திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 21: வரிசை 21:
<!-- அமைவிடம் -->
<!-- அமைவிடம் -->
| ஊர் = திருவாவடுதுறை
| ஊர் = திருவாவடுதுறை
| மாவட்டம் = [[நாகப்பட்டினம்]]
| மாவட்டம் = [[மயிலாடுதுறை]]
| மாநிலம் = [[தமிழ்நாடு]]
| மாநிலம் = [[தமிழ்நாடு]]
| நாடு = [[இந்தியா]]
| நாடு = [[இந்தியா]]
வரிசை 53: வரிசை 53:
'''திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயில்''' தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்|காவிரி தென்கரைத் தலங்களில்]] அமைந்துள்ள 36ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. மேலும் [[திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்கள்|திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில்]] ஒன்றாகும். <ref> வீ.ஜெயபால், திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாதசுவாமிகள் அருளிச்செய்தி திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்ய தேசங்கள், அம்மையப்பா பதிப்பகம், சைவ சித்தாந்த ஆய்வு மையம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, மே 2016 </ref>
'''திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயில்''' தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்|காவிரி தென்கரைத் தலங்களில்]] அமைந்துள்ள 36ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. மேலும் [[திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்கள்|திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில்]] ஒன்றாகும். <ref> வீ.ஜெயபால், திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாதசுவாமிகள் அருளிச்செய்தி திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்ய தேசங்கள், அம்மையப்பா பதிப்பகம், சைவ சித்தாந்த ஆய்வு மையம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, மே 2016 </ref>


[[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] [[நாகப்பட்டினம்]] மாவட்டத்தின் [[திருவாவடுதுறை]] எனும் ஊரில் [[புராணம்|புராண]] பெருமைகள் நிறைந்த '''கோமுக்தீசுவரர்''' ('''மாசிலாமணி ஈசுவரர்''') கோயில் அமைந்துள்ளது <ref>http://temple.dinamalar.com/New.php?id=315</ref>. இக்[[கோயில்]], ஏறக்குறைய பத்து [[ஏக்கர்]] நிலப் பரப்பில் அமைந்துள்ளது. ஐந்து நிலை ராஜ கோபுரமும், மூன்று பிராகாரங்களும் கொண்டது. [[வடக்கு]]ப்புற நுழைவாயிலில், புதிதாக மூன்று நிலை ராஜகோபுரமும் எழுப்பப்பட்டுள்ளது <ref>http://www.dinamani.com/edition/story.aspx?Title=ஆவடுதுறையில்%20அணைத்தெழுந்தான்!&artid=360722&SectionID=152&MainSectionID=152&SectionName=Vellimani&SEO=</ref>. [[மயிலாடுதுறை|மயிலாடுதுறையில்]] இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறை - [[கும்பகோணம்]] [[இரயில்]] மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை இரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - கும்பகோணம் [[சாலை]] வழியில் உள்ள [[திருவாலங்காடு]] என்ற [[பேருந்து]] நிறுத்தத்தில் இறங்கி 1 கிலோமீட்டர் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்<ref>http://www.shivatemples.com/sofct/sct036.html</ref>.
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] [[மயிலாடுதுறை]] மாவட்டத்தின் [[திருவாவடுதுறை]] எனும் ஊரில் [[புராணம்|புராண]] பெருமைகள் நிறைந்த '''கோமுக்தீசுவரர்''' ('''மாசிலாமணி ஈசுவரர்''') கோயில் அமைந்துள்ளது <ref>http://temple.dinamalar.com/New.php?id=315</ref>. இக்[[கோயில்]], ஏறக்குறைய பத்து [[ஏக்கர்]] நிலப் பரப்பில் அமைந்துள்ளது. ஐந்து நிலை ராஜ கோபுரமும், மூன்று பிராகாரங்களும் கொண்டது. [[வடக்கு]]ப்புற நுழைவாயிலில், புதிதாக மூன்று நிலை ராஜகோபுரமும் எழுப்பப்பட்டுள்ளது <ref>http://www.dinamani.com/edition/story.aspx?Title=ஆவடுதுறையில்%20அணைத்தெழுந்தான்!&artid=360722&SectionID=152&MainSectionID=152&SectionName=Vellimani&SEO=</ref>. [[மயிலாடுதுறை|மயிலாடுதுறையில்]] இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறை - [[கும்பகோணம்]] [[இரயில்]] மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை இரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - கும்பகோணம் [[சாலை]] வழியில் உள்ள [[திருவாலங்காடு]] என்ற [[பேருந்து]] நிறுத்தத்தில் இறங்கி 1 கிலோமீட்டர் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்<ref>http://www.shivatemples.com/sofct/sct036.html</ref>.


