முத்தரையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added sources
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Minor corrections
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 10: வரிசை 10:


== முத்தரையரின் தோற்றம் ==
== முத்தரையரின் தோற்றம் ==
முத்தரையரை மூ + அரையர் என்று பிரித்து, முதற் சொல்லை 'மூன்று' என்று பொருள் கொள்வேமாயானால், தொல்காப்பியம் நன்னூல் போன்ற தமிழ் இலக்கண நூல்கள் கூறும் புணர்ச்சி விதிப்படி மூன்று+அரையர் = மூவரையர் என்றே ஆகவேண்டும். அவர்கள் மூவரையர் என எங்கும் அழைக்கப்பட்டதில்லை முத்தரையர் என்றே குறிக்கப்பெறுகின்றனர். ஆகவே முதற்சொல்லை 'முது' அல்லது 'மூத்த' என்று கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. குடுமியார்மலை போன்ற சில இடங்களில் இவர்கள் பெயரைக் கல்வெட்டுகள் மூத்த அரையர் எனப் பிரித்தே குறிக்கிறது. இதனை மூத்த + அரையர் எனப் படிக்க இயலாது. கல்வெட்டு மரபுப்படி இவ்விடங்களில் மூத்த அரையர் என்றே படிக்க வேண்டும்<ref name=":0">{{Cite web|url=http://tamilartsacademy.com/books/tavam/chapter44.xml|title=Tamil Arts Academy - Dr.R.Nagaswamy|last=|first=|date=|website=tamilartsacademy.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=2020-06-11}}</ref>.
முத்தரையரை மூ + அரையர் என்று பிரித்து, முதற் சொல்லை 'மூன்று' என்று பொருள் கொள்வேமாயானால், தொல்காப்பியம் நன்னூல் போன்ற தமிழ் இலக்கண நூல்கள் கூறும் புணர்ச்சி விதிப்படி மூன்று+அரையர் = மூவரையர் என்றே ஆகவேண்டும். அவர்கள் மூவரையர் என எங்கும் அழைக்கப்பட்டதில்லை., முத்தரையர் என்றே குறிக்கப்பெறுகின்றனர். ஆகவே முதற்சொல்லை 'முது' அல்லது 'மூத்த' என்று கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. குடுமியார்மலை போன்ற சில இடங்களில் இவர்கள் பெயரைக் கல்வெட்டுகள் மூத்த அரையர் எனப் பிரித்தே குறிக்கிறது. இதனை மூத்த + அரையர் எனப் படிக்க இயலாது. கல்வெட்டு மரபுப்படி இவ்விடங்களில் மூத்த அரையர் என்றே படிக்க வேண்டும்<ref name=":0">{{Cite web|url=http://tamilartsacademy.com/books/tavam/chapter44.xml|title=Tamil Arts Academy - Dr.R.Nagaswamy|last=|first=|date=|website=tamilartsacademy.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=2020-06-11}}</ref>.


"விருத்தராஜ" என்ற வட சொல் அடிப்படையில் முது அரசர் முத்தரசர் என்ற பெயர் கங்ககுல (சில) மன்னரிடம் காணப்படுகிறது<ref name=":0" />. கங்கர்கள், சோழர்களிடம் கொள்வினை கொடுப்பினையில் ஈடுபட்ட பொழுது இப்பெயர்களை அவர்கள் சூட்டிக்கொள்ளக் காண்கிறோம்<ref name=":0" />.
"விருத்தராஜ" என்ற வட சொல் அடிப்படையில் முது அரசர் முத்தரசர் என்ற பெயர் கங்ககுல (சில) மன்னரிடம் காணப்படுகிறது<ref name=":0" />. கங்கர்கள், சோழர்களிடம் கொள்வினை கொடுப்பினையில் ஈடுபட்ட பொழுது இப்பெயர்களை அவர்கள் சூட்டிக்கொள்ளக் காண்கிறோம்<ref name=":0" />.


