ஸ்ரீதர் (இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 42: வரிசை 42:
* தமிழ்த் திரையுலகில் அதுவரை வசனமே செங்கோலோச்சி வந்த நிலையை மாற்றி அந்த தமிழ் வசனத்தை கூட சாதாரன ரசிகர்கள் புரிந்து கொள்ளும் வகையிலும் திரைப்படங்களின் கதைகளத்தையே மாற்றி அழகான வசன உச்சரிப்புடனும் ஒளிப்பதிவு கோணங்களையும் புதுமை முறையில் திரைப்படங்களை இயக்கியதால் '''புதுமை இயக்குனர்''' என்று முதல் முதலில் தமிழ் ரசிகர்களால் போற்றப்பட்டார். மேலும் இவர் தான் இந்திய திரையுலகில் இயக்குனருக்கான ஒரு இடம் பெற்றுத் தந்தவர் ஸ்ரீதர் தான் என்று கூறிப்பிடபடுகின்றது.
* தமிழ்த் திரையுலகில் அதுவரை வசனமே செங்கோலோச்சி வந்த நிலையை மாற்றி அந்த தமிழ் வசனத்தை கூட சாதாரன ரசிகர்கள் புரிந்து கொள்ளும் வகையிலும் திரைப்படங்களின் கதைகளத்தையே மாற்றி அழகான வசன உச்சரிப்புடனும் ஒளிப்பதிவு கோணங்களையும் புதுமை முறையில் திரைப்படங்களை இயக்கியதால் '''புதுமை இயக்குனர்''' என்று முதல் முதலில் தமிழ் ரசிகர்களால் போற்றப்பட்டார். மேலும் இவர் தான் இந்திய திரையுலகில் இயக்குனருக்கான ஒரு இடம் பெற்றுத் தந்தவர் ஸ்ரீதர் தான் என்று கூறிப்பிடபடுகின்றது.
* அவரது திரைப்படங்களின் காட்சியமைப்புக்களையும், காமிரா கோணங்களையும் அவருக்குப் பின்னர் திரையுலகில் பெரும் மாறுதல்களை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.
* அவரது திரைப்படங்களின் காட்சியமைப்புக்களையும், காமிரா கோணங்களையும் அவருக்குப் பின்னர் திரையுலகில் பெரும் மாறுதல்களை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.
* [[கே. பாலசந்தர்]], [[பாரதிராஜா]] ஆகியோர் திரையுலகில் விரும்பி இயக்குனர் ஆனதற்கு காரணமே ஶ்ரீதர் தான் என்று பெருமளவில் பாராட்டியுள்ளனர்.
* மேலும் பின்னாளில் தமிழ் திரையுலகின் பெரும் இயக்குனர்களான [[கே. பாலசந்தர்]], [[பாரதிராஜா]] ஆகியோர் திரையுலகில் விரும்பி இயக்குனர் ஆனதற்கு காரணமே ஶ்ரீதர் தான் என்று பெருமளவில் பாராட்டியுள்ளனர்.
* ஸ்ரீதரின் ஆரம்ப கால படங்களில் பலவற்றிலும் அவருடன் பணியாற்றியவர் [[அ. வின்சென்ட்|ஏ. வின்சென்ட்]] என்ற ஒளிப்பதிவாளர். [[நெஞ்சில் ஓர் ஆலயம்|நெஞ்சில்ஓர்ஆலயம்]] என்னும் திரைப்படத்தில், [[முத்துராமன்]] மற்றும் [[தேவிகா|தேவிகாவின்]] நடிப்பில் "சொன்னது நீதானா" என்னும் பாடல் படமாக்கப்பட்ட கோணங்களும், படத்தொகுப்பும் பெரிதும் பாராட்டப்பட்டன.
* ஸ்ரீதரின் ஆரம்ப கால படங்களில் பலவற்றிலும் அவருடன் பணியாற்றியவர் [[அ. வின்சென்ட்|ஏ. வின்சென்ட்]] என்ற ஒளிப்பதிவாளர். [[நெஞ்சில் ஓர் ஆலயம்]] என்னும் திரைப்படத்தில், [[முத்துராமன்]] மற்றும் [[தேவிகா|தேவிகாவின்]] நடிப்பில் "சொன்னது நீதானா" என்னும் பாடல் படமாக்கப்பட்ட கோணங்களும், படத்தொகுப்பும் பெரிதும் பாராட்டப்பட்டன.
* புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது மட்டும் இன்றி அவர்களைப் பிரபலமான நட்சத்திரங்களாக்குவதிலும் ஸ்ரீதரின் படங்கள் பெரும்பங்கு வகித்தன.
* புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது மட்டும் இன்றி அவர்களைப் பிரபலமான நட்சத்திரங்கள் ஆக்குவதிலும் ஸ்ரீதரின் படங்கள் பெரும்பங்கு வகித்தன.
* '''ஶ்ரீதரால் அறிமுகமாக்கப்பட்ட நட்சத்திரங்கள்''' :-
* '''ஶ்ரீதரால் அறிமுகமாக்கப்பட்ட நட்சத்திரங்கள்''' :-
* 1) [[ரவிச்சந்திரன் (நடிகர்)|ரவிச்சந்திரன்]], [[காஞ்சனா (நடிகை)|காஞ்சனா]] - ([[காதலிக்க நேரமில்லை]])
* 1) [[ரவிச்சந்திரன் (நடிகர்)|ரவிச்சந்திரன்]], [[காஞ்சனா (நடிகை)|காஞ்சனா]] - ([[காதலிக்க நேரமில்லை]])

