மயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நூல் பதிவுகள்: பராமரிப்பு using AWB
{{fact}}
வரிசை 2: வரிசை 2:
[[File:Initiation of Maya Sabha.jpg|thumb|right|250px|''மயன்'' அமைத்த மாய சபையில் வைசம்பாயனர், [[ஜனமேஜயன்]] முன்னிலையில் [[மகாபாரதம்]] கூறுதல்]]
[[File:Initiation of Maya Sabha.jpg|thumb|right|250px|''மயன்'' அமைத்த மாய சபையில் வைசம்பாயனர், [[ஜனமேஜயன்]] முன்னிலையில் [[மகாபாரதம்]] கூறுதல்]]


'''மயன்''' என்பவர் [[குமரிக் கண்டம்|குமரிக்கண்டத்தின்]] கடைச்சங்கத்தில் உள்ள சங்கப்பலகையை செய்த சிற்பி. இவரின் சங்கப்பலகையிலேயே [[அகத்தியம்]], [[ஐந்திறம்]] போன்ற பழந்தமிழ் இலக்கிய நூல்கள் ஏற்றப்பட்டதாக [[கணபதி (சிற்பி)|கணபதி]] சிற்பியும் அவரைப் பின்பற்றுபவர்கள் எழுதிய புத்தகங்களிலும் உள்ளன.
'''மயன்''' என்பவர் [[குமரிக் கண்டம்|குமரிக்கண்டத்தின்]] கடைச்சங்கத்தில் உள்ள சங்கப்பலகையை செய்த சிற்பி{{fact}}. இவரின் சங்கப்பலகையிலேயே [[அகத்தியம்]], [[ஐந்திறம்]] போன்ற பழந்தமிழ் இலக்கிய நூல்கள் ஏற்றப்பட்டதாக [[கணபதி (சிற்பி)|கணபதி]] சிற்பியும் அவரைப் பின்பற்றுபவர்கள் எழுதிய புத்தகங்களிலும் உள்ளன.


==மயன் வரலாறு==
==மயன் வரலாறு==

12:54, 2 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

மயன்
மயன் அமைத்த மாய சபையில் வைசம்பாயனர், ஜனமேஜயன் முன்னிலையில் மகாபாரதம் கூறுதல்

மயன் என்பவர் குமரிக்கண்டத்தின் கடைச்சங்கத்தில் உள்ள சங்கப்பலகையை செய்த சிற்பி[மேற்கோள் தேவை]. இவரின் சங்கப்பலகையிலேயே அகத்தியம், ஐந்திறம் போன்ற பழந்தமிழ் இலக்கிய நூல்கள் ஏற்றப்பட்டதாக கணபதி சிற்பியும் அவரைப் பின்பற்றுபவர்கள் எழுதிய புத்தகங்களிலும் உள்ளன.

மயன் வரலாறு

மூலநூல் : பண்டைத்தடயம்[1]

மயன் குமரி நாட்டில் பிறந்தவர். இவரது தாய் கருங்குழலியும் தந்தை திருமூலரும் ஆவர்.

மயன் பிறந்தநாள் - தைத்திங்கள் பௌர்ணமி
லக்னம் - மகரம்
நட்சத்திரம் - பூசம்
ராசி - கடகம்

மயனும் தமிழ்சங்கமும்

  • மயன் தமிழ்ச்சங்கத்தில் இருந்தவர் என்பதை

செந்தமிழ் இயக்கங்கண்டேன்

என்ற மயனின் பாடலை வைத்து அறியப்படுகிறது.

  • மயன் சங்கப்பலகை செய்ததை

அவைக்களப் பலகை கண்டு அருந்தமிழ் பலகை யாக்கி
அவைக்களச் சான்றோர் வாழ்த்த அருந்தமிழ் பலகை ஏற்றி
அவைக்கள வேந்தன் வாழ்த்த அருந்தமிழ் நூல்களெல்லாம்
அவையுளோர் கண்க ளிக்க அரங்கேற்றி நின்றதன்றே -(ப.நூ.30)

என்ற பாட்டின் வழியறியலாம்.

கலைமூலன்

  • மயனே தமிழர்களின் கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும், ஓவியக் கலைக்கும், வானியற் கலைக்கும், மரக் கலைக்கும் தந்தை ஆவான். அவன் எக்கலைகளிலும் வல்லவன் என்பதை பழந்தமிழ் கலை நூல்கள் சொல்கின்றன.[2]

நூல் பதிவுகள்

மயன் பற்றிய மற்ற பதிவுகள்.

