மலாய் மக்களின் நாட்டுப்புறவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 22: வரிசை 22:




[[பகுப்பு:மலாய் நாட்டுப்புறவியல்| 01]]
[[பகுப்பு:மலாய் நாட்டுப்புறவியல்| ]]
[[பகுப்பு:மலாய் நாட்டு பண்பாடு|F]]
[[பகுப்பு:மலாய் நாட்டு பண்பாடு|F]]
[[பகுப்பு:மலேசிய நாட்டு பண்பாடு 01]]
[[பகுப்பு:மலேசிய நாட்டு பண்பாடு 01]]

09:58, 7 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்

A traditional Malay healer in Singapore, the Straits Settlements – circa 1890

```மலேசிய நாட்டுப்புறவியல் என்பது கடல்சார் தென்கிழக்காசியாவில் வாழும் அம் மண்ணின் மக்களின் இடையே வழி வழியாக சந்ததி சந்ததியாக வழங்கப்படும் வாய் வழி சொல்லாக அல்லது எழுதப் பட்ட அல்லது குறியீட்டு வடிவில் வரும் தொடர்ச்சியான பாரம்பரியம் குறித்த அறிவு ஆகும். இது குறிப்பிட்ட இனமாகிய மலாய் மக்கள் அல்லது அப்பகுதியில் உள்ள அவர்களுக்கு தொடர்பான மலாய் மக்களைக் குறித்ததான கருத்துக்கள் அல்லது அவர்களை குறித்த அறிவு தொடர்புடையதாகும்.

இந்த அமைப்பில் உள்ள நாட்டுப்புறவியலில் காணப்படும் கதைகளானது மலாய் புராணங்களின் ஒரு பகுதியான இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வீக பொருட்கள் மற்றும் மாய உருவங்களை அடிக்கடி உள்ளடக்கி எழுதப்படுகிறது. மற்றவைகள் படைப்பு புராணங்கள்,வரலாற்று மனிதர்கள் மற்றும் நிகழ்ச்சிகளோடு தொடர்புடைய இடங்களின் பெயர்களுக்கான மரபுக்கதைகள் உடையதாகும். குணப்படுத்த கூடிய பழங்கால சடங்குகள் ,பாரம்பரிய மருந்துகள் மற்றும் சிக்கலான ஆரோக்கியம் மற்றும் மருந்து தொடர்புரடைய தத்துவங்களும் கூட இவற்றில் காணப்படும்

வாய்வழி பாரம்பரியம்

நாட்டுப்புறவியலின் பாரம்பரியம் ஆனது அநேக வேளைகளில் பெற்றோர் பொதுவாக தங்கள் குழந்தைகளுக்கு கூறிய குழந்தைப் பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள், திரையரங்க காட்சிகள் மற்றும் கதைகள் மூலம் பரப்பப்பட்டது. கோயில்கள், சந்தைகள் மற்றும் அரண்மனை வளாகங்களில் சுற்றித் திரியும் நாடோடி கதை சொல்லிகள் தங்கள் வாய்வழி சொற்கள் மூலமாக இந்த பாரம்பரியமான நாட்டுபுறவியல் ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு செல்ல முக்கிய பங்கு வகித்தனர். இவர்கள் தாங்களே எழுதி வடிவமைத்த கவிதைகள் மற்றும் உரைநடைகள் வாயிலாக இதை பரப்பினர். இந்த நாட்டுப்புற பாடல்கள் மற்றும் உரைநடைகள் அநேக வேளைகளில் தார்மீக கருத்துகளைக் கொண்டதாக இருந்தது. மற்றும் சில கதைகள் விலங்குகள் பேசுவன போல காண்பிக்கப் பட்டுள்ளது.

நாடோடிப் பாடல்கள்

வாய்வழியாக பரப்பப்பட்ட நாட்டு புறவியலில் மற்ற எல்லா வடிவங்களைக் காட்டிலும் நாட்டுப் புற இசை மலாய் சமூகத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. பழங்காலங்களில் பாடப்படும் பாடல்கள் மற்றும் இன்னிசைகள் மறுபடி மறுபடி திருமணம், மகப்பேறு மற்றும் குழந்தைப் பிறப்பு, பக்தியை வெளிப்படுத்தும் சடங்குகள் மேலும் சசமூதாய மற்றும் மதம் சார்ந்த விழாக்களில் பாடப் பட்டு வருகின்றதது. இவைகள் அரசத் திருமணங்கள், அரசரின் பட்டமளிப்பு விழா மற்றும் அரச பிறந்த நாள் விழாக்கள் போன்றவற்றில் அவ்வப்போது மாற்றப்பட்ட பதிப்பாக பாடப்பட்டு வந்தது.

ஒவ்வாரு பகுதியும் அல்லது மாவட்டமும் அவற்றிற்கான வாய்வழிப் பரப்புரைகளைக் கொண்டு இருந்தாலும் லாகு ராக்கியாட் என்று அழைக்கப் படும் நாட்டுப்புற பாடல் தான் இந்த நாட்டுப்புற வாய்மொழிப் பரப்புரையில் முக்கிய பங்கு வகிக்கிறது. மத்திய கிழக்கு பகுதிகளின் தாக்கத்துக்கு உள்ளான காஸல் தெற்கு மலேசிய மாநிலமாகிய ஜோகார் முக்கியமாக மூவார் பகுதியில் பாடப்பட்டு வருகிறது. கவிஞர்களும் பாடகர்களும் பொதுவாக பெண்களே சிலவேளைகளில் ஆண்களும் சில பிரபலமான காதல் கவிதைகள் மற்றும் விடுகதைகளைப் பாடுவது உண்டு. இவைகள் பொதுவாக மலாய் கவிதை வடிவான பான்டன் எனும் வடிவில் இருக்கும். இந்த பான்டன் ஆனது ஆறு நாண்களைக் கொண்ட அரேபிய நாட்டு லூட், இந்திய தபேலா, மேற்கத்திய நாடுகளின் வயலின், துருத்தி வகை இசைக்கருவி(அக்கார்டின்) மற்றும் ஒலி உண்டாக்கும் மராக்கா எனும் கிலுகிலுப்பை போன்ற இசைக்கருவிகளுக்காக உருவாக்கப்பட்ட இசை வடிவ கவிதை ஆகும். [1]

குழந்தை பாடல்கள் மற்றும் தாலாட்டு போன்ற பாடல்கள் மலாய் மக்கள் மெலெகா மாநிலத்திலும் மற்றும் மலாய் மொழி பேசும் பேரன்கான் மக்களிடையே நடைபெறும் திருமணங்கள் மற்றும் பண்பாட்டு விழாக்களிலும் பாடப்பட்டு வருகிறது. இப்பாடல்களின் பொருளடக்கம் பொதுவாக காதல் குறித்ததான ஆலோசனை, வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்ததாக இருக்கும். இப்பாடல்கள் அன்போடு "காதல் பாடல்கள்" என்று அர்த்தம் கொள்ளும் வகையில் டொன்டாங் சயாங் என்று அழைக்கப் படுகிறது

References

  1. Moore, Wendy. 1995. This is Malaysia. New Holland Publishers.
  • Werner, Roland. 2002. Royal Healer. Royal Asiatic Society.

[[பகுப்பு:மலேசிய நாட்டு பண்பாடு]