* 2) [[ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்)|ஸ்ரீகாந்த்]], [[ஜெ. ஜெயலலிதா]], [[வெண்ணிற ஆடை நிர்மலா|நிர்மலா]], [[வெண்ணிற ஆடை மூர்த்தி|மூர்த்தி]] - ([[வெண்ணிற ஆடை]])
* 2) [[ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்)|ஸ்ரீகாந்த்]], [[ஜெ. ஜெயலலிதா]], [[வெண்ணிற ஆடை நிர்மலா|நிர்மலா]], [[வெண்ணிற ஆடை மூர்த்தி|மூர்த்தி]] - ([[வெண்ணிற ஆடை]])

* 3) [[கவிதா (நடிகை)|கவிதா]] - ([[ஓ மஞ்சு]])
* 3) [[கவிதா (நடிகை)|கவிதா]] - ([[ஓ மஞ்சு]])
* இதில் [[வெண்ணிற ஆடை நிர்மலா|நிர்மலா]], [[வெண்ணிற ஆடை மூர்த்தி|மூா்த்தி]] இருவருமே தான் அறிமுகமான படத்தின் பெயரான [[வெண்ணிற ஆடை|வெண்ணிறாடை]] என்ற பெயரே இவர்களுக்கு இன்றளவும் அடைமொழியாக இருந்து வருகிறது.
* இதில் [[வெண்ணிற ஆடை நிர்மலா|நிர்மலா]], [[வெண்ணிற ஆடை மூர்த்தி|மூா்த்தி]] இருவருமே தான் அறிமுகமான படத்தின் பெயரான [[வெண்ணிற ஆடை|வெண்ணிறாடை]] என்ற பெயரே இவர்களுக்கு இன்றளவும் அடைமொழியாக இருந்து வருகிறது.

14:12, 5 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

சி. வி. ஶ்ரீதர்
இந்திய அஞ்சல் தலையில் சி. வி. ஶ்ரீதர்
பிறப்புசித்தாமூர் விசயராகவுலு ஶ்ரீதரகிருஷ்ணன் & (ஶ்ரீதர்)
(1933-07-22)22 சூலை 1933
சித்தாமூர், செங்கல்பட்டு, மதராசு மாகாணம், பிரித்தானிய இந்தியா இந்தியா
இறப்பு20 அக்டோபர் 2008(2008-10-20) (அகவை 75)
சென்னை, தமிழ்நாடு
பணி
செயற்பாட்டுக்
காலம்
1959–1991
பெற்றோர்தந்தை : விஜயராகவுலு ரெட்டியார்
தாயாா் : தாயாரம்மாள்
வாழ்க்கைத்
துணை
தேவசேனா

சி. வி. ஶ்ரீதர்(C. V. Sridhar) (சூலை 221933 - அக்டோபர் 20, 2008) புகழ்பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனரும், வசனகர்த்தாவும் ஆவார். தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் மற்றும் பாலிவுட்டிலும் பெரும் வெற்றியினை ஈட்டியவர் ஸ்ரீதர்.

