குருதிப்புனல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 43: வரிசை 43:
== தயாரிப்பு ==
== தயாரிப்பு ==
இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழியில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்திற்கு ''துரோகி'' எனப் பெயரிடப்பட்டது. பின்னர் தமிழில் மட்டும் ''குருதிப்புனல்'' என பெயர் மாற்றப்பட்டது, தெலுங்கு மொழியில் அதே பெயரில் வெளியானது.
இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழியில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்திற்கு ''துரோகி'' எனப் பெயரிடப்பட்டது. பின்னர் தமிழில் மட்டும் ''குருதிப்புனல்'' என பெயர் மாற்றப்பட்டது, தெலுங்கு மொழியில் அதே பெயரில் வெளியானது.

''டால்பி'' தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் வெளியான முதல் திரைப்படம் இதுவாகும். சென்னையில் உள்ள தேவி தியேட்டரை கமல் தனது சொந்த செலவில் டால்பி தியேட்டராக மாற்றி அமைத்தார்.<ref>{{Cite web |url=https://cinema.vikatan.com/tamil-cinema/107023-kamal-is-the-one-who-introduced-modern-technologies-into-tamil-cinema |title=ஏவுகணை, டால்பி, ப்ராஸ்தட்டிக்..! - தமிழ் சினிமாவில் நவீனன் கமல் |date=7 நவம்பர் 2017 |publisher=[[ஆனந்த விகடன்]] |accessdate=17 செப்டம்பர் 2020}}</ref>


== விருதுகள் ==
== விருதுகள் ==

07:45, 17 செப்டெம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

குருதிப்புனல்
இயக்கம்பி. சி. ஸ்ரீராம்
தயாரிப்புகமல்ஹாசன்
சந்திரஹாசன்
கதைகோவிந்த் நிகலனி
திரைக்கதைகமல்ஹாசன்
இசைமகேஷ் மகாதேவன்
நடிப்புகமல்ஹாசன்
அர்ஜுன்
நாசர்
கே. விஸ்வநாத்
கௌதமி
கீதா
ஒளிப்பதிவுபி. சி. ஸ்ரீராம்
படத்தொகுப்புஎன். பி. சதீஷ்
கலையகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
விநியோகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
வெளியீடு23 அக்டோபர் 1995
ஓட்டம்143 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்13 கோடி

குருதிப்புனல் (1995) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சி. ஸ்ரீராம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அர்ஜுன், கௌதமி, நாசர் போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் எடுக்கப்பட்டதாகும். தெலுங்கு மொழியில் துரோகி எனும் பெயரில் வெளியானது. பாடல்களே இல்லாமல் வெளிவந்த இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரோடெர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படம் காண்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ஆதி நாராயணனும் (கமல்ஹாசன்) அப்பாசும் (அர்ஜுன்) காவல் துறை அதிகாரிகள். தீவிரவாத அமைப்பொன்றின் தலைவனான பத்ரி (நாசர்) குழுவினுள் காவல் துறையினரைச் சேர்ந்த இருவர் வேவுபார்ப்பதற்காக அனுப்பப்படுகின்றனர். மேலும் பத்ரியினை ஒரு சம்பவத்தில் கைது செய்து கொள்ளும் ஆதி நாராயணன் தீவிரவாதக் குழுக்கள் பற்றியும் விசாரணைகள் நடத்துகின்றார். ஆனால் அவரே அத்தீவிரவாத குழுக்களின் தலைவரென்பதனை அறியவும் இல்லை ஆதி. பின்னர் அறிந்து கொண்டபோது ஆதியின் குடும்பத்திற்கு தீங்குகள் விளைகின்றன. ஆதியின் மகன் தீவிரவாதிகளின் அதிஉயர் ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டுக் காயமடைகின்றான். இதனை அறிந்து கொள்ளுன் ஆதி பத்ரியினைக் கொலை செய்யப்போவதாகவும் பயமுறுத்துகின்றார். இதனைப் பார்த்துப் பயப்படாத பத்ரி ஆதியின் குடும்பத்தாருக்குத் தீங்கு விளையப் போகின்றது எனக் கூறுகின்றார். அவர் தான் தீவிரவாதிகளின் தலைவன் என்பதனை அறியாத ஆதி அவரை விடுதலையும் செய்கின்றார். இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகளின் இடத்திற்குச் சென்ற இரு காவல்துறையினர் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் அத்தீவிரவாதிகளின் இடத்தினை நோக்கிச் செல்கின்றார் அப்பாஸ் அங்கு அவர் பத்ரியால் கைது செய்யப்பட்டு கொலையும் செய்யப்படுகின்றார். பின்னர் அப்பாஸைத் தேடிச் செல்லும் ஆதி அங்கு இருக்கும் வேவு பார்க்கும் காவல்துறையினரைச் சந்தித்துக் கொள்ளவே இதனை அறிந்து கொண்டு உள்ளே நுழைய முனைந்த தீவிரவாதிகளிடமிருந்து அவ்வேவு பார்ப்பவர்களை அடையாளம் காட்டாத வண்ணமிருப்பதற்காகத் தன்னைச் சுடவும் சொல்கின்றார் ஆதி. அவ்வாறே அக்காவல்துறை அதிகாரியும் செய்கின்றார்.

நடிகர்கள்

தயாரிப்பு

இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழியில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்திற்கு துரோகி எனப் பெயரிடப்பட்டது. பின்னர் தமிழில் மட்டும் குருதிப்புனல் என பெயர் மாற்றப்பட்டது, தெலுங்கு மொழியில் அதே பெயரில் வெளியானது.

டால்பி தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் வெளியான முதல் திரைப்படம் இதுவாகும். சென்னையில் உள்ள தேவி தியேட்டரை கமல் தனது சொந்த செலவில் டால்பி தியேட்டராக மாற்றி அமைத்தார்.[1]

விருதுகள்

68வது சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான அகாதமி விருதுக்கு இப்படம் இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. "ஏவுகணை, டால்பி, ப்ராஸ்தட்டிக்..! - தமிழ் சினிமாவில் நவீனன் கமல்". ஆனந்த விகடன். 7 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 17 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்பு