ஈழப் புரட்சி அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 112: வரிசை 112:


===அரசியல் நடவடிக்கைகள்===
===அரசியல் நடவடிக்கைகள்===
ஆரம்பகாலகட்டத்தில பலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட ஈரோஸ் அமைப்பு, அவ் இயக்கத்திடம் இராணுவ பயிற்சி பெற சிலரை லெனானிற்கு அனுப்பி வைத்தது.
ஆரம்பகாலகட்டத்தில் பலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட ஈரோஸ் அமைப்பு, அவ் இயக்கத்திடம் இராணுவ பயிற்சி பெற சிலரை லெனானிற்கு அனுப்பி வைத்தது.


இலங்கையில் குறிப்பிடதக்க முதல் அரசியல் நடவடிக்கையாக, 1976 ஆம் ஆண்டு வவுனியாவில் கண்ணாத்திட்டி என்ற இடத்தில் [[கண்ணாத்திட்டி விவசாய கூட்டுப்பண்ணை]] எனும் பண்ணையை ஆரம்பித்தது. இப்பண்ணையில் ஈரோஸ் அமைப்பு பின்பற்றி மார்க்சிய பொருளாதார சித்தாந்தங்களை பரீட்சித்து பார்த்தது. பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் ஆயுத பயிற்சி பெற்றவர்கள் நாடு திரும்பி, இந்த பண்ணையில் ஆயுதபயிற்சிகளை தொடர்ந்ததோடு மேலும் பலருக்கு ஆயுத பயிற்சிகளையும் வழங்கினர். இப்பண்ணையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும் ஆயுதபயிற்சி பெற்றார் <ref>{{cite news | first= T. Sabaratnam | title= Pirapaharan, Chapter 8-First Military Operation | publisher= தமிழ்சங்கம் இணையம் | url = http://www.sangam.org/Sabaratnam/PirapaharanChap8.htm | accessdate = 2016-01-07 }}</ref> .1978 ஆம் இப்பண்ணையில் இலங்கை இராணுவத்தினர் சோதனை நடாத்தி 12 பேரை கைது செய்தனர்.
இலங்கையில் குறிப்பிடதக்க முதல் அரசியல் நடவடிக்கையாக, 1976 ஆம் ஆண்டு வவுனியாவில் கண்ணாத்திட்டி என்ற இடத்தில் [[கண்ணாத்திட்டி விவசாய கூட்டுப்பண்ணை]] எனும் பண்ணையை ஆரம்பித்தது. இப்பண்ணையில் ஈரோஸ் அமைப்பு பின்பற்றி மார்க்சிய பொருளாதார சித்தாந்தங்களை பரீட்சித்து பார்த்தது. பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் ஆயுத பயிற்சி பெற்றவர்கள் நாடு திரும்பி, இந்த பண்ணையில் ஆயுதபயிற்சிகளை தொடர்ந்ததோடு மேலும் பலருக்கு ஆயுத பயிற்சிகளையும் வழங்கினர். இப்பண்ணையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும் ஆயுதபயிற்சி பெற்றார் <ref>{{cite news | first= T. Sabaratnam | title= Pirapaharan, Chapter 8-First Military Operation | publisher= தமிழ்சங்கம் இணையம் | url = http://www.sangam.org/Sabaratnam/PirapaharanChap8.htm | accessdate = 2016-01-07 }}</ref> .1978 ஆம் இப்பண்ணையில் இலங்கை இராணுவத்தினர் சோதனை நடாத்தி 12 பேரை கைது செய்தனர்.