வாழ்க்கைச் சுருக்கம்

  • ஶ்ரீதரகிருஷ்ணன் என்ற இயற்பெயருடன் பிறந்த ஶ்ரீதர் அவர்கள் விஜயராகவுலு ரெட்டியார் - தாயாரம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் அப்போதையே செங்கல்பட்டு செஞ் ஜோசப் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை முடித்துவிட்டு அவர் படிக்கும் போதே அவருக்கு தமிழ் மீது ஏற்பட்ட பற்றும், காதலும் தான் அவரை ஒரு நல்ல கதாசிரியர் ஆக்கியது தனது 20 வயதிலே தமிழ் உரைநடைகளை எதுகை மோனையுடன் எழுதி பெயர்ச்சி பெற்றும் தனது தாயார் தாயாரம்மாள் அவர்கள் பழம்பெரும் பல புராண புத்தகங்கள் படிக்கும் போது அதில் தமிழை ஏற்ற இறக்கத்துடன் வாசிக்கும் அழகை கண்டு மேலும் அவருக்கு பேச்சிலும் எழுத்திலும் அவருக்கு தமிழில் வசன கர்த்தாவாக மாற்றியது.
  • மேலும் அவர் பள்ளி பருவத்தில் அங்கு நடத்தப்படும் கலை நிகழ்ச்சி நாடக போட்டிகளில் தமிழ் வசனத்தை மையமாக வைத்து இவர் பல கதைகளை எழுதியுள்ளார் ஆனால் அது ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளி என்பதால் மற்ற மாணவர்களை விட இவரே தமிழை அழகான உச்சரிப்புடன் பேசி நடித்தார்.
  • அதே போல் அந்த சிறு வயதிலே அவர் ஒரு அழகிய கதையுடன் சென்னையில் உள்ள ஏ. வி. எம் நிறுவனத்தில் இயக்குனர் ப. நீலகண்டன் அவர்களிடம் அந்த கதையை காட்டிய போது அதை படித்து பார்த்துவிட்டு மிகவும் நன்றாக உள்ளது ஆனால் நீ இன்னும் பெரிய ஆளாக வளர்ந்த பிறகு இதை படமாக்கலாம் என்று கூறிவிட்டார்.
  • ஆனால் அந்த நேரத்தில் மனம் தளராத ஶ்ரீதர் அடுத்ததாக டி.கே.டி சகோதர்கள் சொந்தமாக நடத்தி வந்த நாடக சபாவில் உள்ள தி. க. சண்முகம் அவர்களிடம் காட்டிய போது அதை விரைவில் நாடகம் ஆக நடத்தபட்டு அதை திரைப்படம் ஆக எடுக்க நினைத்த தி. க. சண்முகம் அவர்கள் அந்த கதையில் சில திருத்தங்களை ஶ்ரீதரை தனது அலுவலகத்திலேயே சரிசெய்ய சொன்ன பிறகு அந்த கதையில் மிகவும் சுவாரஸ்யமாக தனது சிறு வயதான 20 வயதில் இவ்வளவு அபாரமான கதை அமைப்பை தந்திரசாலியாக ஶ்ரீதர் அவர்கள் திருத்தி எழுதியதை கண்டு தி. க. சண்முகம் பாராட்டினார்.
  • பின்பு அந்த கதை நாடகமாக நடத்தப்பட்டு திரைப்படமாக 1954 ஆம் ஆண்டு ரத்த பாசம் என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார் ஸ்ரீதர்.
  • அந்த நாட்களில் மிகுந்த புகழ் பெற்றிருந்த திரைப்பட வசனகர்த்தாவான இளங்கோவன் வசனத்தால் ஈர்க்கப்பட்டு திரையுலகை நாடினார் ஸ்ரீதர்.
  • அதனால் அவருடன் இணைந்து 1963 ஆம் ஆண்டு சித்தூர் ராணி பத்மினி என்ற திரைப்படத்தில் கதை-வசனம் எழுதும் வாய்ப்பை பெற்றிருந்தார்.
  • மேலும் ஶ்ரீதர் தனது தொடக்ககாலத்தில் எதிர்பாராதது, மாமன் மகள், அமரதீபம், மாதர் குல மாணிக்கம், யார் பையன், எங்கள் வீட்டு மகாலட்சுமி, உத்தம புத்திரன், மஞ்சள் மகிமை போன்ற பல திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாகப் பணி புரிந்து வந்தார்.
  • ஸ்ரீதர் இயக்கிய முதல் படமான கல்யாணப்பரிசு ஜெமினிகணேசன், சரோஜாதேவி மற்றும் விஜயகுமாரி ஆகியோரின் நடிப்பில் 1957ஆம் ஆண்டு முதல் தயாரிப்பில் இருந்து இரண்டு வருடம் கழித்து 1959 ஆம் ஆண்டு வெளியானது.
  • வீனஸ் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்திற்காக ஸ்ரீதர் இயக்கிய இத்திரைப்படம், நடிகை சரோஜாதேவி அவர்கள் அதற்கு முன்பு தமிழில் பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் கதாநாயகி அந்தஸ்தை சரோஜாதேவிக்கு வழங்கிய படம் என்பது குறிப்பிடத்தக்கது,
  • அதுவரை பாடகராக மட்டுமே தமிழில் அறியப்பட்டிருந்த ஏ.எம். ராஜா ஒரு இசை அமைப்பாளராகவும் அறிமுகமான படம் இது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
  • இத்திரைப்படத்தின் பாடல்களான "காதலிலே தோல்வியுற்றான்" போன்ற பாடல்கள் பெரும்புகழை ஈட்டின.
  • 1961 ஆம் ஆண்டில் தனது சொந்தப் பட நிறுவனம் சித்ராலயாவைத் தொடங்கிய ஸ்ரீதர் 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினார். இவர் கடைசியாக இயக்கிய படம் "தந்துவிட்டேன் என்னை".

