குடவாயில் பாலசுப்பிரமணியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 59: வரிசை 59:
*[https://www.youtube.com/watch?v=x_x6c9G2O0I&feature=youtu.be இராஜ ராஜசோழனும் தஞ்சாவூர் பெரிய கோயிலும் - குடவாயில் பாலசுப்ரமணியன் - காணொலி]
*[https://www.youtube.com/watch?v=x_x6c9G2O0I&feature=youtu.be இராஜ ராஜசோழனும் தஞ்சாவூர் பெரிய கோயிலும் - குடவாயில் பாலசுப்ரமணியன் - காணொலி]
*[https://www.youtube.com/watch?v=D2r9lO2n0A8&feature=youtu.be சோழர்களின் முப்பெரும் கோயில்கள் -குடவாயில் பாலசுப்பிரமணியன்- காணொலி]
*[https://www.youtube.com/watch?v=D2r9lO2n0A8&feature=youtu.be சோழர்களின் முப்பெரும் கோயில்கள் -குடவாயில் பாலசுப்பிரமணியன்- காணொலி]
*[https://www.youtube.com/watch?v=6yH2SQ829VE குடவாயில் பாலசுப்பிரமணியனின் அனுபவங்கள் - காணொலி]

[[பகுப்பு:இந்திய வரலாற்றாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய வரலாற்றாளர்கள்]]

[[பகுப்பு:1948 பிறப்புகள்]]
[[பகுப்பு:1948 பிறப்புகள்]]
[[பகுப்பு:திருவாரூர் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:திருவாரூர் மாவட்ட நபர்கள்]]

15:59, 3 மார்ச்சு 2021 இல் நிலவும் திருத்தம்

குடவாயில் பாலசுப்பிரமணியன்

குடவாயில் பாலசுப்பிரமணியன் (பிறப்பு: 15 சூன் 1948) தமிழ்நாட்டின் கல்வெட்டு ஆய்வாளர்களில் ஒருவரும் எழுத்தாளரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

தமிழ்நாடு திருவாரூர் மாவட்டம் குடவாயில் என்ற ஊரில் பிறந்த பாலசுப்பிரமணியன் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.எஸ்சி. விலங்கியலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., வரலாறும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் வரலாறும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி., கட்டடக்கலையும் பயின்றவர்.

கோயிற்கலைக்கும் தமிழ்மொழிக்கும் ஆற்றிவரும் பணிக்காக பிப்ரவரி 2016இல் இவர் முதுமுனைவர் பட்டம் (Doctor of Letters (honoris causa)) பெற்றார்.[1]

கல்வி, ஆய்வுப்பணி

இவர் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தின் பதிப்பக மேலாளராக பல ஆண்டுகளாக பணிபுரிந்து உள்ளார்.[2] இவர் 100க்கும் மேற்பட்ட பழங்கால கல்வெட்டுக்களையும், பழங்கால நாணயங்கள், செப்புத் தகடுகள், சிலைகள் போன்ற பலவற்றைக் கண்டுபிடித்து தமிழக கல்வெட்டு ஆராய்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளார். 25க்கும் மேற்பட்ட நூல்களும் 300க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

நூல்கள்

இவர் திருவாரூர் திருக்கோயில், தஞ்சாவூர், ராஜராஜச்சுரம், நந்திபுரம், கபிலக்கல், தஞ்சை நாயக்கர் வரலாறு உள்பட, 25க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.[3]

திட்டங்கள்

  • கும்பகோணம், (ஒரு பகுதி), வரலாற்று ஆய்வுத்திட்டம், Cambridge University, London
  • கோயில் கோபுரங்கள், Nehru Trust for the Indian Collections at the Victoria and Albert Museum in London, New Delhi
  • சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும், தமிழ்ப்பல்கலைக்கழக குறுகிய கால ஆய்வுத்திட்டம் (நூலாக வெளியானது)
  • செம்மொழி இலக்கியங்களில் பல்கலை நோக்கில் ஆய்வு, செம்மொழித் தமிழ் நடுவண் நிறுவனம், சென்னை, 2012.
  • செம்மொழித் தமிழ் நூல்களில் தொன்மக் கூற்றுக்களும் அவற்றின் கலை வடிவங்களும், செம்மொழித் தமிழ் நடுவண் நிறுவனம், சென்னை,2015–16 (நடைபெறுகிறது)

விருதுகள்

  • குறள்நெறிச் செம்மல், உலகத் திருக்குறள் பேரவை, தஞ்சாவூர், 2003
  • திருவருட் செம்மணி, சிருவபுரி முருகன் அபிஷேகக்குழு, 2005
  • திருக்கோயில் ஆய்வுப்பேரொளி, அறுபத்துமூவர் மன்றம், தஞ்சாவூர், 2005
  • ராஜராஜசோழன் விருது, ராஜராஜன் கல்வி மற்றும் பண்பாட்டு மையம், சென்னை, 2007
  • கரிகால் சோழன் விருது, தமிழ் அய்யா கல்விக்கழகம், திருவையாறு, 2009
  • வரலாற்று நாயகர், கரந்தைத் தமிழ்ச்சங்கம், 2011
  • வாழ்நாள் சாதனையாளர் விருது, சங்கீத் சாகர் மற்றும் ரஷிய அறிவியல் பண்பாட்டு மையம், சென்னை 2012
  • ராஜராஜசோழன் விருது, சதய விழாக்குழு, தஞ்சாவூர், 2012
  • ஆனந்த குமாரசுவாமி கவின்கலை விருது, எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம், சென்னை, 2013
  • திருக்கோயில் கலைச்செல்வர் விருது, தருமபுரம் ஆதீனம், 2013
  • மண்ணின் சிறந்த படைப்பாளி, ரோட்டரி கிளப், தஞ்சாவூர், 2014
  • ஆய்வுரை வித்தகர், அப்பர் அறக்கட்டளை, 2014
  • உவேசா தமிழறிஞர் விருது, தமிழ்நாடு அரசு, 2015
  • சேக்கிழார் தமிழறிஞர் விருது, சேக்கிழார் ஆய்வு மையம், சென்னை, 2015
  • பொற்றாமரை விருது, சிறந்த ஆய்வாளர், 2015

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்