தற்குறிப்பேற்ற அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Nothing அடையாளங்கள்: Manual revert Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி பிழையான திருத்தம் 24.224.177.32 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2941031 இல்லாது செய்யப்பட்டது அடையாளம்: Undo |
||
வரிசை 26: | வரிசை 26: | ||
காரிருளில் கானகத்தே காதலியை கைவிட்ட |
காரிருளில் கானகத்தே காதலியை கைவிட்ட |
||
பாதகனை பார்க்கப் படாதேன்றோ - நாதம் |
பாதகனை பார்க்கப் படாதேன்றோ - நாதம் |
||
அழிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவன் ஓடி |
|||
ஒழிக்கின்ற தென்னோ உரை. |
|||
[[நளவெண்பா]] |
[[நளவெண்பா]] |
||
12:03, 6 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்
தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவதாகும்.
எடுத்துக்காட்டுகள்
எ.கா.1:
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட சிலப்பதிகாரம்
விளக்கம்:
கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.
எ.கா.2:
தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால் கையால் வயிறலைத்து காரிருள் வெய்யோனை வாவு பரித் தேரேறி வாவென்றழைப்பது போல் கூவினவே கோழிக் குலம். நளவெண்பா
விளக்கம்:
நளன், தமயந்தியை நீங்கி, காட்டில் விட்டுச் சென்றான். அதிகாலையும் புலர, கோழிகளும் இயல்பாக கூவுகின்றன. இதைக் கண்ட புகழேந்தி, தமயந்தியின் தாங்கொணாத் துயர் கண்டே, கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாக கூறுகிறார்.
எ.கா.3:
காரிருளில் கானகத்தே காதலியை கைவிட்ட பாதகனை பார்க்கப் படாதேன்றோ - நாதம் அழிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவன் ஓடி ஒழிக்கின்ற தென்னோ உரை. நளவெண்பா
விளக்கம்:
நளன் கடலோரமாகச் செல்கின்றான். நண்டுகள்("அலவன்") தம் வளையில் இருந்து வெளிக்கிட்டு கடல் நாடிச் செல்கின்றன. இதை கண்ட புலவர், மனைவியைக் காட்டில் விட்டுச் சென்ற பாதகனை பார்க்கக் கூடாது என்றே நண்டுகள் வெளியேறிச் செல்கின்றன என்கிறார்.