பழசி அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Pazhassi Dam" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:30, 23 செப்டெம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

பழசி அணை என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின் ,கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அணைக்கட்டாகும். இதற்கு உள்ளூர வீரரான மன்னர் பழசி இராஜாவின் பெயரிடப்பட்டுள்ளது. இது வெலியம்பிரா அருகே மேற்கு நோக்கி பாயும் வளப்பட்டணம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணையை 1979 இல் பிரதமர் மொரார்ஜி தேசாயால் திறந்துவைக்கபட்டது. இது முதனைமையாக நீர்ப்பாசன அணையாக செயல்படுகிறது, இதிலிருந்து கண்ணூர் மாவட்டத்தின் தலச்சேரி மற்றும் தாலிபராம்ப்ரா வட்டங்களில் 11,525 எக்டேர்கள் (28,480 ஏக்கர்கள்) பாசன வசதி பெறுகிறது. மேலும் இந்த அணையிலிருந்து வரும் நீரானது கண்ணூர் மாவட்டத்தின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. அணை அமைந்துள்ள இடம் மற்றும் நீர்த்தேக்கம் ஆகியவை அவற்றின் அழகுக்காக பிரபலமானவை. [1] [2]

இடவியல்

வாலபட்டணம் ஆற்றின் குறுக்கே குயிலூரில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இந்த ஆறானது குடகில் ( கர்நாடகம் ) 2,500 அடிகள் (760 m) ) உயரத்தில் தோன்றுகிறது மேலும் 1,028 சதுர கிலோமீட்டர்கள் (397 sq mi) நீர்ப்பிடிப்பு பகுதியை கொண்டதாக உள்ளது . நீர்ப்பிடிப்பு பகுதியின் சராசரி ஆண்டு மழையளவு 3,622 மில்லிமீட்டர்கள் (142.6 அங்) ஆகும். அணை பகுதிக்கு அருகிலுள்ள நகரங்கள் மட்டனூர் மற்றும் இரிட்டி ஆகும். [1]

பழசி அணை பூங்காக்கள்

குறிப்புகள்

  1. 1.0 1.1 "Pazhassi Irrigation Project JI02676". Central Water Commission. Archived from the original on 2013-09-28.
  2. "National Register of Large Dams" (PDF). Central Water Commission. Archived from the original (pdf) on 19 February 2018. பார்க்கப்பட்ட நாள் 11 December 2012.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழசி_அணை&oldid=3037939" இலிருந்து மீள்விக்கப்பட்டது