ஒப்பாரிப் பாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
|||
வரிசை 52: | வரிசை 52: | ||
''முதலிமார் மதித்த முகம்'' |
''முதலிமார் மதித்த முகம்'' |
||
''தங்கம் பதித்த முகம்'' |
''தங்கம் பதித்த முகம்'' |
||
''தரணிமார் மதித்த முகம்... |
''தரணிமார் மதித்த முகம்...' |
||
' |
|||
Koyiluku ner kilakke |
|||
Kumbamgila valai kumbakarna nal valai |
|||
koombittu inininathu antha |
|||
Koyilukkum porukalaiyoo - Inniku |
|||
Koyanathi kathadiko - antha |
|||
Kopuramum sayithidiche -inniku |
|||
kumbakarna nalvalai |
|||
Kulai udainthum poyiduche. |
|||
Malikaiku ner merke |
|||
Malarntha ila valai |
|||
Manjavarma nal valai |
|||
malarittu innuthu - antha |
|||
Maligaikum porukkulaio - innikku |
|||
Malayakoil kathadiko - antha |
|||
maligaium sayithidiche - inniku |
|||
Manjavarma nalvalai |
|||
Mararudainthum poyiduche. |
|||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
11:36, 31 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்
ஒப்பாரி என்பது கிராமிய மக்களின் வாழ்க்கையோடு அவர்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்த நாட்டுப் பாடல் வகைகளில் ஒன்று. கிராமத்து மக்கள் வாழ்க்கையில் இசையானது பின்னிப் பிணைந்து காணப்படுகின்றது. மனிதரைக் கவரவல்ல உணர்ச்சி மிக்க பாடல்கள் தாலாட்டும் ஒப்பாரியும் ஆகும். மனித வாழ்க்கையின் தொடக்கத்தில் பாடப்படுவது தாலாட்டு ஆகும். வாழ்க்கையின் முடிவில் பாடப்படுவது ஒப்பாரி. தாய், தந்தை, கணவன், பிள்ளை, உற்றார், உறவினர் எவரேனும் இறந்து விட்டால் ஒருவருடைய உள்ளத்தில் எழுகின்ற துன்ப உணர்வே ஒப்பாரியாக வெளிப்படுகின்றது.
இறந்தவர்களின் வரலாறு பற்றித் தெரியாதவர்கள் அப்பாடல் மூலம் வரலாற்றினை அறிய முடியும். ஒப்பாரிப் பாடல்களின் இசை, விளம்பமும் மத்யமும் கலந்த ஒரு லய அமைப்பில் முகாரி, ஆகிரி முதலான இராகச் சாயலுடன் விளங்குகின்றது.
நாட்டுப்புறங்களில் இழவு வீடுகளில் உறுமி எனப்படும் ஒரு இசைக்கருவி இசைக்கப்படும். இன்னைக்கி உறுமிச் சத்தம் கேட்டதென்ன எனப் புலம்பும் ஒரு ஒப்பாரிப் பாடலில் இருந்து, உறுமி சில வட்டாரங்களில் இறப்புக்கான ஒரு குறியீட்டு இசைக்கருவியாக பயன்படுத்தபட்டமை தெரிய வருகின்றது.
மகனை பலிகொடுத்த தாய்
1980 பின்னர் ஈழப்போராட்டத்தில் பிள்ளைகளை பறிகொடுத்த தாய்களின் ஒப்பாரி.
நீ போருக்கு போனடத்தை போராடி மாண்டாய் ஐயா மகனே பாரத்துவக்கெடுத்தோ உங்களுக்கு பயந்தவெடி வச்சானோ உங்களுக்கு பெரிய துவக்கொடுத்தோ உங்கள பேசாமல் சுட்டெறிந்தான் மகனார் உன்ன சந்தியல கண்டடத்தை உன்னைபெத்த கறுமி தலைவெடித்துப் போறனையா மகனார் நீகப்பலில வாராயெண்டோ நாங்க கடலருகில் காத்திருந்தோம் மகனே நீ இருந்த இடத்தைப் பார்தாலும் இரு தணலாய் மூளுதையா நீ படுத்த இடத்தை பார்தாலும் பயம் பயமாய் தோன்றுதடா மகனே உன்னைப் பெற்ற கறுமி நான் இங்க உப்பலந்த நாழியைப்போல் நீ இல்லாம நாள்தோறும் உக்கிறனே
தாயாரின் ஒப்பாரி
பொன்னான மேனியிலே - ஒரு பொல்லாத நோய் வந்ததென்ன தங்கத் திருமேனியிலே - ஒரு தகாத நோய் வந்ததென்ன...
மனைவியின் ஒப்பாரி
முத்து பதித்த முகம் முதலிமார் மதித்த முகம் தங்கம் பதித்த முகம் தரணிமார் மதித்த முகம்...'
'
Koyiluku ner kilakke Kumbamgila valai kumbakarna nal valai koombittu inininathu antha Koyilukkum porukalaiyoo - Inniku Koyanathi kathadiko - antha Kopuramum sayithidiche -inniku kumbakarna nalvalai Kulai udainthum poyiduche.
Malikaiku ner merke Malarntha ila valai
Manjavarma nal valai
malarittu innuthu - antha
Maligaikum porukkulaio - innikku
Malayakoil kathadiko - antha
maligaium sayithidiche - inniku
Manjavarma nalvalai
Mararudainthum poyiduche.
மேற்கோள்கள்
- ↑ அம்மன்கிளி முருகதாஸ் (தொகுத்தது). 2007. இலங்கைத் தமிழிரிடையே வாய்மொழி இலக்கியம். கொழும்பு: குமரன் புத்தக இல்லம். பக்கங்கள் 51 - 52