கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15: வரிசை 15:
* [[திராவிடக் கட்டிடக்கலை]]
* [[திராவிடக் கட்டிடக்கலை]]
* [[தமிழர் கட்டிடக்கலை]]
* [[தமிழர் கட்டிடக்கலை]]
* [[இந்துக் கோவில்|இந்து கோயில் # தென்னிந்திய மற்றும் இலங்கை கோயில்கள்]]
* [[இந்துக் கோவில்]]


== குறிப்புகள் ==
== குறிப்புகள் ==

02:16, 3 செப்டெம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

கோயில் அல்லது கோவில் (பொருள்: கடவுளின் குடியிருப்பு [N 1] ) என்பது திராவிடக் கட்டிடக்கலை கொண்ட இந்து கோவிலின் தனித்துவமான பாணிக்கான தமிழ்ச் சொல். கோயில் மற்றும் கோவில் [1] ஆகிய சொற்கள் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ் மொழியில், கோவில் என்பது தமிழ் இலக்கணப்படி சரியான சொல் என்று அறிஞர் சிலரால் கூறப்படுகிறது.[2] are used interchangeably. In Tamil language, kōvil (wikt:ta:கோவில்)[3] is the word derived, according to the rules of Tamil grammar.[N 2]

மதுரை, மீனாட்சி அம்மன் கோவில்

சமகால தமிழில், "வழிபாட்டிடம்" என்பதைக் குறிக்க ' கோவில் ' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அண்ணமைய உரைகளில், கோவில் பல இந்துக்களால் ஆலயம், தேவஸ்தானம் என்றும் குறிப்பிடப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டின் தமிழ் துறவி வள்ளளாரின் பக்தர்கள் பயன்படுத்தும் மற்றொரு சொல் அம்பலம் . மற்றொரு சொல் 'தளி'[4][5] அதாவது கோயில் என்றும் பொருள்.

சைவர்களுக்கு, முதன்மைக் கோயில் சிதம்பரம் கோயில் மற்றும் திருக்கோனேச்சரம் கோயில் ஆகியவை முதன்மையானவை, அதே சமயம் வைணவர்களுக்கு, திருவரங்கம் அரங்கநாதர் கோயில் மற்றும் திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோயில் ஆகியவை முக்கியமானவை.

தமிழ்நாட்டுக் கோயில்களும், இலங்கை கோயில்களும் நீண்ட வரலாறுகளைக் கொண்டுள்ளன, அவை எப்போதும் அந்தக் கால ஆட்சியாளருடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான மன்னர்கள் தங்கள் இராசியத்தில் கோயில்களை ஆதரித்தனர், மேலும் அவற்றை நிர்வகிக்க அவற்றிற்கு குளங்களையும், கிராமங்களையும் தானமாக அளித்து சன்னதியுடன் இணைத்தனர்.

இந்து அறநிலையத்துறையின் பதிவின்படி தமிழ்நாட்டில் மட்டும் 36,488 கோயில்கள் உள்ளன. பொது ஊழிக்கு முன்னர் எழுதப்பட்ட சங்க இலக்கியம், தமிழகத்தின் ஆரம்பகால மன்னர்கள் எழுப்பிய சில கோயில்களைக் குறிக்கிறது. கி.பி. 6 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரையிலான புகழ்பெற்ற சைவ நாயன்மார் மற்றும் வைணவ ஆழ்வார்களின் பாடல்கள் அந்தக் கால கோவில்களைப் பற்றிய ஏராளமான குறிப்புகளை வழங்குகின்றன. பெரும்பாலான கோயில்களில் காணப்படும் கல்கல்வெட்டுகள் பல்வேறு அரசர்களால் கோயில்களுக்கு வழங்கப்பட்ட ஆதரவை விவரிக்கின்றன.

மிகவும் பழமையான கோயில்கள் மரம் மற்றும் செங்கல் போன்றவற்றால் கட்டப்பட்டன.[1] ஏறக்குறைய கி.பி. 700 காலக் கோயில்கள் பெரும்பாலும் பாறைகளில் வெட்டப்பட்டதாக, குடையபட்டதாக இருந்தன. பல்லவ மன்னர்கள் கல்லில் கோயில்களைக் கட்டியவர்கள். சோழ மன்னர்கள் (பொ.ச. 850-1279) தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் கோயில் போன்ற பல கோயில்களைக் கட்டி எழுப்பினர். சோழர்கள் கோயில்களில் பல அலங்கரிக்கப்பட்ட மண்டபங்களையும், பெரிய கோபுரங்களையும் கட்டினர். பாண்டிய பாணியில் (பொ.ச. 1350 வரை) பெரிய கோபுரங்கள், உயரமான மதில் சுவர்கள், மகத்தான கோபுர நுழைவாயில்கள் (இராசகோபுரங்கள்) தோன்றின. விஜயநகர் பாணியானது (பொ.ச. 1350 - 1560) சிக்கலான மற்றும் அழகுகாக செதுக்கபட்ட ஒற்றைக்கல் தூண்களுக்கு பிரபலமானது. நாயக்கர் பாணி (பொ.ச. 1600 - 1750) பெரிய பிரகாரம் மற்றும் தூண் மண்டபங்களை சேர்த்ததாற்காக்க் குறிப்பிடப்படுகிறது.

மேலும் காண்க

குறிப்புகள்

  1. Koyil or kovil, which is correct? கோயில், கோவில்; எது சரி? Dinamani.com newspaper's Kadhir supplement.
  2. Koyil or kovil, which is correct? கோயில், கோவில்; எது சரி? Dinamani.com newspaper's Kadhir supplement.
  3. Correct word- Koyil or kovil? எது சரி? கோயிலா அல்லது கோவிலா? Dinamani.com newspaper's Tamil mani supplement.
  4. Thali, தளி= Kovil, given at Wiktionary wikt:ta:தளி and ValaiTamil.com Tamil dictionary.
  5. Metraleeswar temple, Kanchipuram. மேற்கு தளி, மெற்றாளி.

மேற்கோள்கள்


பிழை காட்டு: <ref> tags exist for a group named "N", but no corresponding <references group="N"/> tag was found

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோயில்&oldid=3028890" இலிருந்து மீள்விக்கப்பட்டது