தற்குறிப்பேற்ற அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Nothing
அடையாளங்கள்: Manual revert Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பிழையான திருத்தம் 24.224.177.32 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2941031 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 26: வரிசை 26:
காரிருளில் கானகத்தே காதலியை கைவிட்ட
காரிருளில் கானகத்தே காதலியை கைவிட்ட
பாதகனை பார்க்கப் படாதேன்றோ - நாதம்
பாதகனை பார்க்கப் படாதேன்றோ - நாதம்
அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவன் ஓடி
அழிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவன் ஓடி
ஒளிக்கின்ற தென்னோ உரை.
ஒழிக்கின்ற தென்னோ உரை.
[[நளவெண்பா]]
[[நளவெண்பா]]



12:03, 6 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்

தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவதாகும்.

எடுத்துக்காட்டுகள்

எ.கா.1:

     போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
     வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட
                               சிலப்பதிகாரம்

விளக்கம்:

கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.

எ.கா.2:

     தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்
     கையால் வயிறலைத்து காரிருள் வெய்யோனை 
     வாவு பரித் தேரேறி வாவென்றழைப்பது போல்
     கூவினவே கோழிக் குலம். 
                               நளவெண்பா

விளக்கம்:

நளன், தமயந்தியை நீங்கி, காட்டில் விட்டுச் சென்றான். அதிகாலையும் புலர, கோழிகளும் இயல்பாக கூவுகின்றன. இதைக் கண்ட புகழேந்தி, தமயந்தியின் தாங்கொணாத் துயர் கண்டே, கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாக கூறுகிறார்.

எ.கா.3:

     காரிருளில் கானகத்தே காதலியை கைவிட்ட
     பாதகனை பார்க்கப் படாதேன்றோ - நாதம்
     அழிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவன் ஓடி
     ஒழிக்கின்ற தென்னோ உரை. 
                               நளவெண்பா

விளக்கம்:

நளன் கடலோரமாகச் செல்கின்றான். நண்டுகள்("அலவன்") தம் வளையில் இருந்து வெளிக்கிட்டு கடல் நாடிச் செல்கின்றன. இதை கண்ட புலவர், மனைவியைக் காட்டில் விட்டுச் சென்ற பாதகனை பார்க்கக் கூடாது என்றே நண்டுகள் வெளியேறிச் செல்கின்றன என்கிறார்.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தற்குறிப்பேற்ற_அணி&oldid=3015329" இலிருந்து மீள்விக்கப்பட்டது