முத்தரையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சேவற்கொடியோன் (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2984564 இல்லாது செய்யப்பட்டது
சேவற்கொடியோன் (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2984559 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 10: வரிசை 10:


== முத்தரையரின் தோற்றம் ==
== முத்தரையரின் தோற்றம் ==
முத்தரையரின் தோற்றம் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. முத்தரையர் = மூன்று + தரையர் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை வென்ற [[களப்பிரர்]]களின் கிளைக்குடியினர் என்று மயிலை வேங்கடசாமி<ref>களப்பிரர் ஆட்சியில் தமிழகம், நாம் தமிழர் பதிப்பகம், மயிலை. சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.</ref>, டாக்டர் எஸ்.கே. அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் எஸ்.கே. அய்யங்கார் சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் களப்பிரர்களின் வழியில் வந்தவர்களே முத்தரையர் எனக் கொள்ள வேண்டும் என்கிறார்.
முத்தரையர்களின் தோற்றம் பற்றி அறிய, நாம் கருநாடகம் மற்றும் ஆந்திர நாட்டுச் சோழர் மரபைப் பற்றி விரிவாக விளக்கியாகவேண்டும். வேங்கடத்தை ஒற்றிய அருவா வடதலைநாடு மற்றும் அதை ஒற்றிய மேலை மற்றும் கீழை நாடுகள், சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்தேயமாகத் திரிந்திருந்தது<ref>{{Cite web|url=http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=193&pno=79|title=:: TVU ::|website=www.tamilvu.org|access-date=2020-06-10}}</ref>.


முத்தரையர், மாறன், மீனவன், தென்னவன் போன்ற [[பாண்டியர்|பாண்டியரின்]] பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது.{{cn}}
அங்கே இன்றைய தும்கூர், கர்னூல், அனந்தப்பூர், கடப்பை, நெல்லூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள், "அரையர் நாடு ( அ ) மகாராசபதி ( அ ) இரேநாடு 7000" என்று வழங்கப்பட்டிருந்தது. ( இன்றைய ராயல்சீமைப் பகுதி ). புகழ்பெற்ற கரிகால் சோழனின் கால்வழியினர் அப்பகுதியை ஆட்சி புரிந்திருப்பதை அங்கே நமக்கு கிடைக்கும் எண்ணற்ற கல்வெட்டுகள், செப்பேடுகள் உணர்த்துகின்றன<ref>{{Cite book|title=Epigraphia Indica|page=339|url=https://archive.org/details/in.ernet.dli.2015.115919|volume=11}}</ref>. நமக்கு கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் கரிகாலன் வழியில் வந்த சோழர்களில், அரையர் நாட்டில் முதலாமவனாகக் கருத்தப்படுபவன் "நந்திவருமன்" என்பவன் ஆவான். இவன் பெயரை நோக்கின், பல்லவர் மேலாண்மை ஏற்றவன் என்பது தெளிவகிறது. இவனுக்கு முன்னரும் 'சோழ மகாராசா' என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் பல கிடைப்பினும், அவற்றைக் கொண்டு இவனுக்கு முந்தைய மன்னர்கள் பற்றி அறிய முடியவில்லை. இவன் காலம் தோராயமாக பொ.ஊ.பி. [[Tel:500530|500 - 530]] ஆகும். இவன் காலத்தில் கடம்பர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி அரையர் நாடாகியிருந்தது. நந்திவருமனின் மரபினர் தும்கூரிலுள்ள எரிகால் (அ) நிடுகல் பகுதியிலிருந்து ஆட்சி புரிய ஆரம்பித்துள்ளனர்.

