திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 101: வரிசை 101:
| [[கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்|கோலாலம்பூர்]]
| [[கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்|கோலாலம்பூர்]]
|-
|-
| [[சிறீலங்கன் விமானச் சேவை]]
| [[சிறீலங்கன் விமானச் சேவை|ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்]]
| [[பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம்|கொழும்பு]]
| [[பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம்|கொழும்பு]]
|-
|-

04:42, 12 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

Thiruchchirappalli International Airport
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்[1]

ISO 9001:2008 CERTIFIED


திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலைய முகப்பு

IATA: TRZICAO: VOTR
TRZ is located in இந்தியா
TRZ
TRZ
இந்திய வரைபடத்தில் திருச்சி வானூர்தி நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்திநிலைய வகை பொதுத்துறை
உரிமையாளர் பொது வானூர்திப் போக்குவரத்து அமைச்சகம் (இந்திய அரசு)
இயக்குனர் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவது திருச்சிராப்பள்ளி மற்றும் நடுத்தமிழக மாவட்டங்கள்
அமைவிடம் திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
உயரம் AMSL 288 அடி / 88 மீ
ஆள்கூறுகள் 10°45′55″N 078°42′35″E / 10.76528°N 78.70972°E / 10.76528; 78.70972
இணையத்தளம் http://aai.aero
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
09/27 2,480 8,136 தார்
புள்ளிவிவரங்கள் (03/2018)
பயணிகள் போக்குவரத்து 15,13,273
வானூர்திப் போக்குவரத்து 12,801
சரக்குப் போக்குவரத்து 7,541டன்கள்
Source: AAI[2][3][4]

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம், இந்தியாவில் உள்ள பழமையான வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையமானது இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பன்னாட்டு வானூர்தி நிலையங்களில் முதலிடத்தில் உள்ளது. மேலும் பயணிகள் போக்குவரத்தின் அடிப்படையில் இந்தியாவில் பதினொன்றாம் இடத்தில் உள்ளது[5]. இங்கு முதலில் இந்தியன் ஏர்லைன்ஸ், ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் போன்ற வானூர்தி நிறுவனங்கள் வானூர்தி சேவையை இயக்க தொடங்கின. பின் கிங்பிஷர், பாரமவுண்ட் ஏர்வேஸ், மிகின் லங்கா, ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் ஏசியா போன்ற வானூர்தி நிறுவனங்கள், வானூர்தி சேவையை தொடங்கின. இதில் கிங்பிஷர், பாரமவுண்ட் ஏர்வேஸ் மற்றும் மிகின் லங்கா விமான நிறுவனங்கள் தங்களது சேவையை நிறுத்திக்கொண்டன.

தமிழகத்தில் சென்னை மற்றும் கோவைக்கு அடுத்து திருச்சி வானூர்தி நிலையம் தான் சர்வதேச வானூர்தி போக்குவரத்து கொண்ட விமான நிலையமாக ௨௦ ஆண்டுகளுக்கு மேலாக விளங்கி வருகிறது. திருச்சி வானூர்தி நிலையத்துக்கு வானூர்திப் போக்குவரத்து அமைச்சகத்தால் ௪ அக்டோபர் ௨௦௧௨ இல் பன்னாட்டு அந்தஸ்து வழங்கப்பட்டது.[1]

இந்த வானூர்தி நிலையம் தினமும் கிட்டத்தட்ட ௩௦௦௦ வெளிநாட்டு பயணிகளை கையாண்டு வருகிறது. வாரத்திற்கு ௭௭ விமானங்கள் திருச்சியிலிருந்து இயக்கப்படுகின்றன. சராசரியாக நாள்தோறும் திருச்சியிலிருந்து ௬௦௦ பயணிகள் கோலாலம்பூருக்கும், ௪௦௦ பயணிகள் சிங்கப்பூருக்கும் செல்கின்றனர்[6]. இந்த வானூர்தி நிலையம் சுங்கத்தீர்வு போன்ற வசதிகள் பெற்றதாக இருப்பதால் வெளிநாட்டு போக்குவரத்து வானூர்திகளை இயக்குவது சாத்தியமானதாகவும், வசதியானதாகவும் உள்ளது. ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்ற இந்த வானூர்தி நிலையம், நடுக்கிழக்கு நாடுகள், இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு செல்ல உதவியாக மிகச் சிறந்த தொண்டாற்றி வருகிறது.

வரலாறு

இந்த விமான நிலையம் இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. பிரித்தானிய விமானப்படை உலகப் போரின் போது இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தி்யது. போரில் சேதமடைந்த விமானங்கள் இங்கு கொண்டுவரப்பட்டு 2 கி.மீ. தொலைவில் உள்ள பொன்மலை பணிமனையில் பழுது பார்க்கப்பட்டது. உலகப் போருக்குப் பின்னர் பயணிகள் விமான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. பயணிகள் போக்குவரத்து 1980களின் ஆரம்பகாலத்தில் தொடங்கப்பட்டது. இலங்கை ஏர்லைன்ஸ் வாரம் ஒரு முறை கொழும்புக்கு 1981 ம் ஆண்டு விமான சேவையை துவக்கியது, பின்னர் படிப்படியாக இப்போது தினசரி இரண்டு சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியன் ஏர்லைன்ஸ் 80களில் சென்னைக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது.