21:32, 18 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

ஈழப்புரட்சி அமைப்பு
Eelam Revolutionary Organization
சுருக்கக்குறிஈரோஸ்
தலைவர்கூட்டுத்தலைமை
பொதுச் செயலாளர்வே. பாலகுமாரன்
நிறுவனர்இ. இரத்தினசபாபதி, வே. பாலகுமாரன், சங்கர் ராஜி, பாலநடராஜ ஐயர்,அருட்பிரகாசம்
குறிக்கோளுரைநாம் ஈழவர் - நமது மொழி தமிழ் - நமது தேசம் ஈழம்
தொடக்கம்3 சனவரி 1975 (1975-01-03)
இணைந்ததுதமிழீழ விடுதலைப் புலிகள்
தலைமையகம்திருக்கோணமலை
செய்தி ஏடுதர்க்கீகம்,பொதுமை,ஈழம்,
மதியுரையகம்ஈழவர் இடர்தீர
மாணவர் அமைப்புஈழமாணவர் பொதுமன்றம்(GUES)
இளைஞர் அமைப்புமாணவர் இளைஞர் பொதுமன்றம்(GUYS)
அரசியல் பிரிவுஈழவர் சனநாயக முன்னணி
ஆய்வு பிரிவுஈழ ஆய்வு நிறுவனம்
துணை அமைப்புக்கள்ஈழ நண்பர் கழகம்
ஈழம் குடிபெயர்ந்தோர் அமைப்புச் சங்கம்
தமிழர்நல மருத்துவ அமைப்பு(MUST)
கொள்கைபொதுவுடைமை,மார்க்சியம்
அரசியல் நிலைப்பாடுஇடதுசாரி அரசியல்
தேசியக் கூட்டணிஈழ தேசிய விடுதலை முன்னணி
சர்வதேச தொடர்புபலஸ்தீன விடுதலை இயக்கம்
பண்உன்னுள் இருக்கும்! ஓங்கார மாசக்தி ஓங்கி வளரட்டும் விடுதலை தாங்கி அருளட்டும்!
இலட்சியம்மன்னார் முதல் மட்டகளப்பு வரை, பருத்திதுறை முதல் பதுளை வரை,பொத்துவில் உள்ளடங்கிய பிரதேசத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு சமத்துவ சமதர்ம ஆட்சியை ஏற்படுத்தல்
இணையதளம்
www.eros.lk

ஈரோஸ் எனும் சுருக்கப்பெயரால் பிரபல்யமாக அறியப்படும் ஈழப்புரட்சி அமைப்பு[1] (ஆங்கிலம்:Eelam Revolutionary Organisation சிங்களம்:ඊළම් විප්ලවවාදී සංවිධානය) 1975 ஆம் ஆண்டு தொடக்கம், இலங்கை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் செயற்பட்டு வரும் இடதுசாரி ஈழ இயக்கமாகும். மார்க்சிய, லெனினிச சிந்தனைகளை வழிக்காட்டியாக கொண்ட இவ் அமைப்பு பருத்திதுறை முதல் பதுளை வரை, மன்னார் முதல் மட்டகளப்பு வரை, பொத்துவில் அடங்கிய தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசத்தில் ஈழம் எனும் சமத்துவ சமதர்ம ஆட்சியை நிறுவும் நோக்குடன் 1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் அழுத்தங்களினால் அமைப்பின் செயற்பாடுகள் கலைக்கப்படும் வரை அரசியல்,இராணுவ செயற்பாடுகளில் ஈடுப்பட்டது. ஈரோஸ் அமைப்பின் செயற்பாடுகள் கலைக்கப்பட்டதுடன் அமைப்பின் சொத்துக்கள், வளங்கள் விடுதலை புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டன[2]. பெருமளவிலான உறுப்பினர்கள் வே.பாலக்குமாரின் தலைமையில் விடுதலைபுலிகளுடன் இணைந்து கொண்டனர். ஏனையவர்களில் ஒரு பிரிவினர் அமைப்பின் அரசியல் பிரிவான ஈழவர் சனநாயக முன்னணி என்ற பெயரில் தொடர்ந்தும் அரசியலில் ஈடுப்பட்டனர். மேலும் ஒரு பிரிவினர் பொது வாழ்க்கைக்கு திரும்பினர். 2009 ஆம் மே 19 ஆம் திகதி விடுதலை புலிகளின் அழிவிற்கு பிறகு ஈரோஸ் அமைப்பு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது.


வரலாறு

தோற்றமும் வளர்ச்சியும்

1975 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3ஆம் திகதி லண்டன் நகரில் இ.இரத்தினசபாபதினால் ஈரோஸ் அமைப்பு தாபிக்கப்பட்டது[3]. அமைப்பின் தாபிப்பு பணிகளில் இ.இரத்தினசபாபதியுடன் , வே. பாலகுமாரன், சங்கர் ராஜி, பாலநடராஜ ஐயர்,அருட்பிரகாசம் ஆகியோரும் பங்கெடுத்தனர்.