நந்திவருமனுக்கு மூன்று மகன்கள். முதலாமாவன் சிம்மவிஷ்ணு, இரண்டாமவன் சுந்தரநந்தன், மூன்றாமவன் தனஞ்சயன். சிம்மவிஷ்ணுவின் மகன் நல்லடி ஆவான். மூன்றாமவன் எரிகால் முத்துராசு தனஞ்சயன்<ref>{{Cite book|title=Epigraphia indica|volume=27|url=https://archive.org/details/in.ernet.dli.2015.56527|page=221}}</ref> என்று அரையர் நாட்டை ஆள்பவனாக குறிக்கப்படுகிறான். புண்ணியக்குமாரனின் மேலப்படு பட்டயத்தின் மூலம், மூவருமே சமாகலத்தில் வெவ்வேறு பகுதிகளை ஆட்சி புரிந்ததாக அறியமுடிகிறது. இந்த புண்ணியக்குமாரன், தனஞ்சயனுடைய மூன்று பெயரன்களுள் ஒருவனாவார். இவனுக்குப் 'பிரதிவல்லபன்' என்ற விருதுப்பெயரும், 'போறி சோழ மகாதேவி' என்ற இவன் அரசியின் பெயரும், இவன் சாளுக்கியருடன் தொடர்பு கொண்டுருந்தான் என்பதை உறுதி செய்கின்றன. தனஞ்சயனின் முதலிரண்டு பெயரன்கள் 'குணமுதிதன்' மற்றும் 'எரியம்மா' ஆவர். இந்த மூவருக்கும் தந்தை மற்றும் தனஞ்சயனுடைய மகன் என்று அறியப்படுபவர் 'நவராமன் (அ) மகேந்திர விக்கிரமச் சோழ மகாராசா' என்பவன் ஆவான். இவனுக்கு 'முடித்த சிலாக்ஷரன்' என்றும் ஒரு விருதுப்பெயர் உண்டு. இவனது காலம் தோராயமாக பொ.ஊ.பி [[Tel:575610|575 - 610]]. தனஞ்சயனுக்குப்பின் ஆட்சிப்பொறுப்பேற்றவன் இவனே.

மேலப்பாடு பட்டயத்தின் அடிப்படையில் வரலாற்றறிஞர் K.A. நீலகண்ட சாஸ்திரி, நந்திவருமனின் கால்வழிபட்டியலை<ref name=":0">{{Cite book|title=The Cholas|url=https://www.rarebooksocietyofindia.org/postDetail.php?id=196174216674_10154722892256675|page=103|author=K.A.NilakantaSastri}}</ref> வழங்கியுள்ளார்.

'''அதிராச சிறீ காந்தன் ( சிறீ கண்டன் ) :-'''

இவன் மயிலையை மையமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த ஒரு பொத்தப்பிச் சோழன்<ref>{{Cite book|title=கல்வெட்டு|author1=நடன.காசிநாதன்|author2=K.தாமோதரன்|url=https://tnarch.gov.in/e-publication-books?term_node_tid_depth=214|page=19}}</ref> ஆவான். இப்பகுதி தென்கிழக்கு அரையர் நாட்டுப்பகுதியாகும். பாண்டியன் பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரச்செப்பேடு வாயிலாக இவ்விவரங்களை அறிய முடிகிறது. இந்த சிறீ காந்தனின் மகளான 'அக்கள நிம்மடி' என்பவளே பராந்தக வீரநாராயணனின் தாய் ஆவாள்.

இந்த சிறீ காந்தனின் முன்னோரைப்பற்றி அறிய, கீழைச்சாளுக்கியரின் பட்டயங்களும்<ref name=":1">{{Cite book|title=Epigraphia indica|volume=5|url=https://archive.org/details/epigraphiaindica014342mbp|page=123}}</ref>, சுந்தரச் சோழனின் அன்பில் செப்பேடுகளும்<ref name=":2">{{Cite book|title=Epigraphia indica|volume=15|page=46|url=https://archive.org/details/in.ernet.dli.2015.108417/page/n69/mode/1up}}</ref> நமக்கு உதவுகின்றது. இவற்றை கொண்டு பார்க்கும்பொழுது,   இவன், அரையர்நாட்டு நந்திவருமனின் மூன்றாவது மகனான தனஞ்சயனின் இரண்டாவது பெயரனான எரியம்மாவின் வழியில் வந்தவன்<ref name=":2" /><ref name=":1" /><ref name=":0" /> என்று அறிய முடிகிறது. மேலும், முதலாம் பராந்தகனின் வேலஞ்சேரி பட்டயம்<ref name=":3">{{Cite web|url=http://www.tamilartsacademy.com/articles/article28.xml|title=Thiruttani and Velanjeri Copper Plates|website=www.tamilartsacademy.com|access-date=2020-06-10}}</ref> மற்றும் அன்பில் செப்பேட்டின் வழியே, இந்த சிறீ காந்தனே ஏகாதிபத்தியச் சோழ மரபை தோற்றுவித்த விசயாலையச் சோழனின் தந்தை<ref name=":3" /><ref>{{Cite book|title=Epigraphia indica|url=https://archive.org/details/in.ernet.dli.2015.56527|page=248|volume=27}}</ref><ref name=":2" /> என்பதையும் அறிய முடிகிறது. வேலஞ்சேரி பட்டயம் மற்றும் அன்பில் செப்பேடுகளை ஒப்பிட்டு பார்த்தால், சிறீ காந்தனுக்கு 'ஒற்றியூரான்'<ref name=":3" /><ref name=":2" /> என்று ஒரு குறிப்புப் பெயர் இருப்பதை அறிய முடிகிறது. ஒற்றியூர் என்பது இன்றைய திருவொற்றியூர்ப் பகுதியாகும். மயிலையும் ஒற்றியூரும் அருகருகே இருக்கும் ஊர்கள் என்பதை மணங்கொள்ள வேண்டும்.