==மூர்த்திச் சிறப்பு==
==மூர்த்திச் சிறப்பு==

12:32, 17 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்

தேவாரம் பாடல் பெற்ற
திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):நந்தி க்ஷேத்திரம், அரசவனம், கோகழி, துறைசை, மகா தாண்டவபுரம், கோமுத்தித் தலம், சித்தபுரம், நவகோடி சித்தபுரம், சிவபுரம், பிரமபுரம், தருமபுரம், கஜாரண்யம்[1]
பெயர்:திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருவாவடுதுறை
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மாசிலாமணீசுவரர், கோமுத்தீசுவரர்
தாயார்:ஒப்பிலா முலையம்பிகை, அதுல்ய குஜாம்பிகை
தல விருட்சம்:அரச மரம்
தீர்த்தம்:கோமுத்தி தீர்த்தம், பத்ம தீர்த்தம், கைவல்ய தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்,சுந்தரர், மாணிக்கவாசகர்

திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 36ஆவது சிவத்தலமாகும். மேலும் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும். [2]

தமிழ்நாட்டிலுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் திருவாவடுதுறை எனும் ஊரில் புராண பெருமைகள் நிறைந்த கோமுக்தீசுவரர் (மாசிலாமணி ஈசுவரர்) கோயில் அமைந்துள்ளது [3]. இக்கோயில், ஏறக்குறைய பத்து ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ளது. ஐந்து நிலை ராஜ கோபுரமும், மூன்று பிராகாரங்களும் கொண்டது. வடக்குப்புற நுழைவாயிலில், புதிதாக மூன்று நிலை ராஜகோபுரமும் எழுப்பப்பட்டுள்ளது [4]. மயிலாடுதுறையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறை - கும்பகோணம் இரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை இரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள திருவாலங்காடு என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 1 கிலோமீட்டர் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்[5].

மூர்த்திச் சிறப்பு

சுயம்பு மூர்த்தியாக விளங்கிடும் இக்கோயிலின் மூலமூர்த்தி கோமுக்தீசுவரர் என அழைக்கப்படுகின்றார். அம்பாள் ஒப்பில்லாமுலைநாயகி ஆவார். இக்கோயிலின் மூலவர் சந்நிதியின் மேல் உள்ள விமானம் துவைதளம் என அழைக்கப்படுகின்றது. துணைவந்த கணபதி என்ற திருநாமத்துடன் இவ்வாலயத்தில் விநாயகர் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்.

திருமூலர்

திருமூலர் திருமந்திரம் இயற்றிய திருத்தலமிது.[6]

கோயிற் சிறப்புகள்

  • சிவபக்தரான திருமாளிகைத் தேவர் மீது படையெடுத்து வந்த நரசிங்க மன்னனுடன் போரிட்டு அவரைத் தோற்கடிப்பதற்காக அம்பிகை திருவாவடுதுறை கோயில் மதில் மீது இருந்த நந்திகளனைத்தையும் ஒரே நந்தியாக்கி அனுப்பியதால் இன்றளவும் இத்திருக்கோயில் மதில் மீது நந்திகள் கிடையாது.[6]
  • சிவபெருமானே சகல தோஷங்களும் நிவாரணமாக இருப்பதால் இத்திருக்கோயிலில் நவக்கிரகங்களுக்கு தனிச் சந்நதி கிடையாது.[6]
  • திருஞானசம்பந்தர் தமது தந்தையின் வேள்விக்காக சிவபெருமானிடம் ஆயிரம் பொற்காசுகள் பெற்ற திருத்தலம் [6]
  • முப்பத்து முக்கோடி தேவர்களும் படர் அரச மரமாக இருக்க அம்மரத்தின் கீழ் சிவபெருமான் திருநடனம் புரிந்த திருத்தலம்[6]

தமிழகத்திலேயே உயரமான விஸ்வரூப நந்தி

தமிழகத்திலேயே உயரமான நந்தியெம்பெருமான் இத்திருத்தலத்திலேயே அமைந்துள்ளார். இவரது உயரம் 14 அடி 9 அங்குலம். (தஞ்சாவூரில் அமைந்துள்ள பெரிய கோயில் ஒரே கல் நந்தியின் உயரம் 12 அடி).தர்மதேவதையே இந்த நந்தியெம்பெருமானாக உள்ளார் என்பது ஐதீகம்[6]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 147
  2. வீ.ஜெயபால், திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாதசுவாமிகள் அருளிச்செய்தி திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்ய தேசங்கள், அம்மையப்பா பதிப்பகம், சைவ சித்தாந்த ஆய்வு மையம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, மே 2016
  3. http://temple.dinamalar.com/New.php?id=315
  4. http://www.dinamani.com/edition/story.aspx?Title=ஆவடுதுறையில்%20அணைத்தெழுந்தான்!&artid=360722&SectionID=152&MainSectionID=152&SectionName=Vellimani&SEO=
  5. http://www.shivatemples.com/sofct/sct036.html
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 குமுதம் ஜோதிடம்; 10.05.2013; திருமூலர் திருமந்திரம் தந்தருளிய திருவாவடுதுறை திருத்தலம்

படத்தொகுப்பு