ஸ்ரீதர் படங்களின் சில சிறப்பம்சங்கள்

  • தமிழ்த் திரையுலகில் அதுவரை வசனமே செங்கோலோச்சி வந்த நிலையை மாற்றி அந்த தமிழ் வசனத்தை கூட சாதாரன ரசிகர்கள் புரிந்து கொள்ளும் வகையிலும் திரைப்படங்களின் கதைகளத்தையே மாற்றி அழகான வசன உச்சரிப்புடனும் ஒளிப்பதிவு கோணங்களையும் புதுமை முறையில் திரைப்படங்களை இயக்கியதால் புதுமை இயக்குனர் என்று முதல் முதலில் தமிழ் ரசிகர்களால் போற்றப்பட்டார். மேலும் இவர் தான் இந்திய திரையுலகில் இயக்குனருக்கான ஒரு இடம் பெற்றுத் தந்தவர் ஸ்ரீதர் தான் என்று கூறிப்பிடபடுகின்றது.
  • அவரது திரைப்படங்களின் காட்சியமைப்புக்களையும், காமிரா கோணங்களையும் அவருக்குப் பின்னர் திரையுலகில் பெரும் மாறுதல்களை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.
  • மேலும் பின்னாளில் தமிழ் திரையுலகின் பெரும் இயக்குனர்களான கே. பாலசந்தர், பாரதிராஜா ஆகியோர் திரையுலகில் விரும்பி இயக்குனர் ஆனதற்கு காரணமே ஶ்ரீதர் தான் என்று பெருமளவில் பாராட்டியுள்ளனர்.
  • ஸ்ரீதரின் ஆரம்ப கால படங்களில் பலவற்றிலும் அவருடன் பணியாற்றியவர் ஏ. வின்சென்ட் என்ற ஒளிப்பதிவாளர். நெஞ்சில் ஓர் ஆலயம் என்னும் திரைப்படத்தில், முத்துராமன் மற்றும் தேவிகாவின் நடிப்பில் "சொன்னது நீதானா" என்னும் பாடல் படமாக்கப்பட்ட கோணங்களும், படத்தொகுப்பும் பெரிதும் பாராட்டப்பட்டன.
  • புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது மட்டும் இன்றி அவர்களைப் பிரபலமான நட்சத்திரங்கள் ஆக்குவதிலும் ஸ்ரீதரின் படங்கள் பெரும்பங்கு வகித்தன.
  • ஶ்ரீதரால் அறிமுகமாக்கப்பட்ட நட்சத்திரங்கள் :-
  • 1) ரவிச்சந்திரன், காஞ்சனா - (காதலிக்க நேரமில்லை)
  • 2) ஸ்ரீகாந்த், ஜெ. ஜெயலலிதா, நிர்மலா, மூர்த்தி - (வெண்ணிற ஆடை)
  • 3) கவிதா - (ஓ மஞ்சு)
  • இதில் நிர்மலா, மூா்த்தி இருவருமே தான் அறிமுகமான படத்தின் பெயரான வெண்ணிறாடை என்ற பெயரே இவர்களுக்கு இன்றளவும் அடைமொழியாக இருந்து வருகிறது.
  • ஶ்ரீதர் தனது ஆரம்பகாலத்தில் திரைப்படங்களில் கதை, வசனகர்த்தாவாக பணியாற்றிய போது அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்ற இயக்குனர் திலகம் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் ஶ்ரீதர் அவர்களே அன்பினால் என் உடன் பிறவா சகோதரா என்று பாராட்டியுள்ளார்.