பிஆர் பிரவுஸ்(1942 இல் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளராக பணிபுரிந்தவர்) இன் கூற்றுப்படி 1930 மற்றும் 40களில் விமான நிலையம் ரேஸ் கோர்ஸாக பயன்படுத்தப்பட்டது. விமான நிலையத்தில் ஒரு கட்டுப்பாட்டு கோபுரமும் 600 மீட்டர் ஓடுபாதையும் தவிர எந்தவொரு கட்டிடமும் இல்லை. மேலும் அவர் கூறுகையில், திருச்சி விமான நிலையம் டாட்டாவின் டகோட்டா ரக விமானங்களைக் கையாண்டுள்ளது. இந்த விமானம் மும்பையிலிருந்நு பெங்களூரு வழியாக திருச்சி வந்து எரிபொருள் நிரப்பிய பிறகு பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்புக்கு சென்றது.[7]. வழக்கமாக 5 முதல் 20 பேர் திருச்சியிலிருந்து இந்த விமானத்தில் பயணம் செய்தனர்.

முனையங்கள்

திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் இரண்டு அடுத்தடுத்த முனையங்கள் உள்ளது. புதிய ஒருங்கிணைந்த முனையம் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. பழைய முனையம் சர்வதேச சரக்கு முனையமாக மாற்றப்பட்டு இயங்கிவருகிறது.

பயணிகள் முனையம்

80 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய ஒருங்கிணைந்த பயணிகள் முனையம் 21 பிப்ரவரி 2009 அன்று தொடங்கி ஜூன் 2009 1ல் இருந்து செயல்படத் தொடங்கியது[8] இரண்டு மாடி முனையத்தில் மொத்த தரைப் பகுதி 11,777 சதுர மீட்டர் உள்ளது. முனையம் கொடுக்கப்பட்ட நேரத்தில் 400 பயணிகளைக் கையாளுவதற்கு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. புதிய முனையத்தின் சில அம்சங்கள் :[9]

  • 12 சோதனை நுழைதாள் கூண்டுகள் (கவுண்டர்கள்)
  • 4 சுங்கத்துறை நுழைதாள் கூண்டுகள் (கவுண்டர்கள்) (1 புறப்பாடு + 3 வருகை)
  • 16 புலம்பெயர்வு நுழைதாள் கூண்டுகள் (கவுண்டர்கள்) (8 புறப்பாடு + 8 வருகை)
  • 1 சுகாதார அலுவலர்
  • 3 சாதன வார்கள் (47 மீ ஒவ்வொன்றும்)
  • 5 எண்ணிக்கை பொதிகளுக்கான ஊடுகதிர் பரிசோதனை சாதனம் [10]
  • 210 மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர்
  • பாதுகாப்பு சோதனை அலகுகள் = 2
  • மொத்தம் விமானம் நிற்க இடம் = 7
    • 3 குறியீடு டி விமானத்திற்கு
    • 4 குறியீடு சி விமானத்திற்கு

சரக்கு முனையம்

விமான நிலையத்தில் பழைய முனையம் ஒரு சர்வதேச சரக்கு வளாகமாக மாற்றப்பட்டுள்ளது. 4000 சதுர மீட்டர் சரக்கு வளாகம் 21 நவம்பர் 2011 அன்று செயல்பாட்டிற்கு வந்தது.[11]. தமிழ்நாட்டின் மத்திய மற்றும் தெற்குப் பகுதியிலிருந்து வெளிநாட்டு ஏற்றுமதிக்கு சுலபமான வழியாகவும் நுழைவாயிலாகவும் இந்த விமான நிலையம் உள்ளது. அழியக் கூடிய மற்றும் கெடாத பொருட்கள், ஆடைகள், கைத்தறி, கணினி ஹார்டுவேர் உட்பட பல்வேறு வகையான பொருட்கள் இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்றன, இதனால் விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்துக்கு அதிக தேவை உள்ளது. 6000 முதல் 7000 டன்கள் வரை சரக்குகள் ஏற்றுமதி செய்ய மதிப்பிடப்பட்டுள்ளது.[12] மேலும் இங்கு ஆபத்தான சரக்குகளை கையாள்வதற்கான தனி வளாகமும் அமைந்துள்ளது.