விசயாலையச் சோழன், முத்தரைய மன்னர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றினான் என்பது வரலாறு கூறும் உண்மை. முத்தரையர்கள் யார் என்று நோக்கின், தனஞ்சயனின் முதல் பெயரனான குணமுதிதனின் வழியினர் என்பதைச் செந்தலைத் தூண் கல்வெட்டு<ref>{{Cite book|title=Epigraphia indica|url=https://archive.org/details/in.ernet.dli.2015.56662|page=139|volume=13}}</ref> மற்றும் புண்ணியக்குமாரனின் மேலப்பாடு<ref>{{Cite book|title=Epigraphia indica|volume=11|url=https://archive.org/details/in.ernet.dli.2015.115919|page=337}}</ref> பட்டயத்தின் வாயிலாக அறிய முடிகிறது.

சுந்தரநந்தனுக்குப்பின் ஆட்சிப்பொறுப்பு, சுந்தரநந்தனின் தம்பி மகனான நவராமன் (அ) விக்கிரமச் சோழ மகாராசா ஏற்றது தெரிகிறது. எனவே சுந்தரநந்தனுக்கு மகப்பேறு இல்லை என்ற முடிவுக்கு வருவது தவறில்லை. துவக்கத்தில், மகேந்திர விக்கிரமச்சோழ மகாராசா, பல்லவ மன்னர்களான 'சிம்மவிஷ்ணு' மற்றும் 'முதலாம் மகேந்திரவருமனின்' மேலாண்மைக்குட்பட்டு ஆட்சி செய்துள்ளதாகத் தெரிகிறது. இவனின் 'மகாராசா' எனும் பெயரின் மூலம், இவனின் அண்ணன் சிம்மவிஷ்ணுச் சோழன் போல இவனும் பிற்பாடு பல்லவர் மேலாண்மையை உடைத்துள்ளது தெரிகிறது. இவனுக்கு எரிகாலில் ஒரு துகராசா ( யுவராசன் ) இருந்துள்ளான். அவன் இவ்வரசனின் மூத்த மகனான 'குணமுதிதன்' என்று கருதப்படுகிறது. இதே சமகாலத்தில், மகேந்திரவிக்கிரமச்சோழ மகாராசாவின் கடைமகன் புண்ணியக்குமாரன், எரிகால்லின் முத்துராசாவாக இருந்து, சிப்பிலியைத் தலைநகராகக் கொண்டு, அரையர் நாட்டின் தென்பகுதியை ஆண்டுள்ளார். குணமுதிதனுக்குப் பின்னர், புண்ணியக்குமாரனே மேலப்பாடை தலைநகராகக்கொண்டு, அரையர் நாட்டுக்கு மகாராசா ஆகியுள்ளது அறியமுடிகிறது<ref>{{Cite book|title=A Comprehensive History of India|page=381, 382|url=https://archive.org/details/dli.bengal.10689.12720/page/n405/mode/2up|volume=3|Part=1}}</ref>. இந்த காலகட்டத்தில் தஞ்சை, திருச்சி மற்றும் புதுக்கோட்டைப் பகுதிகளை கைக்கொண்டு பல்லவரின் கீழ் குணமுதிதன் ஆண்டுள்ளது செந்தலைக் கல்வெட்டுகளால் தெரியவருகிறது.