அரசியல் நடவடிக்கைகள்

ஆரம்பகாலகட்டத்தில் பலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட ஈரோஸ் அமைப்பு, அவ் இயக்கத்திடம் இராணுவ பயிற்சி பெற சிலரை லெனானிற்கு அனுப்பி வைத்தது.

இலங்கையில் குறிப்பிடதக்க முதல் அரசியல் நடவடிக்கையாக, 1976 ஆம் ஆண்டு வவுனியாவில் கண்ணாத்திட்டி என்ற இடத்தில் கண்ணாத்திட்டி விவசாய கூட்டுப்பண்ணை எனும் பண்ணையை ஆரம்பித்தது. இப்பண்ணையில் ஈரோஸ் அமைப்பு பின்பற்றி மார்க்சிய பொருளாதார சித்தாந்தங்களை பரீட்சித்து பார்த்தது. பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் ஆயுத பயிற்சி பெற்றவர்கள் நாடு திரும்பி, இந்த பண்ணையில் ஆயுதபயிற்சிகளை தொடர்ந்ததோடு மேலும் பலருக்கு ஆயுத பயிற்சிகளையும் வழங்கினர். இப்பண்ணையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும் ஆயுதபயிற்சி பெற்றார் [4] .1978 ஆம் இப்பண்ணையில் இலங்கை இராணுவத்தினர் சோதனை நடாத்தி 12 பேரை கைது செய்தனர்.

ஈரோஸ் அமைப்பு தமிழர் பகுதிகளில் மேலும் பல பண்ணைகளை உருவாக்கி அமைப்பு உறுப்பினர்களின் சீவனப்பாட்டை ஈடுசெய்ததுடன், அரசியல் வகுப்புக்களை நடாத்தி உறுப்பினர்களை பயிற்றுவித்தது[சான்று தேவை].

ஈரோசின் ஆய்வு பிரிவான ஈழ ஆய்வு நிறுவனம் மூலம் பல வௌியீடுகளை செய்தும், கருத்தரங்குகளை நடாத்தியும்,திட்ட பிரகடன மாநாடுகளை நாடத்தியும், அமைப்பின் பத்திரிக்கை மூலமும் அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி ஈழப்போரட்டத்தில் ஈடுப்பட்ட பிரதான இயக்கங்களில் ஒன்றாக ஈரோஸ் அமைப்பு வளர்ச்சியடைந்தது. வடக்கு, கிழக்கு, மலையகம் பிரதேசங்களில் செயற்பட்ட ஈரோஸ் அமைப்பு இப்பிரதேசங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் ஈழவர் என்று பகர்ந்ததோடு, அவர்கள் வாழும் பிரதேசம் அவர்களின் உடைமைப்பாடு என்றும்,அதனை உடைமையாக்கிட போராடுவதாகவும் அறிவித்தது.ஈழவிடுதலையானது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலையாக வென்றெடுக்கப்பட வேண்டும் என்றும், ஈழப்போராட்டத்தின் முதன்மை அணி மலையகம் வாழ் தமிழ்பேசும் தொழிலாளர்களே என்றும் ஈரோஸ் அமைப்பு அறிவித்தது. [5].

1980 களில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஈரோசின் இளைஞர் அமைப்பைச் சேர்ந்த பலர் வெளியேறி பத்மநாபா தலைமையில் ஈழபுரட்சிகர விடுதலை இயக்கத்தை அமைத்தனர்.பத்மநாபாவுடன் பிரிந்து சென்றவர்களில் டக்ளஸ் தேவாநந்தா, சுரேஸ்பிரமேந்திரன்,வரதராஜ பெருமாள் ஆகியோரும் அடங்கியிருந்தனர். இதே காலப்பகுதியில் ஈரோசின் தாபக உறுப்பினர்களில் ஒருவரான அருளரும் கருத்து முரண்பாடு காரணமாக அமைப்பிலிருந்து விலகினார்.