முதுகுடிகள் வம்பவேந்தருடன் (புதிய வேந்தர்களுடன்) போரிட்ட நிகழ்ச்சிகள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன. தொல்தேவரு என அழைக்கப்பட்ட முதுகுடி அரசர் பற்றிச் செங்கம் பகுதி நடுகற்கள்<ref name=":0" /> செய்தி பகர்கின்றன. மேலும் அரையர் நாட்டுச்சோழர்கள் ( இரேநாடு ), 'முதிராசு<ref>{{Cite book|title=Epigraphia indica|url=https://archive.org/details/in.ernet.dli.2015.56527|volume=27|page=221}}</ref>' என்ற பெயர் கொண்டிருப்பது நோக்கத்தக்கது. எனவே முத்தரையர் என்ற சொல்லை, முது + அரையர் > முத்தரையர் என்று பொருள் கொள்வது சாலப்பொருந்துகிறது. மேலும் முத்தரையரும் களப்பிரரும் வேறனானவர்கள் என்பதை கல்வெட்டியல்.நடன.காசிநாதன் நிறுவியுள்ளார்<ref>{{Cite book|title=களப்பிரர்|url=https://www.tnarch.gov.in/e-publication-books?term_node_tid_depth=219|author=நடன.காசிநாதன்|publisher=Government ofTamilNadu, Department of Archeology}}</ref>.
முதுகுடிகள் வம்பவேந்தருடன் (புதிய வேந்தர்களுடன்) போரிட்ட நிகழ்ச்சிகள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன. தொல்தேவரு என அழைக்கப்பட்ட முதுகுடி அரசர் பற்றிச் செங்கம் பகுதி நடுகற்கள்<ref name=":0" /> செய்தி பகர்கின்றன. மேலும் அரையர் நாட்டுச்சோழர்கள் ( இரேநாடு ), 'முதிராசு<ref>{{Cite book|title=Epigraphia indica|url=https://archive.org/details/in.ernet.dli.2015.56527|volume=27|page=221}}</ref>' என்ற பெயர் கொண்டிருப்பது நோக்கத்தக்கது. எனவே முத்தரையர் என்ற சொல்லை, முது + அரையர் > முத்தரையர் என்று பொருள் கொள்வது சாலப்பொருந்துகிறது. மேலும் முத்தரையரும் களப்பிரரும் வேறனானவர்கள் என்பதை கல்வெட்டியல்.நடன.காசிநாதன் நிறுவியுள்ளார்<ref>{{Cite book|title=களப்பிரர்|url=https://www.tnarch.gov.in/e-publication-books?term_node_tid_depth=219|author=நடன.காசிநாதன்|publisher=Government of TamilNadu, Department of Archeology}}</ref>.


இரேநாட்டுச் சோழரான எரிகால் முத்துராசு தனஞ்சயனின் முதல் பெயரன் குணமுதிதன் எனும் முதலாம் குவாவன் வழியில் வந்தவர்களே கிபி7ம் நூற்றாண்டின் துவக்கம் முதல் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளை ஆட்சி செய்த முத்தரையர்கள் என்பதை செந்தலைத் தூண் கல்வெட்டு<ref>{{Cite book|title=Epigraphia indica|url=https://archive.org/details/in.ernet.dli.2015.56662/page/n168/mode/1up|page=139|volume=13}}</ref> மற்றும் இரேநாட்டுச் சோழர்கள் பற்றிய விரிவான கல்வெட்டு அறிக்கை<ref>{{Cite book|title=Epigraphia indica|url=https://archive.org/details/in.ernet.dli.2015.56527/page/n305/mode/1up|volume=27|page=220 முதல்}}</ref> மற்றும் அதன்கண் கொடுக்கப்பட்டுள்ள பத்து தலைமுறைக்கு மேலான கால்வழிபட்டியல்<ref>{{Cite book|title=Epigraphia indica|url=https://archive.org/details/in.ernet.dli.2015.56527/page/n338/mode/1up|volume=27|page=248}}</ref> மூலமாக அறியலாம். [[பாண்டியர்|பாண்டியரின்]] பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது.{{cn}}
இரேநாட்டுச் சோழரான எரிகால் முத்துராசு தனஞ்சயனின் முதல் பெயரன் குணமுதிதன் எனும் முதலாம் குவாவன் வழியில் வந்தவர்களே கிபி.7ம் நூற்றாண்டின் துவக்கம் முதல் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளை ஆட்சி செய்த முத்தரையர்கள் என்பதை செந்தலைத் தூண் கல்வெட்டு<ref>{{Cite book|title=Epigraphia indica|url=https://archive.org/details/in.ernet.dli.2015.56662/page/n168/mode/1up|page=139|volume=13}}</ref> மற்றும் இரேநாட்டுச் சோழர்கள் பற்றிய விரிவான கல்வெட்டு அறிக்கை<ref>{{Cite book|title=Epigraphia indica|url=https://archive.org/details/in.ernet.dli.2015.56527/page/n305/mode/1up|volume=27|page=220 முதல்}}</ref> மற்றும் அதன்கண் கொடுக்கப்பட்டுள்ள பத்து தலைமுறைக்கு மேலான கால்வழிபட்டியல்<ref>{{Cite book|title=Epigraphia indica|url=https://archive.org/details/in.ernet.dli.2015.56527/page/n338/mode/1up|volume=27|page=248}}</ref> மூலமாக அறியலாம். [[பாண்டியர்|பாண்டியரின்]] பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது.{{cn}}