இதுகாரும் நாம் கண்ட செய்திகள் அடிப்படையிலும், கீழைச்சாளுக்கியர் செப்பேடுகள், தளவாய்புரம் மற்றும் அன்பில் செப்பேடுகள் அடிப்படையிலும், கீழை அரையர் நாட்டுப்பகுதிகளை, மகேந்திரவிக்கிரமச்சோழ மகாராசாவின் இரண்டாம் மகனான எரியம்மாவும் அவன் வழியினரும் ஆட்சி புரிந்திருப்பதை அறிய முடிகிறது. மேலை அரையர் நாட்டுப்பகுதிகளை, மகேந்திரவிக்கிரமச்சோழ மகாராசாவின் கடைமகன் 'புண்ணியக்குமாரனின்' வழியினரும், சோழநாட்டை மூத்த இளவரசனான 'குணமுதிதன்' மற்றும் அவன் வழியினரும் ஆட்சி புரிந்துள்ளதை அறியமுடிகிறது.

மேலப்பாடு பட்டயத்தின் அடிப்படையில் வரலாற்றறிஞர் K.A. நீலகண்ட சாஸ்திரி, நந்திவருமனின் கால்வழிபட்டியலை வழங்கியுள்ளார்.

மா

மாறன், மீனவன், தென்னவன் போன்ற [[பாண்டியர்|பாண்டியரின்]] பெயர [[பாண்டியர்|முத்தரையர்கள்]] ்ப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது.{{cn}}


== முத்தரைய அரசர்கள் ==
== முத்தரைய அரசர்கள் ==

21:40, 10 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சிலை, திருச்சி

முத்தரையர் என்பது, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இருந்த அரச மரபுகளில் ஒன்றாகும். முத்தரையர்கள் தஞ்சை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மண்டலங்களை கி.பி 600 முதல் கி.பி 900 வரை ஆட்சி செய்தனர்.

தமிழ்ச் செய்யுள்களான நாலடியார் மற்றும் முத்தொள்ளாயிரத்தில் முத்தரையர் குடித்தலைவர்களைப் பற்றிய பாராட்டுத் தகவல்கள் காணப்படுகின்றன.[1][2]

7 முதல் 8 ஆம் நூற்றாண்டுகளில் முத்தரையர், பல்லவர்கள் கீழ் குறுநில மன்னர்களாக, காவேரி ஆற்றின் வளமான சமவெளிகளைக் கட்டுப்படுத்தினர். காஞ்சிபுரத்தில் வைகுந்த பெருமாள் கோவிலில் ஒரு கல்வெட்டு ஒரு முத்தரைய அரசன் பற்றி கூறுகிறது. வரலாற்றாசிரியர் டி. ஏ. கோபினாத ராவ் படி, இந்த அரசன் சுவரன் மாறன். இந்தக் கல்வெட்டில் "கள்வர் கள்வன்" என்று அழைக்கப்படுகிறார். வரலாற்றாசிரியர் மகாகலிங்கத்தின் கூற்றுப்படி, சுவரன் மாறன், பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மனின் படைத் தலைவரான உதயச்சந்திராவுடன் சேர்ந்து சேரர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு எதிராக குறைந்தது பன்னிரண்டு போர்களில் ஈடுபட்டார்.[3] தஞ்சாவூர் மற்றும் வல்லம் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததாக சுவரன் மாறன் செந்தலை கல்வெட்டு குறிப்பிடுகிறது. பொ.ஊ.பி 850 களில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது விசயாலயச் சோழன் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றினான்.[4]

முத்தரையர்களுள் நன்கறியப்பட்ட ஆட்சியாளர்கள் முதலாம் குவாவன் (குணமுதிதன்), பெரும்பிடுகு முத்தரையர் (குவாவன் மாறன்), மாறன் பரமேசுவரன் (இளங்கோவதிரையர்), இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் (சுவரன் மாறன்) ஆகியோராவர் .[5][6]

முத்தரையரின் தோற்றம்

முத்தரையரின் தோற்றம் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. முத்தரையர் = மூன்று + தரையர் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை வென்ற களப்பிரர்களின் கிளைக்குடியினர் என்று மயிலை வேங்கடசாமி[7], டாக்டர் எஸ்.கே. அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் எஸ்.கே. அய்யங்கார் சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் களப்பிரர்களின் வழியில் வந்தவர்களே முத்தரையர் எனக் கொள்ள வேண்டும் என்கிறார்.