மலையகத்தில் அரசியல் பணிகளை மேற்கொண்ட ஈரோஸ் அமைப்பு ஹட்டன் மல்லிகைப்பு சந்தியில் அலுவலகம் ஒன்றையும் திறந்திருந்தது. 1984 ஆம் ஆண்டு மலையக மக்களின் வரலாறை எடுத்துரைக்கும் “இருபத்தோறாம் நூற்றாண்டின் நவீனஅடிமைத்தனம்” எனும் நூலை,அமைப்பின் ஆய்வு பிரிவான ஈழ ஆய்வு நிறுவனம் வெளியிட்டது[6] .

மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட நவம்பர் 15 ஐ நாடற்றவர் நாளாக ஈரோஸ் அனுஸ்டித்தது.1885 ஆம் ஆண்டு இது தொடர்பான சுவரொட்டி ஒன்று இந்தியாவிலும், மலையகத்திலும், யாழ்ப்பாணத்திலும் ஈரோஸ் அமைப்பினால் ஒட்டப்பட்டது. இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டதினால் மலையகத்தில் 60 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டார்கள்[7].

1985 ஆம் ஆண்டு ஈரோஸ் உறுப்பினர்கள் இந்தியாவில் ஆயுதபயிற்சிகளை பெற்றனர்[8]. இவ்வாறு பயிற்சி பெற்ற அணியை கொண்டு சிறிலங்கா அரசின் மீதும் அரச காவல் படை மீதும் பல கொாில்லா தாக்குதல்களை நடத்தியது.

1985 ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தைகளில் ஒரு அமைப்பாக ஈரோஸ் அமைப்பு பங்குபற்றியதுடன்<, இலங்கை வாழ் தமிழர்கள் அனைவரினதும்பிரசாவுரிமை உறுதி செய்யப்பட்டு, மலையக தமிழரை நாடற்றவராக்குவதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியது .

1989 ஆம் நடைபெற்ற பாரளுமன்ற பொதுத்தேர்தலில் சுயட்சை அணியாக போட்டியிட்ட ஈரோஸ் அமைப்பு 13 ஆசணங்களை வெற்றிக்கொண்டது. இலங்கை அரசியல் யாப்பின் ஆறாம் சீர்திருத்ததிற்கு அமைய சத்தியபிரமானம் செய்ய மறுத்த ஈரோஸ் உறுப்பினர்கள், பின்னர் சனாதிபதி பிரேமதாச உடன் இணக்கத்தின் பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியபிரமானம் செய்து அமர்வுகளில் பங்குபற்றினர். எனினும் ஈரோஸ் அமைப்பு கலைக்கப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை இராஜினமா செய்தார்கள். இத் தேர்தலில் ஈரோஸ் அமைப்பிற்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசணம் மலையகமக்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் மயில்சாமி இராமலிங்கம் என்பவருக்கு வழங்கப்பட்டது.

1989 ஆம் ஈரோஸ் அமைப்பு ஈழவர் சனநாயக முன்னணி என்ற பெயரில் அரசியல் கட்சியை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்தது. 1989 ஆம் ஆண்டு தேர்தலில் சுயட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் ஈழவர் சனநாயக முன்னணி என்ற பெயரில் செயற்பட்டனர்.

1990 ஆம் ஆண்டு மே மாதம் அமைப்பு கலைக்கப்படுவதாகவும், ஆயுதங்களும் சொத்துக்களும் புலிகளுடன் ஒப்படைக்கப்படுவதாகவும், அமைப்பின் உறுப்பினர்கள் சுயாதீனமாக முடிவெடுக்கலாம் எனவும் பொது செயலாளர் பாலக்குமார் யாழ்ப்பாணத்தில் ஊடக மாநாட்டை நாடத்தி அறிவித்தார். அறிவித்தலை தொடர்ந்து பெரும்பாலானவர்கள் பாலக்குமார் தலைமையில் புலிகளுடன் இணைந்தார்கள். ஏனையவர்களில் சிலர் உள்ளுரிலும், வெளிநாடுகளிலும் குடும்ப வாழ்க்கைக்கு திரும்பினார்கள். இன்னுமொரு சிறிய பிரிவினர் பதிவு இரத்து செய்யப்படாதிருந்த ஈழவர் சனநாயக முன்னணியின் பெயரில் கொழும்பிலிருந்து செயற்பட்டனர்.