  • வைசம்பாயனம்[8]

மேலும் வைசம்பாயனத்தின் 318,386,899,978,1084,1166,1177 பாடல்கள் மயன் பற்றி கூறுகிறது.

மயனின் முக்கிய நூல்கள்

  • 1.செந்நூல்கள்
எண் நூல் பெயர் ஆங்கில மொழிபெயர்ப்பு
1. ஓவியச்செந்நூல்[9] Treatise on drafting & painting
2. சிற்பமாச் செந்நூல் Treatise on Iconometry
3. கட்டிடச் செந்நூல் Treatise on Architecture
4. நிலமனைச் செந்நூல் Treatise on house building based on the land quality
5. மனைநிலச் செந்நூல் Treatise on land based on house building's nature
6. வானியல் செந்நூல் Treatise on Astro - Physics
7. பெருநடச் செந்நூல்[10] Treatise on the Dance
8. மூலிகைச் செந்நூல் Treatise on Herbs
9. கணிதமாச் செந்நூல் Treatise on Mathematics
10. மரக்கலச் செந்நூல் Treatise on Ship building
11. விண்கலச் செந்நூல் Treatise on Space ship
12. ஏழிசைச் செந்நூல் Treatise on Music
  • 2.பொது நூல்கள்
2.1.பிரணவ வேதம் (தான் இயற்றிய நான்மறைகளுக்கும் முற்பட்டதாக வியாசர் கூறியது[11])
2.2.மயமதம் (கட்டிடவியல்-வாஸ்து)
2.3.சூரிய நூல் (வானியல்)

மற்றும் பல.

சிற்றம்பலச்சிற்பம்

  • மயனின் நடராச சிற்பம் உணர்த்துவது
ஐந்தொழிலையும் (படைத்தல்-மூலம், காத்தல்-சீலம், அழித்தல்-காலம், மறைத்தல்-கோலம், அருளல்-ஞாலம்), தனித் தொழிலாகச் செய்யும் மூலத்தின் வடிவமே நடராச திருவுரு என்கின்றான்.

மயனின் சீடர்கள்

எண் பிரிவு சீடர்கள் பெயர்
1. தமிழ் நாதன், ஆயன், மூலம், நூலன்.
2. சிற்பம் கீதன், போதன், வேதன், சீலன்.
3. நளினக்கலைகள் தூயன், மாயன், நேயன், வேலன்.

மயன் முக்கோண விதிக் குறிப்புகள்

மூலநூல் : வானியல் மூலம் வரலாறு காண்போம்[12]

மயனின் செங்கோண முக்கோண விதி
படக்குறிப்பு
  • இது செங்கோண முக்கோணத்துக்கு மட்டுமே பொருந்தும்.
  • தே=செம்பக்கம்
  • சி =சின்னபக்கம்
  • பெ=பெரிய பக்கம் (செம்பக்கம் தவிர்த்து)
செய்முறை
  1. முதலில் சின்னப்பக்கத்தின் அலகை இரண்டால் வகுத்துக் கொள்ளுங்கள். (எ.கா. 3/2 =1.5)
  2. அடுத்து பெரியப்பக்கத்தின்(செம்பக்கம் தவிர்த்து) அலகை ஏழால் பெருக்கி வரும் விடையை எட்டால் வகுத்துக் கொள்ளுங்கள். (எ.கா. 4*7/8 =3.5)
  3. மேலுள்ள இரண்டு விடையின் கூட்டே செம்பக்கத்தின் நீளம். (எ.கா. 3.5 + 1.5 = 5 அலகுகள்)

மேலுள்ள எளிய விதியின் படி "தே = செம்பக்கத்தை" கண்டுபிடிக்க வர்க்க மூலமோ வர்க்கமோ தேவையில்லை. ஐந்திறம் கூறுவது உண்மையாக இருப்பின் இம்மயனின் காலம் பித்தாகரசு செங்கோண முக்கோணவிதியை விட மிகப்பழைய காலமாகும். மேலும் பை(π=pi)யின் மதிப்பையும் மயன் கண்டுள்ளார்.[13] ஆனால் இச்சூத்திரத்தில் சில பித்தோகரசு மூவெண்களுடன் பொருந்துவதாவும் சில பித்தோகரசு மூவெண்களுக்கு பொருந்தாததாகவும் உள்ளது.

