தொல்காப்பியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →வெளிப் பார்வை: பராமரிப்பு using AWB |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{சான்றில்லை}} |
|||
=== தொல்காப்பியார் === |
|||
[[தொல்காப்பியம்]] எனும் நூலை எழுதியவர் தொல்காப்பியர் ஆவார். இவர் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாக்குமரி மாவட்டத்தைச்]] சேர்ந்தவராவார்.<ref>https://www.vikatan.com/anandavikatan/2011-aug-17/en-vikatan---madurai-edition/9246.html</ref> இவர் மரியாதையின் காரணமாக, '''தொல்காப்பியர்''' என்றழைக்கப்படுகிறார். கன்னியாக்குமரி மாவட்டம் ஈசாந்திமங்கலத்திலுள்ள ஒரு [[நீர் மருது]] மரத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. |
[[தொல்காப்பியம்]] எனும் நூலை எழுதியவர் தொல்காப்பியர் ஆவார். இவர் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாக்குமரி மாவட்டத்தைச்]] சேர்ந்தவராவார்.<ref>https://www.vikatan.com/anandavikatan/2011-aug-17/en-vikatan---madurai-edition/9246.html</ref> இவர் மரியாதையின் காரணமாக, '''தொல்காப்பியர்''' என்றழைக்கப்படுகிறார். கன்னியாக்குமரி மாவட்டம் ஈசாந்திமங்கலத்திலுள்ள ஒரு [[நீர் மருது]] மரத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. |
||
07:20, 13 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்
தொல்காப்பியம் எனும் நூலை எழுதியவர் தொல்காப்பியர் ஆவார். இவர் கன்னியாக்குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.[1] இவர் மரியாதையின் காரணமாக, தொல்காப்பியர் என்றழைக்கப்படுகிறார். கன்னியாக்குமரி மாவட்டம் ஈசாந்திமங்கலத்திலுள்ள ஒரு நீர் மருது மரத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தொல்காப்பியரின் காலம்
- தொல்காப்பியத்தினை எழுதியவராகக் கருதப்படுபவர் தொல்காப்பியர் ஆவார். இவர் வாழ்ந்த காலம் இன்றளவும் தெளிவானதாக இல்லை.
- தொல்காப்பியர் பதஞ்சலி முனிவர் காலத்தினும் (கி. மு. 200) முற்பட்டவர்[2] என கே. எஸ். சீனிவாசப்பிள்ளை தனது நூலான தமிழ் வரலாறு நூலின் 26 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
- தொல்காப்பியர் எழுதிய 'தொல்காப்பியம்' வியாச முனிவர் வேதத்தைப் பகுத்ததற்கு முன் எழுந்தது[3]' என டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும் என்ற தனது நூலின் 13-14 ஆகிய பக்கங்களில் விளக்குகின்றார்.
- தொல்காப்பியனார் கி. மு. நான்காம் நூற்றாண்டினர்[4] என தமிழ் ஸ்டடீஸ் என்ற நூலில் 8 ஆம் பக்கத்தில் எம். சீனிவாச ஐயங்கார் தனது கருத்தை விளக்குகின்றார்.
- வேதகாலமாகிய கி. மு. 1500 ஆம் ஆண்டிற்கும் முற்பட்டவர் தொல்காப்பியர் என மறைமலை அடிகளார் குறிப்பிடுகின்றார்.
- "தொல்காப்பியனார் கி. மு. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிற்பட்டவராதல் இயலாது[5]" என வித்வான் க. வெள்ளைவாரணன் தன் 'தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்' என்ற நூலின் 127 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
- இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரைப்படி தொல்காப்பியர் காலம் குறைந்தது கி.மு. 4200ஐத் தொடும்.
மேற்கோள்
- ↑ https://www.vikatan.com/anandavikatan/2011-aug-17/en-vikatan---madurai-edition/9246.html
- ↑ தமிழ் வரலாறு, கே.எஸ். சீனிவாசப்பிள்ளை, பக்கம் - 26
- ↑ சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும் - டாக்டா் உ.வே.சாமிநாதய்யா்,பக்கம் 13-14
- ↑ தமிழ் ஸ்டடீஸ் - எம்.சீனிவாச ஐயங்கார்.
- ↑ தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம், க.வெள்ளைவாரணன், பக்கம் 127.
வெளிப் பார்வை
- தொல்காப்பியர் சொல்-விளையாட்டு
- தொல்காப்பியர் காலம் - பாணினி இலக்கணம் தோன்றுவதற்கு முன்னர் ஐந்திரம் என்னும் வடமொழி இலக்கணம் நிலவிய காலம்