2009 ஆம் ஆண்டுக்கு பின் குடும்பவாழ்விற்கு திரும்பியிருந்த உறுப்பினர்களும், புலிகளுடன் சேர்ந்திருந்து இயங்கிய உறுப்பினர்களும், ஈழவர் சனநாயக முன்னணியாக இயங்கிய உறுப்பினர்களும் இணைந்து ஈரோஸ் அமைப்பை மீள கட்டியெழுப்பி வருகின்றனர்.

வெளீயீடுகள்

  • தர்க்கீகம் - ஈரோஸ் அமைப்பின் தத்துவார்த்த பத்திரிக்கையாக இதழ் 1986 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டது.
  • ஈழம் - ஈரோஸ் அமைப்பின் பிரச்சார சஞ்சிகையாக வெளிவந்தது.
  • பொதுமை இதழ் இந்தியாவிலிருந்து ஈரோசின் இதழாக வெளிவந்தது.
  • பாலம் ஈரோசின் துணை அமைப்பான ஈழ நட்புறவுக்கழகத்தினால் வெளியிடப்பட்டது.
  • மாணவர்குரல் - ஈரோசின் மாணவர் அமைப்பினால் வெளியிடப்பட்டது.
  • நாங்கள், GUYS Magazine - ஈரோசின் இளைஞர் அமைப்பினால் வெளியிடப்பட்டது.
  • ஈரோசின் ஆய்வு பிரிவு ஈழவர் இடர்தீர, யாவரும் கேளீரென, லங்காராணி,ஈழவராய் இணைவோம், இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்,ஈழவர் இன்னல் உருபெற்ற விதம் ஆகிய நூல்களை வெளியிட்டது.

இராணுவ நடவடிக்கைகள்

ஈரோசின் கெரில்லா பாணியிலான தொடர்ச்சியானதாகவும் தொடரானதாகவும் அமைந்த ஈரோசின் கெரில்லா பாணியிலான இராணுவ தாக்குதல்கள் தொடர்ச்சியானதாகவும் தொடரானதாகவும் அமைந்தன. தெற்கில் உள்ள பொருளாதார கேந்திர நிலையங்களை நாசகார வேலை மூலம் ஸ்தம்பிதம் அடையச் செய்தல், அத்துடன் கிழக்கில் சில கெரில்லாத் தாக்குதல போன்ற நடவடிக்கைகளே ஈரோசின் முனைப்பு பெற்ற இராணுவ நடவடிக்கைகளாக இருந்தன. ஈரோஸ் கிழக்கிலும் தெற்கிலும் இராணுவ தாக்குதல்களை நடத்தியது. தெற்கில் உள்ள பொருளாதார கேந்திர நிலையங்களை நாசகார வேலை மூலம் ஸ்தம்பிதம் அடையச் செய்தல், அத்துடன் கிழக்கில் சில கெரில்லாத் தாக்குதல போன்ற நடவடிக்கைகளே ஈரோசின் முனைப்பு பெற்ற இராணுவ நடவடிக்கைகளாக இருந்தன.


