விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit |
தரவு இறக்கம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit |
||
வரிசை 6: | வரிசை 6: | ||
| head_label = அதிபர் |
| head_label = அதிபர் |
||
| head = |
| head = |
||
| type = [[தேசியப் பாடசாலைகள் (இலங்கை)| |
| type = [[தேசியப் பாடசாலைகள் (இலங்கை)|மத்திய பாடசாலை]] |
||
| affiliation = |
| affiliation = |
||
| grades = 1–13 |
| grades = 1–13 |
||
வரிசை 12: | வரிசை 12: | ||
| established = 1932 |
| established = 1932 |
||
|city = [[நீர்கொழும்பு]] |
|city = [[நீர்கொழும்பு]] |
||
|province = [[மேல் மாகாணம், இலங்கை| |
|province = [[மேல் மாகாணம், இலங்கை|மேல்மாகணம்]] |
||
|மாவட்டம்= |
|மாவட்டம்= கம்பஹா |
||
|country = [[இலங்கை]] |
|country = [[இலங்கை]] |
||
|staff = 72 |
|staff = 72 |
||
வரிசை 25: | வரிசை 25: | ||
}} |
}} |
||
'''விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி''' (''Wijayaratnam Hindu Central College'') [[இலங்கை]]யின் |
'''விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி''' (''Wijayaratnam Hindu Central College'') [[இலங்கை]]யின் மேல் மாகாணம் [[கம்பஹா]] மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு [[இந்து]] தமிழ்ப் [[இலங்கைப் பாடசாலை|பாடசாலை]] ஆகும். இப்பாடசாலை ச.க. விஜயரத்தினம் என்பவரால் 1932ம் ஆண்டு அக்டோபர் 7ம் நாள் [[நீர்கொழும்பு]] வாழ் தமிழர்களுக்காக நிறுவப்பட்டது. மாணவர்கள் தமிழ் மொழியூடாகக் கற்கைகளை மேற்கொள்ளக் கூடிய வசதிகள் உண்டு. தனியாக ஒரு கணினி ஆய்வுகூடமும், நூலகம், விஞ்ஞான ஆய்வுகூடம் போன்ற வசதிகள் உண்டு. |
||
== வரலாறு == |
== வரலாறு == |
08:44, 21 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்
விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி | |
---|---|
அமைவிடம் | |
நீர்கொழும்பு, மேல்மாகணம் இலங்கை | |
தகவல் | |
வகை | மத்திய பாடசாலை |
குறிக்கோள் | வையந்தோறும் தெய்வம் தொழு |
தொடக்கம் | 1932 |
அதிபர் | திரு.நா.புவனேஸ்வரராஜா |
பணிக்குழாம் | 72 |
தரங்கள் | 1–13 |
வயது | 6 to 18 |
மொத்த சேர்க்கை | 1600 (2010) |
இணையம் | முகநூல் |
விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி (Wijayaratnam Hindu Central College) இலங்கையின் மேல் மாகாணம் கம்பஹா மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு இந்து தமிழ்ப் பாடசாலை ஆகும். இப்பாடசாலை ச.க. விஜயரத்தினம் என்பவரால் 1932ம் ஆண்டு அக்டோபர் 7ம் நாள் நீர்கொழும்பு வாழ் தமிழர்களுக்காக நிறுவப்பட்டது. மாணவர்கள் தமிழ் மொழியூடாகக் கற்கைகளை மேற்கொள்ளக் கூடிய வசதிகள் உண்டு. தனியாக ஒரு கணினி ஆய்வுகூடமும், நூலகம், விஞ்ஞான ஆய்வுகூடம் போன்ற வசதிகள் உண்டு.