== முத்தரைய அரசர்கள் ==
== முத்தரைய அரசர்கள் ==

05:52, 11 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சிலை, திருச்சி

முத்தரையர் என்பது, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இருந்த அரச மரபுகளில் ஒன்றாகும். முத்தரையர்கள் தஞ்சை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மண்டலங்களை கி.பி 600 முதல் கி.பி 900 வரை ஆட்சி செய்தனர்.

தமிழ்ச் செய்யுள்களான நாலடியார் மற்றும் முத்தொள்ளாயிரத்தில் முத்தரையர் குடித்தலைவர்களைப் பற்றிய பாராட்டுத் தகவல்கள் காணப்படுகின்றன.[1][2]

7 முதல் 8 ஆம் நூற்றாண்டுகளில் முத்தரையர், பல்லவர்கள் கீழ் குறுநில மன்னர்களாக, காவேரி ஆற்றின் வளமான சமவெளிகளைக் கட்டுப்படுத்தினர். காஞ்சிபுரத்தில் வைகுந்த பெருமாள் கோவிலில் ஒரு கல்வெட்டு ஒரு முத்தரைய அரசன் பற்றி கூறுகிறது. வரலாற்றாசிரியர் டி. ஏ. கோபினாத ராவ் படி, இந்த அரசன் சுவரன் மாறன். இந்தக் கல்வெட்டில் "கள்வர் கள்வன்" என்று அழைக்கப்படுகிறார். வரலாற்றாசிரியர் மகாகலிங்கத்தின் கூற்றுப்படி, சுவரன் மாறன், பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மனின் படைத் தலைவரான உதயச்சந்திராவுடன் சேர்ந்து சேரர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு எதிராக குறைந்தது பன்னிரண்டு போர்களில் ஈடுபட்டார்.[3] தஞ்சாவூர் மற்றும் வல்லம் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததாக சுவரன் மாறன் செந்தலை கல்வெட்டு குறிப்பிடுகிறது. பொ.ஊ.பி 850 களில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது விசயாலயச் சோழன் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றினான்.[4]

முத்தரையர்களுள் நன்கறியப்பட்ட ஆட்சியாளர்கள் முதலாம் குவாவன் (குணமுதிதன்), பெரும்பிடுகு முத்தரையர் (குவாவன் மாறன்), மாறன் பரமேசுவரன் (இளங்கோவதிரையர்), இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் (சுவரன் மாறன்) ஆகியோராவர் .[5][6]

