 13, 1967ஆம் ஆண்டு 24.17 சதுர கிமீ பரப்பில் அமைக்கப்பட்ட இதற்கு மேற்கே 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராஜாமடம் வரை சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. இந்தக் காடுகள் இரண்டு இடங்களில் உப்பங்கழிகளாக கடல் நீர் புகுந்து உப்பு ஏரியாக 30 கிலோ மீட்டர் நீளம் 5 கிலோ மீட்டர் அகலத்துக்கு நிற்கின்றது. இந்த உப்பு ஏரிகளில் முத்துப்பேட்டை, திருத்துறை பூண்டி மற்றும் மேல்மருதூர் பகுதியிலிருந்து மூன்று நதிகள் சங்கமம் ஆகின்றன. 1988ஆம் ஆண்டு தலைஞாயிறு பாதுகாக்கப்பட்ட காடுகளையும் இணைத்து 377 சதுர கிமீ பரப்பிற்கு விரிவாக்கப்பட்டது. குளிர்கால வரவிகளுக்கு தகுந்த இடமாதலால் பல பறவைகள் இங்கு வருகின்றன. [1] இங்குள்ள உப்பங்கழிகளில் சிக்கும் கடல்வாழினங்கள் குளிர்கால பறவைகளுக்கு உணவாக அமைகின்றன. ஆயினும் விவசாய நிலங்களிலிருந்தும் மீன்பண்ணைகளிலிருந்தும் கலக்கும் உயிர்கொல்லி மருந்துகளின் எச்சங்கள் இச்சூழலில் கலந்து இப்பறவைகளின் சதைகளிலும் காண முடிகிறது.[2]

முத்துப்பேட்டை சதுப்புநிலக்காடுகள்

இங்கே உள்ள வன விலங்குச் சரணாலயத்தில் பலவித மான்கள் முக்கியமாக கருமான்கள் மற்றும் காட்டுப் பன்றிகள் அதிகமாக உள்ளன.

கோடிக்கரையின் முனையின் உயரமான இடம் 4 மீட்டர் உயரமுள்ளது. இதனை இந்து தொன்மவியலில் இராமாயணத்தில் இராமர் இங்கிருந்து இராவணனுடன் போரிட்டதாகவும் அவரது கால்தடங்கள் காணப்படுவதகவும் குறிப்பிடுகிறது.

மேற்கோள்கள்

  1. Sharma, Arunayan (2003). "First records of Spoon-billed Sandpiper Calidris pygmeus in the Indian Sundarbans delta, West Bengal" (PDF). Forktail 19: 136–137. http://www.orientalbirdclub.org/publications/forktail/19pdfs/Sharma-SpoonbilledSand.pdf. 
  2. Sethuraman, A and AN Subramanian (2003). "Organochlorine residues in the avifauna of Tamil Nadu (Southeast coast of India)". Chemistry and Ecology 19 (4): 247–261. doi:10.1080/02757540310001596843. 

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடியக்கரை&oldid=564185" இலிருந்து மீள்விக்கப்பட்டது