வரலாறு
1954 அக்டோபர் 7 விஜயதசமி அன்று 32 மாணவர்களுடனும் இரு ஆசிரியர்களுடனும் விவேகானந்தா வித்தியாலம் என்ற பெயரில் இப்பாடசாலை உருவானது. 1960 டிசம்பர் மாதத்தில் இவ்வித்தியாலயத்தை அரசாங்கம் பெறுப்பேற்ற பின், 1964 பெப்ரவரி முதலாம் தேதி, நீர்கொழும்பு விவேகானந்தா மகா வித்தியாலம் என்ற பெயரில் மகா வித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டது. 1964 ஆகத்து/ நவம்பர் மாதங்களுக்கிடையில் இப் பாடசாலையின் பெயர் விஐயரத்தினம் மகா வித்தியாலயம் என மாற்றம் பெற்றது. 1972 ஆம் ஆண்டில் பழைய மாணவர் சங்கம் அமைக்கப்பட்டது. 1994 ல் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியாக பெயர் மாற்றம் பெற்றது. 1995 சூலை 13 அன்று இக்கல்லூரியில் ஞானவிநாயகர் ஆலயம் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதனைக் கல்லூரியின் விஜயசக்தி இந்து மாமன்றத்தினர் பராமரித்து வருகின்றனர்.
பாடசாலைப் பண்
- வாழிய என்றும் வாழிய என்றும் வாழிய வாழியவே
- விஐயரத்தினம் இந்து மத்திய கல்லூரி வாழியவே
- நாளும் அறிவியல் கலையியல் தந்து நந்தமை ஓங்குகவே
- நலமளி சைவ செந்தமிழ் வடிவுகொள் நாயகி வாழியவே
- தாழ்வின் வகையென தாயுனைத்தந்துயர் தலைவர் வாழியவே
- தகபொருள் ஈன்றிடும் பெற்றார் அன்பர் தருமம் வாழியவே.
- நீள்புகழ் அன்னை தன் சேவடி பரவி நிதமும் நிற்போமே.
- நிகரில் அறம் பொருள் இன்பம் மலிதர நீர்கொழும் போங்குகவே
- வாழிய என்றும் வாழிய என்றும் வாழிய வாழியவே
கல்லூரியில் சேவையாற்றிய அதிபர்கள்
- (10.10.1954 - 30.12.1962) பண்டிதர். க. மயில்வாகனம்
- (31.12.1962 - 15.03.1964) திரு. கந்தசாமி
- (16.03.1964 - 31.01.1974) வித்துவான். இ. சி. சோதிநாதன்
- (31.01.1974 - 15.02.1979) திரு. வ. சண்முகராசா
- (16.02.1979 - 05.05.1980) திரு. வீ. நடராஜா
- (06.05.1980 - 29.11.1980) திரு. ஈ. பத்மநாதன்
- (30.11.1980 - 16.01.1981) திரு. என். பாலசுப்பிரமணியம்
- (16.01.1981 - 20.02.1981) திரு. ஈ. எஸ். வி. பெரேரா
- (20.02.1981 - 31.12.1994) திருமதி. அ. கல்யாணசுந்தரம்
- (01.01.1995 - 30.06.1996) திரு. வே. சண்முகராசா
- (01.07.1996 - 10.09.2014) திரு. ந. கணேசலிங்கம்
- (10.09.2014 - இன்று வரை திரு. நா. புவனேஸ்வரராஜா
இல்லங்கள்
மாணவர்கள் "திருகேதீஸ்வரம்", "கோணேஸ்வரம்", "நகுலேஸ்வரம்", "முன்னேஸ்வரம்" என நான்கு இல்லங்களில் பிரிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை ஆளுமை விருத்தி கழகங்கள்
- விஜயசக்தி இந்து மன்றம், இந்து மாணவர்களுக்காக நிறுவப்பட்டது
- கிறிஸ்தவ மன்றம்,
- தமிழ் இலக்கிய மன்றம்,
- வணிக கலா மன்றம்,
- உயர்தர மாணவர் ஒன்றியம்,
- விஞ்ஞான மன்றம்
இங்கு படித்த பிரபலங்கள்
- லெ. முருகபூபதி, எழுத்தாளர்
- கனகலதா கிருஷ்ணசாமி ஐயர், எழுத்தாளர், ஊடகவியலாளர்