முத்தரையரின் தோற்றம்

முத்தரையரை மூ + அரையர் என்று பிரித்து, முதற் சொல்லை 'மூன்று' என்று பொருள் கொள்வேமாயானால், தொல்காப்பியம் நன்னூல் போன்ற தமிழ் இலக்கண நூல்கள் கூறும் புணர்ச்சி விதிப்படி மூன்று+அரையர் = மூவரையர் என்றே ஆகவேண்டும். அவர்கள் மூவரையர் என எங்கும் அழைக்கப்பட்டதில்லை., முத்தரையர் என்றே குறிக்கப்பெறுகின்றனர். ஆகவே முதற்சொல்லை 'முது' அல்லது 'மூத்த' என்று கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. குடுமியார்மலை போன்ற சில இடங்களில் இவர்கள் பெயரைக் கல்வெட்டுகள் மூத்த அரையர் எனப் பிரித்தே குறிக்கிறது. இதனை மூத்த + அரையர் எனப் படிக்க இயலாது. கல்வெட்டு மரபுப்படி இவ்விடங்களில் மூத்த அரையர் என்றே படிக்க வேண்டும்[7].

"விருத்தராஜ" என்ற வட சொல் அடிப்படையில் முது அரசர் முத்தரசர் என்ற பெயர் கங்ககுல (சில) மன்னரிடம் காணப்படுகிறது[7]. கங்கர்கள், சோழர்களிடம் கொள்வினை கொடுப்பினையில் ஈடுபட்ட பொழுது இப்பெயர்களை அவர்கள் சூட்டிக்கொள்ளக் காண்கிறோம்[7].

முதுகுடிகள் வம்பவேந்தருடன் (புதிய வேந்தர்களுடன்) போரிட்ட நிகழ்ச்சிகள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன. தொல்தேவரு என அழைக்கப்பட்ட முதுகுடி அரசர் பற்றிச் செங்கம் பகுதி நடுகற்கள்[7] செய்தி பகர்கின்றன. மேலும் அரையர் நாட்டுச்சோழர்கள் ( இரேநாடு ), 'முதிராசு[8]' என்ற பெயர் கொண்டிருப்பது நோக்கத்தக்கது. எனவே முத்தரையர் என்ற சொல்லை, முது + அரையர் > முத்தரையர் என்று பொருள் கொள்வது சாலப்பொருந்துகிறது. மேலும் முத்தரையரும் களப்பிரரும் வேறனானவர்கள் என்பதை கல்வெட்டியல்.நடன.காசிநாதன் நிறுவியுள்ளார்[9].

இரேநாட்டுச் சோழரான எரிகால் முத்துராசு தனஞ்சயனின் முதல் பெயரன் குணமுதிதன் எனும் முதலாம் குவாவன் வழியில் வந்தவர்களே கிபி.7ம் நூற்றாண்டின் துவக்கம் முதல் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளை ஆட்சி செய்த முத்தரையர்கள் என்பதை செந்தலைத் தூண் கல்வெட்டு[10] மற்றும் இரேநாட்டுச் சோழர்கள் பற்றிய விரிவான கல்வெட்டு அறிக்கை[11] மற்றும் அதன்கண் கொடுக்கப்பட்டுள்ள பத்து தலைமுறைக்கு மேலான கால்வழிபட்டியல்[12] மூலமாக அறியலாம். பாண்டியரின் பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது.[சான்று தேவை]

முத்தரைய அரசர்கள்

  • தனஞ்சய முத்தரையர்
  • பெரும்பிடுகு முத்தரையர் என்கிற குவவன் மாறன் (கி.பி.655-கி.பி.680)
  • இளங்கோவதிரையர் என்கிற மாறன் பரமேசுவரன் (கி.பி.680-கி.பி.705)
  • இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் என்கிற சுவரன் மாறன் (கி.பி.705-கி.பி.745)
  • விடேல்விடுகு சாத்தன் மாறன் (கி.பி.745-கி.பி.770)
  • மார்பிடுகு என்கிற பேரடியரையன் (கி.பி.770-கி.பி.791)
  • விடேல்விடுகு முத்தரையர் என்கிற குவவன் சாத்தன் (கி.பி.791-கி.பி.826)
  • சாந்தன் பழியிலி (கி.பி.826-கி.பி.851)

கல்வெட்டுக் குறிப்புகள்

முத்தரையர் குறித்த கல்வெட்டுச் செய்திகள்:[13] [14]

