அற்புதத் திருவந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 98: வரிசை 98:


அங்கையாற் காளாம் அது......................................11
அங்கையாற் காளாம் அது......................................11




அதுவே பிரானாமா றாட்கொள்ளு மாறும்

அதுவே யினியறிந்தோ மானால் - அதுவே

பனிக்கணங்கு கண்ணியார் ஒண்ணுதலின் மேலோர்

தனிக்கணங்கு வைத்தார் தகவு...................................12


தகவுடையார் தாமுளரேல் தாரகலம் சாரப்

புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர

ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச்

சார்ந்திடுமே லேபாவம் தான்.....................................13


தானே தனிநெஞ்சம் தன்னை உயக்கொள்வான்

தானே பெருஞ்சேமம் செய்யுமால் - தானேயோர்

பூணாகத்தாற் பொலிந்து பொங்கழல்சேர் நஞ்சுமிழும்

நீணாகத் தானை நினைந்து......................................14


நினைந்திருந்து வானவர்கள் நீள்மலரால் பாதம்

புனைந்தும் அடிபொருந்தமாட்டார் - நினைந்திருந்து

மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்

கென்செய்வான் கொல்லோ இனி..................................15


இனியோம் நாம்உய்ந்தோம் இறைவன்தாள் சேர்ந்தோம்

இனியோர் இடரில்லோம் நெஞ்சே - இனியோர்

வினைக்கடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக்

கனைக்கடலை நீந்தினோம் காண்................................16


காண்பார்க்கும் காணலாம் தன்மையனே கைதொழுது

காண்பார்க்கும் காணலாம் காதலால் - காண்பார்க்குச்

சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்கு

ஆதியாய் நின்ற அரன்.........................................17


அரனென்கோ நான்முக னென்கோ அரிய

பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரணழியத்

தானவனைப் பாதத் தனிவிரலால் செற்றானை

யானவனை எம்மானை இன்று....................................18


இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும்

அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றுமோர்

மூவா மதியானை மூவே ழுலகங்கள்

ஆவானைக் காணும் அறிவு.......................................19


அறிவானும் தானே அறிவிப்பான் தானே

அறிவா யறிகின்றான் தானே - அறிகின்ற

மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாசம்

அப்பொருளும் தானே அவன்......................................20


அவனே இருசுடர்தீ ஆகாச மாவான்

அவனே புவிபுனல்காற் றாவான் - அவனே

இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான

மயனாகி நின்றானும் வந்து.......................................21






07:27, 19 பெப்பிரவரி 2006 இல் நிலவும் திருத்தம்

காரைக்கால் அம்மையார் எழுதிய அற்புதத் திருவந்தாதி

பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்

சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்

மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே

எஞ்ஞான்று தீர்ப்ப திடர்....................................1


இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்

படரும் நெறி பணியாரேனும் -சுடர் உருவில்

என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்(கு)

அன்பறா தென்நெஞ் சவர்க்கு.................................2


அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்

அவர்க்கே நாம் அன்பாவதல்லால் -பவர்ச்சடைமேல்

பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்

காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்...............................3


ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டால்

கேளாத தென்கொலோ கேளாமை - நீளாகம்

செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம்

எம்மைஆட் கொண்ட இறை..................................4


இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி

இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் - இறைவனே

எந்தாய் எனஇரங்கும் எங்கள் மேல் வெந்துயரம்

வந்தால் அது மாற்றுவான்......................................5


வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்

தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான்

முன்னஞ்சத் தால்இருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்

என்நெஞ்சத் தான்என்பன் யான்..................................6


யானே தவமுடையேன் என்நெஞ்சே நன்னெஞ்சம்

யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானேயக்

கைம்மா உரிபோர்த்த கண்ணுதலாண் வெண்ணீற்ற

அம்மானுக் காளாயினேன்.......................................7


ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன்

ஆயினேன் அஃதன்றே யாமாறு -தூய

புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான்

அனற்கங்கை ஏற்றான் அருள்....................................8


அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்

அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே

மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்

எப்பொருளு மாவ தெனக்கு......................................9


எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்

மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்

கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்

உண்டே எனக்கரிய தொன்று...................................10


ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்

ஒன்றேஎன் உள்ளத்தி னுள்ளடைத்தேன் - ஒன்றே காண்

கங்கையான் திங்கள் கதிர்முடியான் பொங்கொளிசேர்

அங்கையாற் காளாம் அது......................................11



அதுவே பிரானாமா றாட்கொள்ளு மாறும்

அதுவே யினியறிந்தோ மானால் - அதுவே

பனிக்கணங்கு கண்ணியார் ஒண்ணுதலின் மேலோர்

தனிக்கணங்கு வைத்தார் தகவு...................................12


தகவுடையார் தாமுளரேல் தாரகலம் சாரப்

புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர

ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச்

சார்ந்திடுமே லேபாவம் தான்.....................................13


தானே தனிநெஞ்சம் தன்னை உயக்கொள்வான்

தானே பெருஞ்சேமம் செய்யுமால் - தானேயோர்

பூணாகத்தாற் பொலிந்து பொங்கழல்சேர் நஞ்சுமிழும்

நீணாகத் தானை நினைந்து......................................14


நினைந்திருந்து வானவர்கள் நீள்மலரால் பாதம்

புனைந்தும் அடிபொருந்தமாட்டார் - நினைந்திருந்து

மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்

கென்செய்வான் கொல்லோ இனி..................................15


இனியோம் நாம்உய்ந்தோம் இறைவன்தாள் சேர்ந்தோம்

இனியோர் இடரில்லோம் நெஞ்சே - இனியோர்

வினைக்கடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக்

கனைக்கடலை நீந்தினோம் காண்................................16


காண்பார்க்கும் காணலாம் தன்மையனே கைதொழுது

காண்பார்க்கும் காணலாம் காதலால் - காண்பார்க்குச்

சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்கு

ஆதியாய் நின்ற அரன்.........................................17


அரனென்கோ நான்முக னென்கோ அரிய

பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரணழியத்

தானவனைப் பாதத் தனிவிரலால் செற்றானை

யானவனை எம்மானை இன்று....................................18


இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும்

அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றுமோர்

மூவா மதியானை மூவே ழுலகங்கள்

ஆவானைக் காணும் அறிவு.......................................19


அறிவானும் தானே அறிவிப்பான் தானே

அறிவா யறிகின்றான் தானே - அறிகின்ற

மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாசம்

அப்பொருளும் தானே அவன்......................................20


அவனே இருசுடர்தீ ஆகாச மாவான்

அவனே புவிபுனல்காற் றாவான் - அவனே

இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான

மயனாகி நின்றானும் வந்து.......................................21


(மேலும் வளரும் .மொத்தப் பாடல்கள் 101. )

"https://ta.wikipedia.org/w/index.php?title=அற்புதத்_திருவந்தாதி&oldid=27960" இலிருந்து மீள்விக்கப்பட்டது