மேற்கோள்கள்

  1. பண்டைத்தடயம், சிற்பச்சித்தன் மயன் வரலாறு, மணிவாசகர் பதிப்பகம், நடன காசிநாதன், மா.சந்திரமூர்த்தி.டிசம்பர் 2005.
  2. :மயன் விதித்துக் கொடுத்த
    மரபின் இவைதாம்
    ஒருங்குடன் புணர்ந்து
    ஆங்கு உயர்ந்தோர் ஏத்தும்-சிலப்பதிகாரம்(இந்திரனுக்கு விழுவூரெடுத்த காதை)(108 - 109)
  3. :மயன் விதித்தன்ன மணிக் கால் அமளிமிசை,(2-12)
  4. :மயன் விதித்துக் கொடுத்த மரபின: இவை-தாம்(5.105)
  5. :மயன்பணடு் இழைத்த மரபினது அதுதான்(3.79)
  6. :மிக்க மயனால் இழைக்கப் பட்ட
    சக்கர வாளக் கோட்டம்ஈங்கு இதுகாண்(6.201)
  7. :துவதிகன் என்பேன் தொன்றுமுதிர் கந்தின்
    மயன்எனக்கு ஒப்பா வகுத்த பாவையின்(21.132)
  8. :குமரிநன் நிலத்தன்று குணமுறும் கலைகள் ஆய்ந்து
    குமரியாள் அருளினாலே கூர்மதி நனிவிலங்க
    அமர் பொருள் ஆக்கம் கண்டான் ஆற்றலும் ஆண்மை மிக்க
    அமர்நிலை வீரம் ஓங்க அருங்கலை வளர்த்தான் அன்றே
  9. நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த
    ஓவியச் செந் நூல் உரை நூல் கிடக்கையும்
    மணி-ஊரலர் உரைத்த காதை
  10. கோட்டொடு சுற்றிக் குடர் வலந்த ஏற்றின் முன் ஆடி நின்று, அக்குடர் வாங்குவான் பீடு காண்- செந் நூல் கழி ஒருவன் கைப்பற்ற, அந்நூலை முந் நூலாக் கொள்வானும் போன்ம்!
    ::முல்லைக்கலி 4/101
  11. ஏக ஏவ புற வேதாஹ்
    பிரணவ சர்வ வன்-மயஹ
    ::::::::::பாகவத புராணம்-9.14.48
  12. INTERNATIONAL SOCIETY FOR THE INVESTIGATION OF ANCIENT CIVILIZATIONS, Editor N. Mahalingam
  13. பண்டைத்தடயம், மணிவாசகர் பதிப்பகம், நடன காசிநாதன், மா.சந்திரமூர்த்தி.டிசம்பர் 2005.

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  • பண்டைத்தடயம், மணிவாசகர் பதிப்பகம், நடன காசிநாதன், மா.சந்திரமூர்த்தி.டிசம்பர் 2005.
  • Er. R. R. Karnik, Ancient Indian Technologies as Seen by Maya, the Great Asura
  • Er. R. R. Karnik, Yuga, Mahayuga and Kalpa (1996) [1]
  • S.P. Sabharathnam, Mayan's Aintiram : With Tamil Texts of Mayan and Paraphrasing with English Translation, Vaastu Vedic Research Foundation (1997), OCLC: 47184833.
  • V. G. Sthapati, An overview of Mayonic Aintiram, Shilpi Speaks series 1 [2]
  • Bruno Dagens, Mayamata : Traité Sanskrit d'Architecture, Pondichéry : Institut Français d'Indologie (1970), OCLC: 61978029.
  • Bruno Dagens, Mayamata : an Indian treatise on housing, architecture, and iconography, Sitaram Bhartia Institute of Scientific Research (1985), OCLC: 15054108; Indira Gandhi National Centre for the Arts and Motilal Banarsidass (1994), OCLC: 60146035.
  • Phanindra Nath Bose, Principles of Indian śilpaśāstra with the text of Mayaśāstra, Punjab Sanskrit Book Depot (1926), OCLC: 3354836.
  • Aintir̲am, Directorate of Technical Education, Cen̲n̲ai : Tol̲il Nuṭpak Kalvi Iyakkakam (1986), OCLC: 19172544
  • K S Subrahmanya Sastri; O A Nārāyaṇasvāmi Ayyar, Mayamatam, Śrīraṅkam : Śrī Vāṇī Vilāsam Patippakam (1888), OCLC: 13891788.
  • Dr. Jessie J. Mercay, Fabric of the Universe, http://aumscience.com

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மயன்&oldid=3186656" இலிருந்து மீள்விக்கப்பட்டது