  • நார்த்தாமலைக் கல்வெட்டு - விடேல் விடுகு முத்தரையன் மகனான சாந்தன் பழியிலியானவனின் மகள் பழியிலி சிறிய-நங்கை என்பவள், மீனவன் தமிழதிரையன் ஆயின மல்லன்அனந்தனை மணந்தாள் – என்று நார்த்தாமலை கல்வெட்டு கூறுகிறது. இதனால் மீனவனாகிய தென்னவனும், முத்தரையரும் சமகாலத்தில் புதுக்கோட்டை நிலப்பகுதியை ஆண்டனர் எனத் தெரிகிறது.
  • குடுமியான் மலை கோயில் கல்வெட்டு “சத்ரு பயங்கர முத்தரையன்” என்னும் பெயரைக் குறிப்பிடுகிறது.
  • குவான் மாறன் பெரும்பிடுகு முத்தரையன் பேரனும், மாறன் பரமேசுரன் இளங்கோவடி அரையன் மகனுமாகிய கவரன் மாறன் பெரும்பிடுகு முத்தரையன் – என்பது தஞ்சாவூரை அடுத்துள்ள செந்தலை (சந்திரலேகை சதுர்வேதி மங்கலம்) கல்வெட்டு.
  • முத்தரைநல்லூர் – திருச்சியை அடுத்துள்ள ஊர்.
  • அங்காடி கொள்ளப்போம் யானை கண்டேன். கொங்காளும் முத்தரையர் தமைக் கண்டேன் – தமிழறியும் பெருமான் கதை.

பாடல் குறிப்புகள்

நாலடியார் பாடல்கள் முத்தரையரைப் பெருமுத்தரையர் எனக் குறிப்பிடுகின்றன. இவர்கள் சிறந்த கொடையாளிகளாக விளங்கினர்.[15] [16]

கோவில்கள்

முத்தரையர்கள் ஆட்சிகாலத்தில் பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றுள் அறியப்பட்ட சில கோவில்கள்:

மேற்கோள்கள்

  1. Anthropological Survey of India. Bulletin, Volume 3, Issue 2. India. Dept. of Anthropology. பக். 8. 
  2. "Naladiyar". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2020-06-10. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help); Unknown parameter |Verse= ignored (help)
  3. "9th century temple gets facelift" (in en). The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/9th-century-temple-gets-facelift/article15211350.ece. 
  4. Indian History. Tata McGraw-Hill Education. பக். B55. 
  5. Ve Pālāmpāḷ (1978). Feudatories of South India, 800-1070 A.D.. Chugh Publications. பக். 135. 
  6. Naṭan̲a Kācinātan̲ (1978). Hero-stones in Tamilnadu. Arun Publications. பக். 20. 
  7. 7.0 7.1 7.2 7.3 "Tamil Arts Academy - Dr.R.Nagaswamy". tamilartsacademy.com. பார்க்கப்பட்ட நாள் 2020-06-11. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  8. Epigraphia indica. 27. பக். 221. https://archive.org/details/in.ernet.dli.2015.56527. 
  9. நடன.காசிநாதன். களப்பிரர். Government of TamilNadu, Department of Archeology. https://www.tnarch.gov.in/e-publication-books?term_node_tid_depth=219. 
  10. Epigraphia indica. 13. பக். 139. https://archive.org/details/in.ernet.dli.2015.56662/page/n168/mode/1up. 
  11. Epigraphia indica. 27. பக். 220 முதல். https://archive.org/details/in.ernet.dli.2015.56527/page/n305/mode/1up. 
  12. Epigraphia indica. 27. பக். 248. https://archive.org/details/in.ernet.dli.2015.56527/page/n338/mode/1up. 
  13. கொங்கு மண்டல சதகம், பாடல் 39, முனைவர் ந ஆனந்தி உரை, பக்கம் 46, 47, 48
  14. முத்தரசர்
  15. பெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங்
    கருனைச்சோ றார்வர் கயவர்; - கருனையைப்
    பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
    நீரும் அமிழ்தாய் விடும். 200

  16.  மல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்
    செல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்;
    நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
    செல்வரைச் சென்றிரவா தார். 296

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்தரையர்&oldid=2984777" இலிருந்து மீள்விக்கப்பட்டது