ஓடுபாதை

திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் முதலில் குறுக்காக சந்திக்கும் இரண்டு ஓடுபாதைகள் இருந்தன. பின்னர் சிறிய ஓடுபாதையான 15/33 மூடப்பட்டு, தரையிறங்கும் விமானங்களை விமான நிறுத்துமிடத்துக்கு கொண்டு செல்லும் பாதையாக பயன்படுத்தப்படுகிறது. இப்போது இங்கு பயன்பாட்டில் இருப்பது 2480 மீட்டர் நீளமுள்ள 09/27 ஓடுபாதை ஆகும். மிகவும் நீளம் குறைவான இந்த ஓடுபாதையில் ஏர்பஸ் A320, 321, போயிங் 737 மற்றும் ATR ரக சிறிய விமானங்கள் மட்டுமே தரையிறங்க முடியும். மேலும் ஓடுபாதையில் தரையிறங்குவதற்கான வழிகாட்டி கருவி, இரவு நேரத்தில் தரையிறங்க ஓடுபாதை விளக்குகள் உட்பட அனைத்து நவீன வசதிகளும் உள்ளன[13].

விரிவாக்கம்

தொடர்ந்து அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தினால், திருச்சிராப்பள்ளி விமான நிலையமானது கடந்த 2004ஆம் ஆண்டு முதல் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பழைய ஓடுபாதை 6,000 அடியிலிருந்து (1,829 மீட்டர்) 8,136 அடியாக (2,480 மீட்டர்) நீட்டிக்கப்பட்டது; விமான நிறுத்துமிடங்கள் ஏழாக அதிகரிக்கப்பட்டது; தரையிறங்கிய விமானம் நேராக நிறுத்துமிடத்திற்கு செல்வதற்கான "டாக்சிவே" பாதை மற்றும் புதிய முனையம் ஒன்றும் கட்டப்பட்டது.

விரிவாக்கத்தின் இரண்டாம் கட்டமாக, தற்போதுள்ள சிறிய ஓடுபாதையை 12,500 அடியாக (3,810 மீட்டர்) உயர்த்தவும், அதி நவீன விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கவும், தற்போதுள்ள பயணிகள் முனையத்தை 17,920 சதுர மீட்டராக (192,900 சதுர அடி) விரிவுபடுத்தி, ஒரே நேரத்தில் 1075 பயணிகளை கையாளவும், வேறு சில கட்டடங்கள் கட்டவும் இந்திய விமான நிலைய ஆணையம் முடிவெடுத்துள்ளது.[14] இதற்காக விமான நிலையத்தின் அருகேயுள்ள விவசாய நிலங்கள் மற்றும் இந்திய ராணுவத்துக்கும் சொந்தமான நிலங்கள் ஆகியனவற்றை கையகப்படுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.[15]


வானூர்திச் சேவைகள் மற்றும் சேருமிடங்கள்

வானூர்திச் சேவைகள் சேருமிடங்கள்
அலையன்ஸ் ஏர் சென்னை
இன்டிகோ ஐதராபாத்து, சிங்கப்பூர், சென்னை, பெங்களூர்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சார்ஜா, சிங்கப்பூர், துபாய், அபுதாபி (2020 மார்ச் 30 முதல்), தோஹா (2020 மார்ச் 31 முதல்)
ஏர்ஏசியா கோலாலம்பூர்
மலின்டோ ஏர் கோலாலம்பூர்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு
ஸ்கூட் ஏர் சிங்கப்பூர்

புகைப்படங்கள்

ஆதாரங்கள்

  1. 1.0 1.1 http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=88173
  2. "Traffic Statistics-2016" (PDF). AAI. பார்க்கப்பட்ட நாள் 30 January 2017.
  3. "Aircraft Movements-2016" (PDF). AAI. பார்க்கப்பட்ட நாள் 30 January 2017.
  4. "Cargo Statistics-2016" (PDF). AAI. பார்க்கப்பட்ட நாள் 30 January 2017.
  5. "Trichy becomes India's fastest growing international airport". The Economic Times. 05 April 2014. பார்க்கப்பட்ட நாள் 06 August 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  6. airport/articleshow/28302718.cms "Malindo Air lands at Trichy airport". The Times of India. 03 January 2014. பார்க்கப்பட்ட நாள் 06 August 2014. {{cite web}}: Check |url= value (help); Check date values in: |accessdate= and |date= (help)
  7. http://www.flightglobal.com/pdfarchive/view/1935/1935%20-2-%200406.html
  8. "Trichy Airport new terminal inauguration". The Hindu. 18 February 2009. http://www.hindu.com/2009/02/18/stories/2009021857220100.htm. பார்த்த நாள்: 13 January 2011. 
  9. "Trichy Airport new terminal". Equity Bulls. 22 February 2009. http://www.equitybulls.com/admin/news2006/news_det.asp?id=46165. பார்த்த நாள்: 5 January 2011. 
  10. http://www.aai.aero/allAirports/Trichy_pi.jsp
  11. Cargo complex commissioned
  12. [1]
  13. http://www.aai.aero/allAirports/Trichy_TI.jsp
  14. http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=103469
  15. "Committee formed for runway expansion at Trichy airport - Times Of India". Articles.timesofindia.indiatimes.com. 22 January 2012. பார்க்கப்பட்ட நாள் 1 May 2012.

வெளியிணைப்புக்கள்