  • ஶ்ரீதர் இயக்குனர் ஆக பணியாற்றும் போது அவருடன் இணைந்து உதவி இயக்குனராக இருந்து உருவாக்கபட்ட பல இயக்குனர்கள் பி. மாதவன், சி. வி. ராஜேந்திரன், சித்ராலயா கோபு, என். சி. சக்கரவர்த்தி, பி. வாசு, சந்தான பாரதி, ராஜ்கபூர் போன்றவர்கள் ஶ்ரீதர் அவர்களால் உருவாக்கப்பட்ட பெரிய தமிழ் திரைப்பட இயக்குனர்கள் ஆவார்.
  • அதே போல் இந்த இயக்குனர்களின் திரைப்படங்களில் ஶ்ரீதரின் மாறுபட்ட கதைக்களம் கொண்ட காட்சிகள் இவர்கள் திரைபடங்களில் இருக்கும்.
  • பாலிவுட்டிலும் ஸ்ரீதர் வெற்றிகரமான இயக்குனராக விளங்கினார். அவரது படங்களான கல்யாணப்பரிசு நஜ்ரானா என்னும் பெயரில் ராஜ்கபூர், வைஜயந்திமாலா நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது.
  • இதைத் தொடர்ந்து நெஞ்சில்ஓர்ஆலயம் (ராஜேந்திர கபூர், ராஜ்குமார், மீனாகுமாரி நடித்த தில் ஏக் மந்திர்), காதலிக்கநேரமில்லை (சஷிகபூர், கிஷோர்குமார் நடித்த பியார் கியா ஜாயே) ஆகியவையும் ஹிந்தியில் மறுவாக்கம் செய்யப்பட்டு வெற்றிக் கொடி நாட்டின.
  • 1960ஆம் ஆண்டுகளில் இறுதி வரை ஸ்ரீதர் குறிப்பிடத்தக்க பங்கினையளித்தார். நாடகபாணிக் கதைகளான கல்யாணப்பரிசு, விடிவெள்ளி, தேன் நிலவு, சுமைதாங்கி, நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, நெஞ்சிருக்கும் வரை போன்றவை தவிர, காதலிக்கநேரமில்லை, ஊட்டிவரைஉறவு போன்ற நகைச்சுவைப் படங்களையும் இயக்கிப் பெரும் புகழ் பெற்றார்.
  • ஸ்ரீதரின் திரைப்படங்களில் தனிச்சிறப்பாக அமைந்தவை அவற்றின் பாடல்கள். அவரது முதல் படமான கல்யாணப்பரிசு தொடங்கி இளையராஜா வுடன் அவர் இணைந்த இளமைஊஞ்சலாடுகிறது, நினைவெல்லாம்நித்யா வரையிலான திரைப்படங்களில் பல பாடல்களுக்காகவே புகழ் பெற்றன.

இயக்கி தயாரித்த தமிழ் திரைப்படங்கள்

தயாரிப்பு மற்றும் கதை வசனம் எழுதிய திரைபடங்கள் :-

மறைவு

சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீதர், திரைப்படப் இயக்குனர் பணியிலிருந்து முழுவதுமாக 1991 ஆம் ஆண்டிலிருந்து ஒதுங்கியிருந்தார். 2008, அக்டோபர் 20 இல் சென்னையில் தனது 75 ஆவது அகவையில் காலமானார்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீதர்_(இயக்குநர்)&oldid=3210972" இலிருந்து மீள்விக்கப்பட்டது