முத்தரையர், மாறன், மீனவன், தென்னவன் போன்ற பாண்டியரின் பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது.[சான்று தேவை]

முத்தரைய அரசர்கள்

  • தனஞ்சய முத்தரையர்
  • பெரும்பிடுகு முத்தரையர் என்கிற குவவன் மாறன் (கி.பி.655-கி.பி.680)
  • இளங்கோவதிரையர் என்கிற மாறன் பரமேசுவரன் (கி.பி.680-கி.பி.705)
  • இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் என்கிற சுவரன் மாறன் (கி.பி.705-கி.பி.745)
  • விடேல்விடுகு சாத்தன் மாறன் (கி.பி.745-கி.பி.770)
  • மார்பிடுகு என்கிற பேரடியரையன் (கி.பி.770-கி.பி.791)
  • விடேல்விடுகு முத்தரையர் என்கிற குவவன் சாத்தன் (கி.பி.791-கி.பி.826)
  • சாந்தன் பழியிலி (கி.பி.826-கி.பி.851)

கல்வெட்டுக் குறிப்புகள்

முத்தரையர் குறித்த கல்வெட்டுச் செய்திகள்:[8] [9]

  • நார்த்தாமலைக் கல்வெட்டு - விடேல் விடுகு முத்தரையன் மகனான சாந்தன் பழியிலியானவனின் மகள் பழியிலி சிறிய-நங்கை என்பவள், மீனவன் தமிழதிரையன் ஆயின மல்லன்அனந்தனை மணந்தாள் – என்று நார்த்தாமலை கல்வெட்டு கூறுகிறது. இதனால் மீனவனாகிய தென்னவனும், முத்தரையரும் சமகாலத்தில் புதுக்கோட்டை நிலப்பகுதியை ஆண்டனர் எனத் தெரிகிறது.
  • குடுமியான் மலை கோயில் கல்வெட்டு “சத்ரு பயங்கர முத்தரையன்” என்னும் பெயரைக் குறிப்பிடுகிறது.
  • குவான் மாறன் பெரும்பிடுகு முத்தரையன் பேரனும், மாறன் பரமேசுரன் இளங்கோவடி அரையன் மகனுமாகிய கவரன் மாறன் பெரும்பிடுகு முத்தரையன் – என்பது தஞ்சாவூரை அடுத்துள்ள செந்தலை (சந்திரலேகை சதுர்வேதி மங்கலம்) கல்வெட்டு.
  • முத்தரைநல்லூர் – திருச்சியை அடுத்துள்ள ஊர்.
  • அங்காடி கொள்ளப்போம் யானை கண்டேன். கொங்காளும் முத்தரையர் தமைக் கண்டேன் – தமிழறியும் பெருமான் கதை.

பாடல் குறிப்புகள்

நாலடியார் பாடல்கள் முத்தரையரைப் பெருமுத்தரையர் எனக் குறிப்பிடுகின்றன. இவர்கள் சிறந்த கொடையாளிகளாக விளங்கினர்.[10] [11]

கோவில்கள்

முத்தரையர்கள் ஆட்சிகாலத்தில் பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றுள் அறியப்பட்ட சில கோவில்கள்:

மேற்கோள்கள்

  1. Anthropological Survey of India. Bulletin, Volume 3, Issue 2. India. Dept. of Anthropology. பக். 8. 
  2. "Naladiyar". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2020-06-10. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help); Unknown parameter |Verse= ignored (help)
  3. "9th century temple gets facelift" (in en). The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/9th-century-temple-gets-facelift/article15211350.ece. 
  4. Indian History. Tata McGraw-Hill Education. பக். B55. 
  5. Ve Pālāmpāḷ (1978). Feudatories of South India, 800-1070 A.D.. Chugh Publications. பக். 135. 
  6. Naṭan̲a Kācinātan̲ (1978). Hero-stones in Tamilnadu. Arun Publications. பக். 20. 
  7. களப்பிரர் ஆட்சியில் தமிழகம், நாம் தமிழர் பதிப்பகம், மயிலை. சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
  8. கொங்கு மண்டல சதகம், பாடல் 39, முனைவர் ந ஆனந்தி உரை, பக்கம் 46, 47, 48
  9. முத்தரசர்
  10. பெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங்
    கருனைச்சோ றார்வர் கயவர்; - கருனையைப்
    பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
    நீரும் அமிழ்தாய் விடும். 200

  11.  மல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்
    செல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்;
    நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
    செல்வரைச் சென்றிரவா தார். 296

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்தரையர்&oldid=2984721" இலிருந்து மீள்விக்கப்பட்டது