ஜமால் முகமது கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32: | வரிசை 32: | ||
==நிறுவனர்கள்== |
==நிறுவனர்கள்== |
||
ஜனாப் [[எம் |
ஜனாப் [[எம். ஜமால் முஹம்மது சாகிப்]] மற்றும் [[என். எம் காஜா மியான் இராவுத்தர்]] ஆகியோர் இதனை நிறுவியவர்களாவர். |
||
==துறைகள்== |
==துறைகள்== |
18:58, 12 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்
குறிக்கோளுரை | நேர்வழியை காட்டுவாயாக! |
---|---|
உருவாக்கம் | ஜூலை 11, 1951 |
உருவாக்குனர் | மு. ஜமால் முகமது சாகிப் மற்றும் நெ. மு. காஜாமியான் ராவுத்தர் |
தலைவர் | M.J. நூருதீன் சாகிப் |
முதல்வர் | முனைவர். S.முகமது சாலிஹ் |
நிருவாகப் பணியாளர் | 292 |
மாணவர்கள் | 7308 |
அமைவிடம் | 7, ரேஸ் கோர்ஸ் ரோடு, காஜா நகர், திருச்சி, 620020 |
விளையாட்டுகள் | Track, basketball, hockey |
சேர்ப்பு | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
இணையதளம் | அலுவலக இணையதளம் |
ஜமால் முகமது கல்லூரி திருச்சிராப்பள்ளி மாநகரில் உள்ள கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் துறைகளில் இளங்கலைக் கல்வி பட்டப்படிப்புகளை வழங்குகிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிய இக்கல்லூரி 1982 இல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட போது அதன்கீழ் இணைக்கப்பட்டது.
கல்லூரியின் தோற்றம்
- ஜமால் முஹம்மது கல்லூரி 1951ஆம் ஆண்டு 60 ஏக்கர் பரப்பளவில் திருச்சியில் நிறுவப்பட்டது. உருவாக்கப்பட்டபோது இது சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இக்கல்லூரி 1982 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட போது அதனோடு இணைக்கப்பட்டது.
- இக்கல்லூரி 1951 ஆம் ஆண்டு சூலை 11ம் நாள் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சாரான மேதகு பி. எஸ். குமாரசுவாமிராஜா அவர்களின் முன்னிலையில் திறக்கப்பட்டது. அப்போது சென்னை பல்கலைகழகத்தின் கீழும் 1982ல் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டபோது அதன் கீழும் உறுப்பு கல்லூரியாக இயங்கி வருகின்றது.
- தென்னிந்தியாவின் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் என புகழப்படும் இக்கல்லூரி தமிழக இசுலாமிய மக்களின் கலாச்சார மற்றும் பண்பாட்டு மையமாகவும் கருதப்படுகிறது.
நிறுவனர்கள்
ஜனாப் எம். ஜமால் முஹம்மது சாகிப் மற்றும் என். எம் காஜா மியான் இராவுத்தர் ஆகியோர் இதனை நிறுவியவர்களாவர்.
துறைகள்
- தமிழ்
- அரபி
- ஆங்கிலம்
- இந்தி
- உருது
- பிரெஞ்சு
- தாவரவியல்
- வேதியியல்
- வர்த்தகம்
- கணினி அறிவியல்
- பொருளியல்
- வரலாறு
- கணிதம்
- இயற்பியல்
- விலங்கியல்
- உயிரித் தொழில்நுட்பம்
- உயிரி-தகவலியல்
- வர்த்தக நிர்வாகம்
- வர்த்தக மேலாண்மை
- நுண்ணுயிரியல்
- சமூகபணிகள்
- ஆடை வடிவமைப்பு
- உணகவியல்
- ஊட்டச்சத்தியல்
- கணிணி பயன்பாட்டியல்
மத்திய அரசின் தேசிய விருது
திருச்சி ஜமால் முகமது கல்லூரி சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட சேவை புரிந்தமைக்காக இந்திராகாந்தி தேசிய நாட்டு நலப்பணித்திட்ட தேசிய விருது 2015 நவம்பர்19-ந் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆல் வழங்கப்பட்டது.[1]
படித்த பிரபலங்கள்
பெயர் | துறை | கல்வி |
---|---|---|
எம். அப்துல் ரஹ்மான் | முன்னாள் மக்களவை உறுப்பினர் (வேலூர்) | முதுகலை பொருளியல் |
எல். கணேசன் | சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் (தி.மு.க) | |
கே. என். நேரு | முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் (தி.மு.க) | |
ஜேம்ஸ் வசந்தன் | தொலைக்காட்சி நிகழ்ச்சிதொகுப்பாளர் | முதுகலை ஆங்கிலம் |
வெளி இணைப்புகள்
- ↑ "மத்திய அரசின் தேசிய விருது". தினத்தந்தி. 29 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 29 நவம்பர் 2015.