  • 1984 ஜீன் மாதம் 28 ஆம் திகதி ஹோட்டல் ஒப்ரோயில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது
  • 1984 ஐப்பசி மாதம் 84 இல் கோட்டை புகையிரத நிலையத்திலும், அதையடுத்து பஸ்தரிப்பு நிலையம், வானொலி நிலையம், தொலைக்காட்சி நிலையம், வீடமைப்பு காரியாலயம் போன்ற இடங்களில் தொடர்ந்து குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
  • 1984 ஐப்பசி மாதம் கொழும்பு துறைமுகத்திலும், சப்புகஸ்கந்த எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையத்திலும் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது.
  • 1986 ஆம் ஆண்டு பங்குனி 18ஆம் திகதி சிலோன் ஒக்சிசன் கொம்பனி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
  • 1986 ஆம் ஆண்டு,தலைமன்னாரில் நடத்தப்பட்ட நிலக்கண்ணி வெடித்தாக்குதலில் ஒரு பொலிஸ் மேலதிகாரியுடன், ஒரு பொலிஸ்கான்ஸ்டபிலும் ஒரு பிரசையும் பலியானார்கள்.
  • 1986 ஆம் ஆண்டு சித்திரை 25 ஆம் திகதி அநுராதபுரத்தில் உள்ள அரச கூட்டடுத்தாபனத்திற்கு சொந்தமான எண்ணெய்க் குதங்கள் 9 மீது குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.
  • 1986 மே மாதம் 3ம் திகதி கட்டுநாயக்கா விமான நிலையத்தில் ஏயர்லங்கா விமானத்தில் 50 கிலோ வெடிமருந்து வெடிக்க செய்யப்பட்டு விமானம் இரண்டாகப் தகர்க்கப்பட்டது. இந்த தாக்குதலில் ஐரோப்பாவை சேர்ந்த அப்பாவி சுற்றுலா பயணிகள் 16 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1986 மே 4ம் திகதி மத்திய தாபாற் கந்தோரில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
  • 1986 மே 5ம் கிழக்குப் பகுதியில் திருகோணமலையில் உள்ள பன்னாட்டு கூட்டு சீமேந்து தொழிற்சாலையில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.
  • 1986 மே மாதம் 30 ஆம் திகதி சிறிலங்கா தரைப்படை, ஆகாயப்படை தலைமைக் காரியாலயத்தில் இருந்து 200 மீற்றர் தொலைவிலும், சனாதிபதி மாளிகையில் இருந்து 2 கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்திருந்த குளிர்சாதன தொழிற்சாலை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
  • 1986 மே மாதம் 30 ஆம் திகதி திருக்கோணமலை மூதூருக்கு அருகாமையில் பாலந்தோப்பூர் என்ற இடத்தில் பதித்து வைக்கப்பட்ட கண்ணி வெடியில் இ.போ.ச பஸ்சில் பிரயாணம் செய்த 30 இராணுவத்தினர் மரணமடைந்தார்கள்.
  • 1986 மே 31ம் திகதி மட்டகளப்பு – உதயதேவிவ புகையிரதம் மீது வியாங்கொடைக்கு அருகாமையில் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட மூன்று பெட்டிகள் சேதமாக்கப்பட்டன.

இந்திய அமைதிப்படைக்காலம்

பாரளுமன்ற தேர்தல் பிரவேசம்

செயற்பாடுகள் கலைக்கபபடல்

1990 இற்கு பின்

2009 இற்கு பின்

அமைப்பு கட்டமைப்பு

கொள்கைகள்

அமைப்பு மீதான விமர்சனங்கள்

ஈரோஸ் மாவீரர்கள்

குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள்


மேற்கோள்கள்

  1. "இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்". pp. 9. http://noolaham.net/project/142/14116/14116.pdf. பார்த்த நாள்: 06 January 2016. 
  2. "1990-08-16 பத்திரிக்கை செய்திகள்". http://padippakam.com/document/general/Notes/1039.pdf. பார்த்த நாள்: 06 January 2016. 
  3. "ஈழவர் இடர்தீர - ஈரோஸ் அமைப்பின் கொள்கை விளக்க நூல்". http://padippakam.com/document/eros/books/elavaredr.pdf. பார்த்த நாள்: 06 January 2016. 
  4. "Pirapaharan, Chapter 8-First Military Operation". தமிழ்சங்கம் இணையம். http://www.sangam.org/Sabaratnam/PirapaharanChap8.htm. பார்த்த நாள்: 2016-01-07. 
  5. "ஈழவர் இடர்தீர - ஈரோஸ் அமைப்பின் கொள்கை விளக்க நூல்". http://padippakam.com/document/eros/books/elavaredr.pdf. பார்த்த நாள்: 06 January 2016. 
  6. "இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்". http://noolaham.net/project/142/14116/14116.pdf. பார்த்த நாள்: 06 January 2016. 
  7. "மக்கள் மறுவாழ்வு 1985 டிசம்பர் - மார்கழி வெளியீடு மலர் 4 இதழ் 3". pp. 2. http://noolaham.net/project/71/7048/7048.pdf. பார்த்த நாள்: 06 January 2016. 
  8. "Pirapaharan, Chapter 31 - First Military Operation". தமிழ்சங்கம் இணையம். http://www.sangam.org/articles/view2/?uid=819. பார்த்த நாள்: 2016-01-07. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈழப்_புரட்சி_அமைப்பு&oldid=2761379" இலிருந்து மீள்விக்கப்பட்டது